Monday 20th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

வீண் பகை தீர்க்கும் சோளிங்கர் ஸ்ரீயோக நரசிம்மர்

நிரஞ்சனா

சோழங்கிபுரம் ஸ்ரீயோகநரசிம்மர் ஆலயம் இருக்கும் பகுதி, இன்று சோளிங்கர் என்ற பெயருடன் விளங்குகிறது. வடஆற்காடு மாவட்டத்தில் திருத்தணிகைக்கு மேற்கே இருபது மைல் தூரத்திலே சுமார் நானூறு அடி உயரமுள்ள ஒரு மலைமேல் இருக்கிறது இந்த ஆலயம்.

மலையின் வளர்ச்சி கண்டு இந்திரன் திகைத்தன்

ஸ்ரீயோகநரசிம்மர் ஆலயம் உருவானதற்கு முன்பு இந்த மலைக்கு வந்த பைரவேசுவரரிடம், “நான் கல் மலையாக இருப்பதில் என்ன பெருமை.? எனக்கு நல்வழி காட்டுங்கள்” என்று மலை வேண்டியது. “மலையே.. நீ உயர்ந்து கொண்டே வா. இங்கு எல்லா வல்லமை படைத்த இருவர் வரப் போகிறார்கள். அதனால் நீ அவர்கள் பெருமைப்படும் அளவில் வளர்ந்துவா.” என்று மலைக்கு கட்டளையிட்டார். அதன்படி மலையும் வளர்ந்து கொண்டே வந்தது. அதன் வளர்ச்சி தேவலோகத்தையே முட்டிவிடும் போல் இருந்தது. இதை கண்ட இந்திரன் பயந்து பலராமனை கொண்டு மலையின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தினார்.

கோயில் உருவான கதை

வடமதுரையை ஆட்சி செய்து கொண்டு இருந்த இந்திரத்துய்மன் என்ற அரசர், கடுமையான கோபம் கொண்டவர். எதற்கு எடுத்தாலும் இவருடைய வாய் பேசாது, அவர் கையில் இருக்கும் போர்வாள் தான் பேசும். இப்படி சினம் கொண்ட அரசர் ஸ்ரீநரசிம்மரின் தீவிர பக்தர்.

“அரசர் இந்திரத்துய்மன், நரசிம்மரை மட்டும் வணங்குவதால்தான் நரசிம்மரை போல் கோபம் அதிகம் ஏற்படுகிறது. அதனால் அரசரை ஸ்ரீயோக நரசிம்மரை வணங்க சொல்லலாம்.” என்று அமைச்சர்களுக்குள் பேசி அதை பக்குவமாக அரசருக்கு எடுத்து சொல்ல ஒரு அமைச்சர் மன்னரிடம் சென்றார்.

“அரசே.. நரசிம்மரை வணங்கினால் வீரம் கிடைக்கும். அதுவே ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கினால் செல்வம், செல்வாக்கு கிடைக்கும். வாழ்க்கைக்கு தேவையானது முக்கியமானது சந்தோஷம். அந்த சந்தோஷத்தை தரக் கூடியவர் ஸ்ரீயோக நரசிம்மர்” என்றார் அமைச்சர். எறும்பு ஊற ஊற கல்லும் தேயும் என்பதை போல் அமைச்சரின் பேச்சு அரசருக்கு ஸ்ரீயோக நரசிம்மரை வணங்க வேண்டும் என்ற மன மாற்றத்தை தந்தது. ஸ்ரீயோகநரசிம்மரை வணங்க தொடங்கினார் இந்திரத்துய்மன்.

ஒருநாள், அரசர் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றார். மான் ஒன்று, பொன்னை போன்று ஜொலித்தது. அதை கண்ட அரசர், அந்த மானை தன் அரண்மனைக்கு அழைத்து செல்ல விரும்பி, மானை பிடிக்க நினைத்தார். ஆனால் அந்த மானை பிடிக்க முடியவில்லை. பொன்மான், மன்னருக்கு விளையாட்டு காட்டியது. இதனால் சோர்வடைந்த மன்னர், ஒர் இடத்தில் களைப்பாக அமர்ந்தார். அப்போது அங்கே ஒரு அதிசயம் நடந்தது.

அந்த பொன்மான், மன்னர் கண் முன்னே ஒரு ஜோதியாக மாறியது. இதை கண்ட அரசர் இந்திரத்துய்மன் ஆச்சரியப்பட்டார். அந்த ஜோதி ஸ்ரீஆஞ்சநேயனாக காட்சிகொடுத்து. “நான் என்றும் உனக்கு பாதுகாப்பாக இருப்பேன்.” என்று கூறி மறைந்தார் ஸ்ரீஅனுமன்.

தமக்கு ஸ்ரீஅஞ்சனேயர் ஆசி கிடைத்திருக்கிறது என்றால் எல்லாம் ஸ்ரீயோக நரசிம்மரின் அருளால்தான் என்று ஆனந்தம் கொண்டார் அரசர்.  சில நாட்கள் சென்றது. அப்போது கும்போதரன் என்ற அசுரன்,  வடமதுரையை ஆட்டிபடைத்தான். அந்த அசுரனிடம் இருந்து தன்னையும் தன் நாட்டையும் காப்பாற்றமாறு ஸ்ரீயோக நரசிம்மரிடமும், ஸ்ரீஆஞ்சனேயரிடமும் வேண்டினார் அரசர் இந்திரத்துய்மன். ஸ்ரீஅனுமன், அரசரின் வேண்டுதலை நிறைவேற்ற, அசுரன் கும்போதரனிடம் போர் செய்து அவனை வீழ்த்தி கொன்றார். இதனால் அரசர் மகிழ்ந்து, ஸ்ரீஅனுமனுக்கு அதே இடத்தில் கோயில் கட்டினார். இந்த மலைக்கு சக்தி வாய்ந்த இருவர் வருவார்கள் என்றாரே பைரவேஸ்வரர், அதன்படி ஸ்ரீயோக நரசிம்மரும், ஸ்ரீஆஞ்சனேயரும் அந்த மலை கோயிலில் இருக்கிறார்கள். ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கிய பிறகு ஸ்ரீஆஞ்சனேயரை வணங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.  

இந்த சோழங்கிபுரம் அன்று கடிகாசலம் என்ற பெயரோடு விளங்கியிருக்கிறது. விஸ்வாமித்திரர் இம்மலையில் ஒரு கடிகை அதாவது  ஒருநாழிகை (24 நிமிடம்) நேரத்தில் ஸ்ரீநரசிம்மரை நோக்கி துதித்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார்  

கடிகை என்றால் வடமொழியில் ஒருநாழிகை என்ற பொருள். இந்த ஆலயத்தில் ஒருநாழிகை நேரம் இருந்தாலே எல்லா கஷ்டகாலமும் விலகும் என்கிறார்கள். சப்த ரிஷிகளும், வாமதேவர் என்ற முனிவரும், திருமங்கை ஆழ்வாரும் இந்த ஆலயத்திற்கு வந்து ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கியுள்ளனர்.

பேய் பிடித்ததாக நம்பப்படுகிறவர்களையும் சித்த பிரமை பிடித்தவர்களையும் இங்கே அழைத்துவந்து, மலையின் மேலே உள்ள அனுமந்த தீர்த்தத்தில் மூழ்கி எழச் செய்து, அனுமார் சந்நிதியில் அமரவைத்தால், கொஞ்ச நேரம் ஆட்டம் போட்டாலும் பிறகு அவர்களுக்கு தூக்கம் வந்து தூங்கி விடுவார்கள். தூக்கம் கலைந்து கண் திறந்த பிறகு அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் குணம் அடைகிறார்கள் என்பது இங்குள்ள நம்பிக்கை.

ஸ்ரீயோக நரசிம்மரும், ஸ்ரீஆஞ்சநேயரும் பக்தர்களின் நோய்களையும், வீண் பகைகளையும் தீர்த்து நிம்மதி அருளி சிறப்பாக வாழ வைக்கிறார்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO      

2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்   

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும்  

வாஸ்து கட்டுரை படிக்கவும்  

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்  

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

For Astrology consultation Click Here

© 2012  bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on May 5 2012. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பெருமாள் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech