Friday 29th March 2024

தலைப்புச் செய்தி :

நன்மைகளை அள்ளி தரும் அஷ்டாக்ஷர மந்திரம்

Written by Niranjana niranjana

முன்ஜென்மத்தில் ஒருவர் செய்த செய்த நன்மையும், தீமையும்தான் இந்த பிறவியில் அந்த மனிதனுக்கு அதிர்ஷ்டத்தையோ, தரித்திரத்தையோ தருகிறது என்கிறது இந்து சமயம். நாம் செய்யும் நன்மையும் தீமையும்தான் நிழல் போல் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து வரும்.  இதில் சிலருக்கு நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் உண்மை இதுதான்.

இப்போது நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் வாழ்க்கை நிலை முன்ஜென்மத்தில் செய்த நல்லது கெட்டதின் பலனாக இந்த பிறவியில் அனுபவித்து வருகிறோம்.

அடங்காத மனைவியாக இருந்து பேய்யாக மாறினாள் கலகை என்பவள். அஷ்டாக்ஷர மந்திரமான “ஓம் நமோ நாராயணாய” என்கிற மகிமையால் ஸ்ரீமந் நாராயணணின் ஆசியை பெற்றாள்.  மறுபிறவியில் அவள் கைகேயியாக பிறந்தாள்.

தர்மாங்கதர் என்ற முனிவர், மறுபிறவியில் தசரத சக்கரவர்த்தியாக பிறந்ததற்கு கலகை காரணமாக இருந்தாள். அது எப்படி என்பதை பற்றியும்  அஷ்டாக்ஷர மந்திரத்தின் மகிமையை பற்றியும் தெரிந்துக்கொள்வோம்.

அடங்காத மனைவி

கங்கை கரையில் தர்மாங்கதர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் எப்போதும் உச்சரிக்கும் மந்திரம் “ஓம் நமோ நாராயணாய“ என்பதாகும்.

அதே ஊரிலே சாந்தசீலர் என்பவர் வசித்து வந்தார். பெயருக்கு ஏற்றார்greensite போல சாந்த குணம் படைத்தவராக திகழ்ந்தார்.  இவருடைய மனைவி பெயர் கலகை. கணவர் எது சொன்னாலும் அதற்கு மாறாகவே செய்வது அவள் வழக்கம். சமையல் செய் என்றால் சமைக்க மாட்டாள். சமைக்காதே என்றால் சமைப்பாள். செய்யாதே என்றாள் அதை செய்வாள். இதை செய் என்றாள் அதை செய்ய மாட்டாள்.

எப்போதும் கணவரின் கருத்துக்கும் எண்ணங்களுக்கும் எதிராகவே செய்து வந்தாள். அவளின் குணத்தை புரிந்து கொண்ட சாந்தசீலர், “நாளை வெள்ளிகிழமை. அதனால் வீட்டை இன்று பெருக்காதே, துடைக்காதே என்று சொன்னார். அப்படி சொன்னால்தான் அவள் இன்று வீட்டை பெருக்கி சுத்தமாக வைப்பாள் என்பது அவர் எண்ணம்.

சாந்தசீலர் நினைத்தபடி, “இன்று வீட்டை பெருக்காதே என்று எப்படி சொல்லலாம்? நான் இன்றுதான் வீட்டை பெருக்குவேன்.” என்று கூறி, வீட்டை சுத்தமாக பெருக்கி துடைத்து வைத்தாள். இப்படியே தலைகீழாக சொல்லியே தன் மனைவியிடம். வேலை வாங்குவார் சாந்தசீலர்.

ஒருநாள் சாந்தசீலர், “நாளை என் தந்தைக்கு திதி தர வேண்டும். அதனால் நாளை என் தந்தைக்கு பிடித்த உணவை சமைக்காதே, வீட்டை துடைக்காதே. பூஜை சாமான்களை எடுத்து வைக்காதே.” என்று கூறினார்.

அதற்கு அவள் தன் குணத்துக்கு ஏற்ப, கணவர் எதையெல்லாம் செய்யாதே என்று சொன்னாரோ அதையெல்லாம் செய்தாள். சாந்தசீலர் மறுநாள் தன் தந்தைக்கு சிறப்பாக திதி தந்து வழிபாடு செய்தார்.

பிறகு, பிண்ட பிரசாதத்தை அழுக்கான தண்ணீரில் போட்டு விடு என்று சொன்னால்தான் அவள் சுத்தமான தண்ணீரில் போடுவாள் என்பதை மறந்து தன் மனைவியிடம், “இந்த பிண்ட பிரசாதத்தை நல்ல சுத்தமான தண்ணீரில் கொட்டி விடு.” என்றார் சாந்தசீலர்.

கலகைதான் ஏறுக்கு மாறாக செய்வாளே, அதனால் அசுத்தமான தண்ணீரில் பிண்ட பிரசாதத்தை கொட்டி விடுகிறாள்.

இதை கண்ட சாBhakthi Planetந்தசீலர் கடும் கோபம் அடைந்து, “நீ பல பாவங்களை செய்து வந்தாலும்  அவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டேன். ஆனால் பித்ருக்கு படைத்த பிண்டத்தை இப்படியா அசுத்தமான நீரில் போடுவது.? மனித தன்மையே இல்லாத நீ பேயாக போ.” என்று சபித்துவிடுகிறார்.

இதனால் கலகை பேயாக மாறினாள்.

பேயாக மாறிய பிறகு பல துன்பங்களுக்கு ஆளானாள் கலகை.

விமோசனம் தந்த முனிவர்

பேயாக சுற்றி திரிந்த கலகைக்கு ஒருநாள் தண்ணீர் தாகம் எடுத்தது. தண்ணீர் எங்கே கிடைக்கும்?, உணவும் எங்கே கிடைக்கும்? என்று அவளால் யாரிடமும் கேட்க முடியவில்லை. “இந்த பேய் உருவத்தில் இருப்பதால்தானே இத்தனை கஷ்டங்களும். அதனால் நாம் ஒரு மனிதனின் உடலுக்குள் புகுந்துக்கொண்டால், நாம் நினைப்பதுபோல் அனைத்தும் நடக்கும்” என்ற எண்ணத்தில்  முனிவரான தர்மாங்கதரின் உடலுக்குள் நுழைய நெருங்கினாள்.

இதை உணர்ந்துக்கொண்ட முனிவர் தர்மாங்கதர், தன் அருகில் இருந்த கமண்டலத்தில் இருந்து புனித நீர் எடுத்து தன்னை நெருங்கி வந்த பேய் மீது, “ஓம் நமோ நாராயணாய” என்று கூறிக்கொண்டே தெளித்தார்.

முனிவரின் புண்ணியத்தினால் பேய் உருவ சாபம் நீங்கிய கலகை பெண் உருவத்தை அடைந்தாள். தன் கதையை சொல்லி அழுதாள்.

அவளுக்காக பரிதாப்பட்ட முனிவர், “என் தவத்தின் பாதி பலனை உனக்கு தருகிறேன்” என்று முனிவர் கூறிய அடுத்த விநாடியே, வைகுண்டத்தில் இருந்து  பொன் விமானம் வந்து இருவரையும் அழைத்துக்கொண்டு வைகுண்டத்திற்கு சென்றது.

ஸ்ரீமந் நாராயணன் தரிசனம்

வைகுண்டத்தில் முனிவரும் கலகையும் ஸ்ரீமந் நாராயணனைManamakkal Malai தரிசித்தார்கள்.

“கெட்ட உள்ளம் படைத்தவர்களையும் நல்லவர்களாக மாற்றிய உன் அன்புள்ளம் எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் நீ பூலோகத்தில் தசரத சக்கரவர்த்தியாக பிறப்பாய். நான் உனக்கு மகனாக  பிறந்து, “இராமன்” என அழைக்கப்படுவேன். உன் தவத்தின் புண்ணிய பலனில் பாதியை பெற்ற கலகை, கேகய நாட்டின் அசுவபதி என்ற அரசருக்கு மகளாக பிறந்து  கைகேயி என்று அழைக்கப்படுவாள். என்றென்றும் உங்கள் பெயர் பூலோகத்தில் நிலைத்து இருக்கும்.” என்றார் ஸ்ரீமந் நாராயணன்.

“ஒம் நமோ நாராயணாய” என்ற இந்த மந்திரத்தால் இவர்களுக்கு கிடைத்ததோ அரச வாழ்வு. நீங்காத புகழ். இதுவே இந்த அஷ்டாக்ஷர மந்திரத்தின் மகிமை.

நாமும் தினமும் இந்த அஷ்டாக்ஷர மந்திரமான, “ ஓம் நமோ நாராயணாய” என்று மந்திரத்தை உச்சரித்து வந்தாலே நம்மை எந்த துஷ்ட சக்தியும் அண்டாது. தெரியாமல் செய்த பாவமும் விலகும். பெருமாளின் அன்பை பெற்று, வளங்கள் யாவும் இந்த பிறவியில் மட்டுமின்றி எந்த பிறவியிலும் பெற உயர்ந்த மந்திரம்,  “ஒம் நமோ நாராயணாய.!”

2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here 

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE

இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்

Guru Peyarchi Palan 2014-2015  CLICK HERE

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2014 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Dec 22 2014. Filed under Headlines, ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், பெருமாள் கோயில், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech