திருவண்ணாமலை:நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் உச்சக்கட்ட திருவிழாவான கார்த்திகை மகா தீபத் திருவிழா நாளை நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையில் மகாதீபம் ஏற்றப்படும். மலையில் மகா தீபம் ஏற்றும் போது, அண்ணாமலையார் கோயிலில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச […]
ரஜினியின் கோச்சடையான் படம் ஜனவரி 10–ந்தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். தீபிகா படுகோனே நாயகியாக நடித்துள்ளார். சரத்குமார், நாசர், ஆதி, ஷோபனா போன்றோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கி உள்ளார். இப்படத்தின் பாடல்கள் ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12–ந்தேதி வெளியிடப்படுகிறது. பொங்கலுக்கு விஜய்யின் ‘ஜில்லா’, அஜீத்தின் ‘வீரம்’ படங்கள் ரிலீசாகும் என ஏற்கெனவே […]
டெக்சாஸ்: அமெரிக்காவில் ஒருவர் தனது வீட்டை ரூ.1.5 கோடி செலவு செய்து வெள்ளை மாளிகை போல் மாற்றியுள்ளார். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் லாங்வியூ என்ற இடத்தைச் சேர்ந்தவர் ரோன் வாடோ (63). இவருக்கு லாரா (36) என்ற மனைவியும், வாலன்டினா (16), லாரா (10) என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக தனது வீட்டில் ரூ.1.5 கோடி செலவு செய்து ஒரு குட்டி வெள்ளை மாளிகை போல் மாற்றியுள்ளார். […]
இணைய உலகைக் கலக்கிவரும் கூகுள் நிறுவனமாது இலத்திரனியல் துறையில் பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக தற்போது ஓட்டுநர் இல்லாத கார்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் இயக்கக்கூடிய இந்தக் காரில் 2 பேர் பயணிக்கக்கூடியதாக இருப்பதுடன் இதன் சோதனை முயற்சி ஒன்று அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை இக்காரானது 2015 ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் […]
அயர்லாந்தில் பிறந்து பிரிட்டனில் வசித்த பிரபல ஓவியர் வரைந்த ஓவியம் சுமார் 900 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பிரபல ஓவியர் பிரன்சிஸ் பேகான் அவரது நண்பர் லுகியன் பிராய்டை 1969 ஆம் ஆண்டு மூன்று கோணங்களில் படம் வரைந்தார். மூன்று கோணங்களில் வரையப்பட்ட இந்த ஓவியம் ஓவியர் பேகானின் தலைச்சிறந்த ஓவியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஓவியம் ஏலம் விடுவதற்காக நியூயார்க் ஏல மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதிகபட்சமாக 85 மில்லியன் டாலருக்கு விற்கும் என்று […]
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வாண்கடே மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டி சச்சினின் 200வது டெஸ்ட் போட்டியாகும். மேலும் இந்த போட்டியுடன் சச்சின் ஓய்வு பெறவுள்ளதால் அவரது ஆட்டத்தை காண ரசிகர்களிடையே பெரும் ஆவல் எழுந்துள்ளது. டாஸ் வென்ற இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் ஆட தொடங்கியது . கெய்ல் 11 ரன்களுடனும், பிரவோ […]
சென்னை தி.நகர் வடக்கு போக் சாலையில் ‘டான் ஸ்டுடியோ’ எனும் பெயரில் புதிதாக ஒரு எடிட்டிங், டப்பிங் மற்றும் ரெக்கார்டிங் தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது. ‘ஆர்.ஜி.பி’ (RGB) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிரைமரி வர்ணங்களை எண்ணத்தில் கொண்டு ரெட் சூட், கிரீன் சூட், ப்ளூ சூட் என மூன்று பிரதான வண்ணங்களில் அழகு மிளிரும் இந்த ‘டான் ஸ்டுடியோ’வுக்குள் மூன்று பிரமாண்ட எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.. ‘டான் ஸ்டுடியோ’வின் உள் அமைந்த இந்த மூன்று […]
உலக செஸ் சாப்பியன் சிப் போட்டியின் 4 வது சுற்றும் ட்ராவில் முடிந்தது. நேற்று நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் சிப் போட்டியும் ட்ராவில் முடிந்தது . போட்டியாளர்கள் இருவரும் தத்தம் 2 புள்ளிகள் எடுத்துள்ளனர். சென்னையில் தற்போது உலக செஸ் சாம்பியன் சிப் போட்டி நடந்து வருகிறது . இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆன்ந்தும் நார்வே நாட்டிலிருந்து வந்திருக்கும் மாக்னஸ் கார்ல்சென்னும் செஸ் போட்டியில் களம் இறங்கியுள்ளனர் . இந்த நான்காம் சுற்றில் ஆனந்த் வெள்ளைக் […]

விளையாட்டு துறையை மேம்படுத்தும் பொருட்டு 4 கோடி மதிப்பிலான கட்டிடங்களை திறந்துவைத்த தமிழக முதலமைச்சர் 10 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் 16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஸ்குவாஷ் ஆடுகளம், திருவண்ணாமலையில் 57 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கூடைப்பந்து விளையாட்டு அரங்கு,,, ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். அரியலூரில் நீச்சல் குளம், கரூரில் விளையாட்டு வளாகம், கடலூர் மற்றும் திண்டுக்கல்லில் விடுதிகள் என,, 4 கோடியே 64 லட்சம் மதிப்பிலான […]

பொதுவாக அலார கடிகாரம் ஒருவரை தூக்கத்தில் இருந்து எழுப்புவதற்கு மட்டுமே பயன்படும். ஆனால் அமெரிக்காவில் ஒரு புதுமையான அலாரம் கடிகாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரம்தான் உண்மையான விழிப்பை ஏற்படுத்தும் அலாரம் என்றும் கூறப்படுகிறது. அப்படி என்ன கூறும் என்றால்? உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது; எவ்வளவு பேர் உங்களை தொடர்ந்து தெரிந்து வைத்திருக்கிறார்கள்; இன்னும் எவ்வளவு நாளைக்கு நீங்கள் உயிர் வாழ்வீர்கள்; என்ற தகவல்களை தெரிவிக்கும். அதோடு சமூக வலைதளங்களில் உள்ள தகவல்கள், உங்களது […]