Thursday 30th April 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: கதம்பம்

சிங்கப்பூர் கலவரம்: மேலும் 5 தமிழர்கள் மீது கோர்ட்டில் குற்றச்சாட்டு

சிங்கப்பூர், டிச. 12– சிங்கப்பூரில் நடந்த பஸ் விபத்தில் புதுக்கோட்டை சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த குமாரவேல் பலியானார். இதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் கலவரம் ஏற்பட்டு போலீஸ் வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டது. பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது. இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாக தமிழர்களை சிங்கப்பூர் போலீசார் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வருகிறார்கள். இதுவரை 27 தமிழர்கள் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் இன்று மேலும் 5 தமிழர்கள் மீது […]

அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்: கலெக்டர்கள் மாநாட்டில் ஜெயலலிதா பேச்சு

சென்னை, டிச. 12– சென்னை தலைமை செயலகத்தில் கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், ‘‘தமிழகத்தில் சாதி, மத மோதல்களை தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்தார். இரண்டாம் நாளான இன்று (வியாழக்கிழமை) மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடந்தது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா அதில் பங்கேற்று பேசியதாவது:– தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை பராமரிப்பது குறித்து நேற்று நாம் […]

வடபழனியில் மூலிகை உணவகம் – சித்த ஆயுர்வேத மருத்துவமனை: சைதை துரைசாமி நாளை திறந்து வைக்கிறார்

சென்னை, டிச. 12– வடபழனி 100 அடி ரோடு லோகநாதன் நகர் 1–வது தெருவில் நாவல் மூலிகை உணவகம் மற்றும் சித்த ஆயுர் வேத மருத்துவமனை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் மேயர் சைதை துரைசாமி, கோகுல இந்திரா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு நாவல் மூலிகை உணவகம் மற்றும் சித்த ஆயுர்வேத மருத்துவமனையை திறந்து வைக்கிறார்கள். முதல் விற்பனையை சென்னை அரசு பொது மருத்துவமனை […]

செவ்வாய் கிரக பயணத்துக்கு 20,000 இந்தியர்கள் விண்ணப்பம்

செவ்வாய் கிரகத்துக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக தங்குவதற்கான பயணத்துக்கு, இந்தியர்கள் 20,000 பேர் உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 2,02,586 பேர் விண்ணப்பித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாகத் தங்குவதற்கான “ஒரு வழிப் பயணம்’ ஒன்றை “மார்ஸ் ஒன்’ என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயணத்துக்காக 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார் 2 லட்சம் விண்ணப்பங்கள் அந்த தனியார் நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மொத்த விண்ணப்பத்தில் 24 சதவீதம் அமெரிக்காவில் […]

நோக்கியாவின் சென்னை தொழிற்சாலையை மைக்ரோசாப்ட்டிற்கு விற்கலாம்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி, டிச.12- வரி ஏய்ப்பு செய்ததாக கூறி சென்னையிலுள்ள நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன் தயாரிப்பு தொழிற்சாலையை வருமான வரித்துறையினர் கடந்த செப்டம்பர் மாதம் சீல் வைத்தனர். இந்நிலையில் இந்நிறுவனம் தனது மொபைல் போன் தொழிலை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் 42,500 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையை விற்பதற்கு முன் இந்திய அரசுக்கு செலுத்தவேண்டிய 21,000 கோடி வரியை செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து அந்நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் […]

லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா

சூர்யாவின் அடுத்த படத்தை லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்து இயக்கவிருக்கிறார் என்கிற செய்தி தற்போது உறுதியாகியுள்ளது. கடந்த வாரம் சென்னையில் இதற்கான போட்டோ ஷூட் நடந்தது. இன்னமும் பெயரிடப்படாத இப்படத்தில் சூர்யா தாடி வைத்தபடி நடிக்கவிருக்கிறார். படப்பிடிப்பு அடுத்தா மாதம் மும்பையில் துவங்க இருக்கிறதாம். அதற்கு அடுத்த ஷெட்யூல் ஹைதாராபாத்தில் நடக்க இருக்கிறதாம். படத்தில் சூர்யாவின் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மற்றும் இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட […]

ஜனாதிபதியின் சமையல்காரர்

அமெரிக்காவில் வெளியாகியிருக்கிறது ‘தி பட்லர்’ என்கிற ஹாலிவுட் திரைப்படம். யூஜின் ஆலன் என்கிற அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜனாதிபதிகளின் சமையல்காரராயிருந்த சமையல்காரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம். 1952லிருந்து 1986 வரை வெள்ளை மாளிகையில் சமையல்காரராக பணியாற்றும் சிசில் என்கிற சமையல்காரப் பாத்திரமாக கதை விரிகிறது. இந்த சமையல்காரர் தனது வாழ்நாளில் பல முக்கிய ஜனாதிபதிகளுக்கு சமையல் பரிமாறுகிறார். வரலாற்றில் அமெரிக்கா எடுத்த பல முக்கிய முடிவுகளை அவர் தனது கண்களால் […]

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் புயலாக மாறியது

சென்னை, டிச. 7- வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்ககடலில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி அதே இடத்தில் நிலை கொண்டு இருந்தது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்தது. என்றாலும் மேல் […]

ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் ரூ.26 பிடித்தம்

பாதுகாப்பு செலவை சரிகட்ட வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் ரூ.26 பிடித்தம் செய்யப்படும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன. பெங்களூரில் சமீபத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக் கொண்டிருந்த வங்கி பெண் அதிகாரி சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். இதையடுத்து ஏ.டி.எம்.களில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்பட பல மாநிலங்கள், ஏ.எம்.டி.களில் பாதுகாப்பை செய்ய கால அவகாசத்துடன் ‘கெடு’ விதித்துள்ளன. இதனால் காவலாளியை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளன. இது வங்கிகளுக்கு […]

மொபைலில் இண்டர்நெட் இல்லாமலேயே டுவிட்டரை பயன்படுத்தும் வசதி

தற்போது டுவிட்டரை பயன்படுத்த வேண்டுமானால் இண்டர்நெட் கனெக்சன் தேவை. இதை மேலும் எளிமைப்படுத்த டுவிட்டர் நிறுவனம் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 140 எழுத்துகள் கொண்ட வாசகங்களை ட்விட்டரில் இண்டெர்நெட் சேவை இல்லாமலேயே பதிவு செய்ய முயற்சி நடந்துவருகிறது. ஏற்கனவே பேஸ்புக்குடன் இணைந்துள்ள யு2யோபியா மொபைல் நிறுவனம் தற்போது ட்விட்டருடன் இணைந்து இச்சேவையை வழங்க உள்ளதாக தலைமை நிர்வாகி சுமேஷ் மேனன் ராய்ட்டர் செய்திப்பிரிவுற்கு அளித்துள்ள தகவலில் தெரிவித்துள்ளார். சிறிய கோட் […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »