சென்னை, தற்போது மானிய விலையில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 9 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு மேல் பயன்படுத்துகிறவர்கள், வெளி மார்க்கெட் விலையில்தான் மானியம் இல்லாத சிலிண்டர்களை வாங்க வேண்டும். இந்த நிலையில், மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தி உள்ளன. ஒரு சிலிண்டருக்கு ரூ.220 வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சமையல் எரிவாயு […]
பிரியாணி, என்றென்றும் புன்னகை படங்கள் யுகே, அயர்லாந்த், ஆஸ்ட்ரேலியா உள்பட பல வெளிநாடுகளில் வெளியாகியுள்ளது. யுகே மற்றும் அயர்லாந்தில் பிரியாணி படத்தின் இரண்டாவது வார இறுதி வசூல் 8,245 பவுண்ட்கள். ஏழு திரையிடல்களில் இந்த வசூலை பெற்றிருக்கிறது. இரண்டு வாரங்கள் முடிவில் பிரியாணியின் மொத்த யுகே, அயர்லாந்த் வசூல் 54,209 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 55.52 லட்சங்கள். என்றென்றும் புன்னகை இந்த நாடுகளில் தனது இரண்டாவது வார இறுதியில் நான்கு திரையிடல்களில் 6,100 பவுண்ட்களை வNலித்துள்ளது. […]
உடல்நலம் குறித்த பல்வேறு தகவல்களை அறியவும் மற்றும் பல பயனுள்ள தகவல்களை அறியவும் உதவும் வகையில் 24 மணி நேர தொலைபேசி ‘104’ மருத்துவ சேவையினை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், தாய் சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல் […]
தேவையான பொருட்கள் நீல கத்திக்காய் – ¼ கிலோ ப. மிளகாய் – 4 கொத்தமல்லி – ½ கட்டு இஞ்சி – சின்னத்துண்டு பூண்டு – 4 பல் மஞ்சள் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 குழிகரண்டி செய்முறை கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டுக் கொள்ளவும். கொத்தமல்லி, ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, மைப்போல் அரைத்து கொள்ளவும். சட்டியில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் […]
சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஊழியர்களுக்கு 7 சதவீத ஊதிய உயர்வு வழங்கி தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஊதிய மாற்றுக்குழு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதிய மாற்றம் மற்றும் வேலைப்பளு ஒப்பந்தம் 30.11.2011 அன்று முடிவடைந்த சூழ்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்தினை ஏற்படுத்தும் வகையில், ஊதிய மாற்றக்குழு ஒன்றினை அமைக்க நான் ஆணையிட்டேன். அதன்படி […]

புதுடெல்லி, உலகமும், நேரமும் மாறி வருவதைப் புரிந்து கொண்டு, பெண் தூதர் தேவயானி விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்கா பிடிவாதம் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணி புரிந்த தேவயானி கோப்ர கடே, விசா மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு போலீசாரால் அவமரியாதையாக நடத்தப்பட்டார். தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள பெண் தூதர் தேவயானி கைது விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் […]
டிஜிட்டல் முறைக்கு மாறவில்லை என்றால் கேபிள் டி.வி. இணைப்பு துண்டிக்கப்படும் என்ற டிராய் வெளியிட்ட அறிவிப்புக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன பொதுமேலாளர் பி.முருகேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசிடம் டிஜிட்டல் சேவை உரிமம் கேட்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செய்த விண்ணப்பத்தின் மீது இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இந்த நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி […]
சென்னை, மக்கள் நலனையும், நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு, தற்போது உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்வதுடன், டீசல் விநியோக கமிஷன் தொகையை மத்திய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார். முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மக்கள் விரோதச் செயல் இந்திய நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று எல்லோரும் வற்புறுத்திக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், டீசல், பெட்ரோல், ஆகியவற்றின் விலைகளை அடிக்கடி உயர்த்தி இந்தியாவை […]
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கட்சிப் பணியாற்றுவதற்கு வசதியாக அமைச்சர் பதவியில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகியிருப்பதாகவும், இதே காரணத்துக்காக மேலும் சில அமைச்சர்களும் விரைவில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயந்தி நடராஜன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும், அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி […]
இந்திய பெண் தூதர் தேவயானி கைது விவகாரத்தில் மன்னிப்பு கேட்க அமெரிக்கா மறுத்து விட்டது. அவர் மீதான வழக்கை வாபஸ் பெற முடியாது என்றும் திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. வாஷிங்டன், அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிந்து வந்த 39 வயது தேவயானி கோப்ரகடே கைது விவகாரம் இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தேவயானிக்கு அவமரியாதை வேலைக்கார பெண்ணுக்கு விசா பெறுவதில் தவறான தகவல் அளித்த புகாரில் கைதான பெண் தூதர் […]