Tuesday 28th April 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: கதம்பம்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை – ரூ.100 கோடி அபராதம்?

பெங்களூர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1991–ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை பெங்களூரில் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு […]

செவ்வாய் கிரகத்தில் டிராபிக் சிக்னல்?

செவ்வாயில் எலியன்ஸ்கள் சாலையை கடக்க டிராபிக் சிக்னல் பயன்படுத்துகிறார்களா? ஒரு வேடிக்கையான கேள்வியுடன் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ அனுப்பிய ‘கியூரியாசிட்டி’ ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எடுத்த புகைப்படத்தில் டிராபிக் சிக்னல் இருப்பது போன்று தெரியவந்துள்ளது. “டிராபிக் சிக்னல்” தொடர்பான புகைப்படத்தை பிரிட்டன் யு.எப்.ஓ. ஆர்வலர் ஜோசப் ஒயிட் என்பவர் பார்த்ததாக பதிவு செய்துள்ளார். நாசாவின் கியூரியாசிட்டி விண்கலமானது தற்போது செவ்வாயின் மேற்பரைப்பை ஆராய்வதிலும், புகைப்படம் எடுப்பதிலும் மிகவும் […]

விஜய் ஆண்டனியின் அடுத்த படம் – இந்தியா பாகிஸ்தான்

‘நான்’, ‘சலீம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் ‘இந்தியா பாகிஸ்தான்’. இதில் இவருக்கு ஜோடியாக சுஷ்மா ராஜ் நடித்து வருகிறார். மேலும் பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்து வருகிறார்கள். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். ரொமண்டிக் கலந்த காமெடி படமாக உருவாகும் இப்படத்தை ஆனந்த் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவாக நடந்து வருகிறது. இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் […]

சொத்துகுவிப்பு வழக்கு: புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிந்துள்ள நிலையில், நாளை (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் இந்த தீர்ப்பை வேறு மாநிலத்தில் வைத்து வழங்கவோ அல்லது, தீர்ப்பின்போது ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவோ உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் என்.ராஜாராமன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு சுப்ரீம் […]

ஈரான் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 4 பேரை மீட்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை, செப். 26– பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:– தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடந்த 22–ந்தேதி ஈரான் கடலோர காவல் படையால் பிடித்து சிறை வைக்கப்பட்டுள்ளது பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சசிகுமார் (40), அந்தோணி (29), அந்தோணி (34), ஆரோக்கியம் (30) ஆகிய 4 பேரும் ஒப்பந்த அடிப்படையில் கத்தார் […]

சிம்புவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய குறளரசன் !

பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு-நயந்தாரா நடிக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. சிம்புவின் தம்பி இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். எல்லாப் பிரச்னைகளையும் தாண்டி படப்பிடிப்பு முடியும் தருணத்தில் உள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் இது நம்ம ஆளு படத்தின் பாடல்களில், க்ளைமேக்ஸ் காட்சியில் இடம்பெறும் ஒரு பாடல் தவிர்த்து மற்ற பாடல்கள் அனைத்தும் முழுமையாக முடிந்துவிட்டதாம். இந்த தகவலை சிம்புவே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதோடு […]

2014- குழந்தைகள் அமைதிக்கான சர்வதேச விருது இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணுக்கு வழங்கபடுகிறது.

2014-சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான சர்வதேச விருது இந்திய வம்சாவளியை சேர்ந்த நேகா குப்தா உள்பட 3 பேருக்கு வழங்கப்படுகிறது. ஆம்ஸ்டர்டாமை சேர்ந்த குழந்தைகள் நல அமைப்பு ஒன்று உலக அளவில் குழந்தைகள் உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கு ஆண்டு தோறும் சர்வதேச குழந்தைகள் அமைதி விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இந்த விருதுக்காக அமெரிக்காவில்வாழ்து வரும் இந்தியா வம்சாவளியை சேர்ந்த நேகா குபதா தேர்வு செய்யபட்டு உள்ளார். 18 வயதாகும் நேகா சொந்தமாக ஒரு அறக்கட்டளை அமைத்து குழந்தைகள் […]

ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு: வைத்தியநாதனின் வங்கி கணக்கு முடக்கம்

சென்னை, செப். 26– அம்பத்தூர் பால் பண்ணைக்கு விழுப்புரம் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் ஆவின் பால் லாரிகளில் பாலை திருடி விட்டு அதில் தண்ணீர் கலந்து அனுப்பிய சம்பவத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சமீபத்தில் கண்டு பிடித்தனர். சென்னைக்கு வரும் ஒவ்வொரு ஆவின் பால் லாரிகளில் இருந்தும் குறிப்பிட்ட அளவு பாலை திருடிய பிறகு அதே அளவுக்கு தண்ணீர் நிரப்பிய சம்பவம் பல வருடங்களாக நடந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த மோசடிக்கு […]

விஜய்-சமந்தா 100 நடன கலைஞர்களுடன் நடனம் ஆடினார்!

விஜய்-சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘கத்தி’ படத்தில் விஜய் செல்பிபுள்ள என்ற பாடலை பாடியுள்ளார். அனிருத் இசையில் வெளிவந்துள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடலை மிகவும் சிறப்பாக படமாக்க வேண்டும் என்று விரும்பிய படக்குழு, முதலில் வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டனர். ஆனால், படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதால் வெளிநாடுகளில் அந்த பாடலை படமாக்கினால் அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும் என நினைத்த படக்குழு மும்பையிலேயே பிரம்மாண்ட அரங்கு அமைத்து படமாக்க முடிவெடுத்தனர். அதன்படி, […]

நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவி விடுதலை

அபுஜா, செப். 26– நைஜீரியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிபக் கிராமத்தில் பள்ளி விடுதியில் புகுந்து அங்கிருந்த 270 மாணவிகளை போகோஹாரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். அவர்களில் 50–க்கும் மேற்பட்டோர் தப்பி வந்து விட்டனர். மீதமுள்ள 200 பேரை தீவிரவாதிகள் சிறை வைத்துள்ளனர். இவர்களை விடுவிக்கும் படி சர்வதேச நாடுகள் வலியுறுத்தியும் தீவிரவாதிகள் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் 20 வயது மாணவி ஒருவர் மட்டும் அபுஜாவுக்கு திரும்பி வந்தார். அவரை தீவிரவாதிகள் விடுதலை செய்து […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »