Friday 1st May 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: Headlines

24 மணிநேர தொலைபேசி ‘104’ மருத்துவ சேவையினை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

உடல்நலம் குறித்த பல்வேறு தகவல்களை அறியவும் மற்றும் பல பயனுள்ள தகவல்களை அறியவும் உதவும் வகையில் 24 மணி நேர தொலைபேசி ‘104’ மருத்துவ சேவையினை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், தாய் சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல் […]

கத்திரிக்காய் வதக்கல்

தேவையான பொருட்கள் நீல கத்திக்காய் – ¼ கிலோ ப. மிளகாய் – 4 கொத்தமல்லி – ½ கட்டு இஞ்சி – சின்னத்துண்டு பூண்டு – 4 பல் மஞ்சள் – தேவையான அளவு  உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 குழிகரண்டி செய்முறை கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டுக் கொள்ளவும். கொத்தமல்லி, ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, மைப்போல் அரைத்து கொள்ளவும். சட்டியில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் […]

மின்வாரிய ஊழியர்களுக்கு 7 சதவீத ஊதிய உயர்வு: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஊழியர்களுக்கு 7 சதவீத ஊதிய உயர்வு வழங்கி தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஊதிய மாற்றுக்குழு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதிய மாற்றம் மற்றும் வேலைப்பளு ஒப்பந்தம் 30.11.2011 அன்று முடிவடைந்த சூழ்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்தினை ஏற்படுத்தும் வகையில், ஊதிய மாற்றக்குழு ஒன்றினை அமைக்க நான் ஆணையிட்டேன். அதன்படி […]

உலகம் மாறி வருவதை புரிந்து கொண்டு அமெரிக்கா மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் இந்தியா பதிலடி

புதுடெல்லி, உலகமும், நேரமும் மாறி வருவதைப் புரிந்து கொண்டு, பெண் தூதர் தேவயானி விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்கா பிடிவாதம் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணி புரிந்த தேவயானி கோப்ர கடே, விசா மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு போலீசாரால் அவமரியாதையாக நடத்தப்பட்டார். தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள பெண் தூதர் தேவயானி கைது விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் […]

டிஜிட்டல் முறைக்கு மாறவில்லை என்றால் கேபிள் டி.வி. இணைப்பு துண்டிக்கப்படும்

டிஜிட்டல் முறைக்கு மாறவில்லை என்றால் கேபிள் டி.வி. இணைப்பு துண்டிக்கப்படும் என்ற டிராய் வெளியிட்ட அறிவிப்புக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன பொதுமேலாளர் பி.முருகேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசிடம் டிஜிட்டல் சேவை உரிமம் கேட்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செய்த விண்ணப்பத்தின் மீது இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இந்த நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி […]

பெட்ரோல் டீசல் உயர்வை திரும்பப் பெற வேண்டும் ஜெயலலிதா அறிக்கை

சென்னை, மக்கள் நலனையும், நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு, தற்போது உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்வதுடன், டீசல் விநியோக கமிஷன் தொகையை மத்திய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார். முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மக்கள் விரோதச் செயல் இந்திய நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று எல்லோரும் வற்புறுத்திக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், டீசல், பெட்ரோல், ஆகியவற்றின் விலைகளை அடிக்கடி உயர்த்தி இந்தியாவை […]

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ஜெயந்தி நடராஜன் ராஜினாமா

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கட்சிப் பணியாற்றுவதற்கு வசதியாக அமைச்சர் பதவியில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகியிருப்பதாகவும், இதே காரணத்துக்காக மேலும் சில அமைச்சர்களும் விரைவில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயந்தி நடராஜன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும், அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி […]

இந்திய பெண் தூதர் தேவயானி கைது விவகாரத்தில் தொடர்ந்து பிடிவாதம்: வழக்கை வாபஸ் பெற முடியாது என்றும் திட்டவட்ட அறிவிப்பு

இந்திய பெண் தூதர் தேவயானி கைது விவகாரத்தில் மன்னிப்பு கேட்க அமெரிக்கா மறுத்து விட்டது. அவர் மீதான வழக்கை வாபஸ் பெற முடியாது என்றும் திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. வாஷிங்டன், அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிந்து வந்த 39 வயது தேவயானி கோப்ரகடே கைது விவகாரம் இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  தேவயானிக்கு அவமரியாதை வேலைக்கார பெண்ணுக்கு விசா பெறுவதில் தவறான தகவல் அளித்த புகாரில் கைதான பெண் தூதர் […]

ஏவுகணை விஞ்ஞானி சிவதாணு பிள்ளைக்கு “ஆர்டர் ஆப் மெரிட்” விருது: ரஷ்யா வழங்கியது

புதுடெல்லி, டிச.19- பிரம்மோஸ் அதிவேக ஏவுகணை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானி சிவதாணு பிள்ளைக்கு “ஆர்டர் ஆப் மெரிட்” என்ற ரஷ்ய நாட்டின் உயரிய விருதை அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் இந்தியாக்கும், ரஷ்யாவுக்கும் இடையே உள்ள உறவு மேலும் வலுவடைந்ததை தொடர்ந்தே இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. விஞ்ஞானி பிள்ளைக்கு ரஷ்யா அனுப்பியுள்ள செய்தியில் “நீங்கள் இரு நாடுகளின் கூட்டு திட்டம், அமைதி, ஒத்துழைப்பு, புரிதல் மற்றும் நட்பை வலுப்படுத்துவதற்கு பெரும்பங்காற்றியதை பெருமைப்படுத்தும் […]

பிரச்சினையை ஏற்படுத்திய ரஜினி பிறந்தநாள் பேனர்

சூப்பர் ஸ்டார் ரஜினி தனது 64-வது பிறந்தநாளை சமீபத்தில் விமரிசையாக கொண்டாடினார். இவரது பிறந்தநாளில் அவருடைய ரசிகர்கள் விதவிதமாக போஸ்டர்கள் ஒட்டியும், பேனர்கள் கட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில், பிறந்தநாளின் போது ரசிகர்கள் ஒட்டிய பேனர்களில் ஒன்று தற்போது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேனரில் ரஜினி மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் வாக்குச்சாவடியில் நின்று ஓட்டுப் போடுவது போலவும், விஷ்ணுவும், விநாயகரும் வரிசையில் நிற்பது போன்று […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »