Sunday 3rd May 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: செய்திகள்

பவானி அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து : ஆசிட் கொட்டியதால் மக்களுக்கு பாதிப்பு

பவானி; பவானி அருகே மரத்தில் மோதி டேங்கர் லாரி கவிழ்ந்தது. ஆசிட் கொட்டியதால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு கண்எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டது.மேட்டூரில் இருந்து சாயப்பட்டறைகளுக்கு பிளிச்சிங் செய்ய பயன்படுத்தப்படும் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் ஏற்றிக்கொண்டு ராட்சத டேங்கர் லாரி ஒன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 6 மணிக்கு பவானி அடுத்த சித்தார் அருகே வரும்போது சாலையோரம் இருந்த ஆலமரத்தில் மோதி கவிழ்ந்தது. விபத்து ஏற்பட்டதும் டிரைவர் தப்பிஓடி விட்டார். கிளீனர் லாரியில் சிக்கி […]

டுவிட்டரில் ஒபாமாவுக்கு மிரட்டல்

டுவிட்டர் வலைதளத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மொராக்கோ நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செளஃபியேன் (17) என்ற அந்த இளைஞர் தனது டுவிட்டர் வலைதளத்தில் ஒபாமாவிற்கு கொலை மிட்டல் விடுத்ததற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்  மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்  […]

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜென்சி இணையதளம் முடக்கம்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் இணையதளத்தை சமூக விரோதிகள் சிலர் முடக்கி வைத்துள்ளதால், பல மணி நேரங்களாக அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் இந்த இணையதளம் பயன்படுத்த முடியாத நிலைக்கு போனது. என்எஸ்ஏ.ஜிஓபி என்ற அந்த இணையதளத்தை யாராலும் பார்க்க முடியாமல் போனது. அதனை சில சமூக விரோதிகள் முடக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  ஆன்மிக பரிகாரங்கள் […]

ஒய்எம்சிஏ மைதானத்தில் பட்டாசு விற்பனை: இன்று தொடக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒய்எம்சிஏ மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பட்டாசு விற்பனைக் கடைகளில் சனிக்கிழமை (அக்.26) முதல் விற்பனை தொடங்குகிறது. மக்கள் நெரிசல் மிகுந்த பாரிமுனை பகுதியில் பட்டாசுக் கடைகள் அமைக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம தடை விதித்தது. இதையடுத்து தீயணைப்புத் துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளின் அனுமதியுடன் தீவுத் திடலில் பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை விற்பனை தொடங்கியது. இதேபோல் ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் 40-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் […]

விமான நிலைய ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்

விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து சென்னை விமான நிலைய ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாக பிரிவுகளை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டிசம்பர் மாதம் டெண்டர் முடிந்து ஜனவரி மாதம் தனியார் வசம் ஒப்படைக்கும் பணி நடக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இதற்கு சென்னை விமான நிலைய ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக உணவு இடைவேளையில் […]

பழனி கோயிலைச் சுற்றிய மர்ம ஹெலிகாப்டர்

பழனி மலைக் கோயிலைச் சுற்றிய மர்ம ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் முக்கியமான திருக்கோயில் பழனி கோயிலாகும். பல்வேறு முக்கிய நாட்களில் இக் கோயிலுக்கு கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் பழனி மலைக் கோயிலை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் நீலநிற ஹெலிகாப்டர் ஒன்று மிகத் தாழ்வாக நெருங்கி சுற்றி வந்தது. மலைக் கோயிலை சுற்றிய ஹெலிகாப்டரால் பக்தர்கள் பரபரப்பு அடைந்தனர். ஹெலிகாப்டர் எதற்கு வந்தது என்று காவல் துறையினருக்கு தெரியவில்லை. […]

வாக்காளர் பட்டியல் : சென்னையில் ஞாயிறன்று சிறப்பு முகாம்

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் பொதுமக்கள் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளை சரிபார்க்கவும், பெயர் சேர்ப்பு, நீக்கல் மற்றும் திருத்தம் போன்றவைகள் குறித்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அளிக்கவும், இறுதி சிறப்பு முகாம் இம்மாதம் 27ம் தேதி அன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இவ்வாய்ப்பினை பொது மக்கள் பயன்படுத்திக் கொண்டு வாக்காளர் பட்டியல்களில் விடுபட்டுள்ளவர்களது பெயர்களை சேர்க்க படிவங்களை பூர்த்தி செய்து அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 […]

அமெரிக்கா உளவு பார்க்க மன்மோகன் சிங்கிடம் செல்போன் , இ – மெயில் இல்லை .

“பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செல்போன் இல்லை, இ-மெயில் இல்லை. அதனால் அவரை அமெரிக்கா உளவு பார்க்கும் என்ற கவலை இல்லை” என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ‘கார்டியன்’ நாளிதழ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில், “35 உலக நாட்டு தலைவர்களின் தொலைபேசி எண்களை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, வெளியுறவுத்துறை, ராணுவத் தலைமையகமான பென்டகன் ஆகியவை அந்நாட்டு உளவு அதிகாரிகளிடம் வழங்கின. இதைத் தொடர்ந்து, அந்தத் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை உளவுத்துறை அதிகாரிகள் ஒட்டுக் கேட்டனர்” […]

செல்வந்தர்களில் முதலிடத்தை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார்: நடிகரான ஷாருக் கான் 114-வது இடத்தை பெற்றுள்ளார்

இந்தியாவின் செல்வந்தர்களில் முதலிடத்தை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். இவரது வருவாயில் 2 சதவீதம் இழப்பு ஏற்பட்டபோதும் இந்த முதலிடத்தை இவர் தக்கவைத்துள்ளார். இந்திய செல்வதர்களின் பட்டியலை சீனாவைச் சேர்ந்த ஹரூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்திய செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வரும் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டு 2 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது, என்றாலும் அவர் 18.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்புள்ள சொத்துக்களுடன் இந்திய […]

சிறுக சிறுக சேர்த்து சொந்த வீடு வாங்குபவர்கள் யார்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. லக்கினத்திற்கு ஐந்தாம் அதிபதி ஒன்பதில் இருந்தாலும், தனாதிபதி லக்கினத்தை பார்த்தாலும், லக்கினாதிபதியும், தனாதிபதியும் 11-ல் இருந்தாலும், லக்கினாதிபதியை குரு பார்த்தாலும், 9-க்குரிய கிரகம் 5-ல் இருந்தாலும் அத்தகைய ஜாதகர்கள் சிறுக சிறுக சேர்த்து சொந்த வீடு வாங்கி விடுவார்கள். மேலும் ஜோதிட கட்டுரைகளுக்கு கிளிக் செய்யவும்… Send your feedback to: editor@bhakthiplanet.com For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »