Saturday 2nd May 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: முதன்மை பக்கம்

குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தியது ரிசர்வ் வங்கி

டெல்லி: வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்ககி 0.25% உயர்த்தியுள்ளது. இதனால் ரெபோ ரேட் 7.50 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த வட்டி உயர்வால் தனிநபர், வீடு, வாகன கடன்களின் வட்டி விகிதமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் காலாண்டிற்கான நிதிநிலை ஆய்வு அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி ரொக்க கையிருப்பு விகிதத்தில் எந்த மாற்றமும்(4%) செய்யப்படவில்லை. மேலும் அவசரக் கால தேவைக்கான வட்டி விகிதம், 0.25% குறைக்கப்பட்டுள்ளது. […]

விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பேன் : பத்மராஜன் முயற்சி

சேலத்தைச் சேர்ந்த பத்மராஜன் இதுவரை 155 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது ஏற்காடு சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர் டேம் ராமன்நகரை சேர்ந்த பத்மராஜன் சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை எதிர்த்து ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு மனுதாக்கல் செய்தார். இதற்கு எம்.எல்.ஏ.க்கள் யாரும் முன்மொழியாத காரணத்தால் பத்மராஜனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பத்மராஜன் களம் இறங்குகிறார். வருகிற 9-ந்தேதி ஏற்காடு இடைத்தேர்தலில் […]

மோடி பேச்சுக்கு எதிரான வீடியோ ஆதாரம் : வீடியோவை யூடியூபில் பதிவேற்றியது பிரிட்டிஷ் பாத்தி டாட் காம்

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் மரண இறுதி ஊர்வலத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கலந்து கொள்ளவில்லை என்று நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். ஆனால் மாறாக ஜவஹர்லால் நேரு கலந்து கொண்டதற்கு ஆதாரமான வீடியோவை திக்விஜய் சிங் தனது ட்விட்டரில் வெளியிட்டார். அசல் வீடியோவை யூடியூபில் பதிவேற்றியது பிரிட்டிஷ் பாத்தி டாட் காம் ஆகும். இது குறித்து கூறிய திக்விஜய் சிங், மோடி ஒரு பொய்யர் என்றும் அவரது கருத்துக்கு அவர் மன்னிப்பு […]

ரஜினியும் கண்டக்டராக இருந்தவரே: ஏ.வ.வேலு குறித்த விமர்சனத்துக்கு ஸ்டாலின் பதில்

திமுக உறுப்பினர் எ.வ.வேலுவை சட்டசபையில் இன்று கண்டக்டர் என்று விமர்சித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே கண்டக்டராக இருந்தவர்தானே என்று கூறியுள்ளார். தமிழக அரசின் மினி பேருந்து குறித்த விவாதம் இன்று சட்டசபையில் நடந்தது. சட்டசபையில் கேள்வி நேரத்திற்கு பிறகு இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் எம்.எல்.ஏ. மினி பேருந்துகள் பற்றி பேசியபோது, பேருந்துகளில் இருப்பது இரட்டை இலை இல்லை அது இயற்கை காட்சி என்று […]

நடிகை சரிதா புகாருக்கு முகேஷ் பதில்

நடிகை சரிதாவிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்ட பிறகே இரண்டாவது திருமணம் செய்தேன் என்று நடிகர் முகேஷ் கூறியுள்ளார். சரிதாவை திருமணம் செய்த நடிகர் முகேஷ் அவரைப் பிரிந்து கேரளாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் தேவிகாவை காதலித்து கடந்த வாரம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு முகேஷின் முதல் மனைவியான நடிகை சரிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து சரிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், முகேஷ் சட்ட விரோதமாக தேவிகா என்ற பெண்ணை திருமணம் […]

பாத்திமாபாபு, நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோர் அதிமுகவில் ஐக்கியம்

தி.மு.க. முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன்; அந்தமான் மாநில ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் பி.ஆர். கணேசன் திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி–2 தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருச்சி கே. சௌந்தரராசன், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகர மன்றத் தலைவர் ஐ.ஆபிதாசேக், எட்டையபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் கா. கோவிந்தராஜ பெருமாள் உள்ளிட்டோர் முதல்வர் ஜெயலிதா முன்னிலையில் தனித்தனியாக அதிமுகவில் இணைந்தனர் மேலும்  பிரபல செய்தி வாசிப்பாளர்கள், பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி, தஞ்சாவூர் மாவட்ட […]

உலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபாயில் திறப்பு

உலகின் மிகப்பெரிய விமான நிலையமான அல்-மஹ்தும் சர்வதேச விமானநிலையம் துபாயில் இன்று திறக்கப்பட்டது. இந்த விமான நிலையம் உலக அளவில் 2வது பெரிய பயணிகள் விமானநிலையம் ஆகும். இந்த விமானநிலையத்தில் 160 மில்லியன் பயணிகளை ஆண்டுக்கு கையாள முடியும். மேலும் ஆண்டுக்கு 12 மில்லியன் டன் கார்கோ சரக்குகள் வந்து இறங்க முடியும். இந்த விமான நிலையத்தில் முதல் பயணிகள் விமானம் புடாபெஸ்டில் இருந்து வந்திறங்கியது, அதனை விமானநிலையத்தில் அனைவரும் உற்சாகமாக வரவேற்றனர். ஜோதிட கட்டுரை படிக்க […]

பீகார் மாநிலம் பாட்னாவில் பயங்கரம்: நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து 5 பேர் பலி; 83 பேர் படுகாயம்

பாட்னா, பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். பிரமாண்ட பொதுக்கூட்டம் முதல்–மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடைபெறும் பீகார் மாநிலத்தில் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில், நரேந்திர மோடி கலந்து கொண்ட பிரமாண்டமான பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. காலையிலேயே மாநிலம் முழுவதிலும் இருந்து சிறப்பு ரெயில்கள், பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலம் தொண்டர்கள் வந்து […]

பாட்னா தொடர் குண்டு வெடிப்பு : இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது

பாட்னா – பாரதீய ஜனதா  பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட பாட்னா பொதுக் கூட்டத்தில் அடுத்தடுத்த 8 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 6 பே பலியானார்கள். 83 பேர் காயம் அடைந்தனர்.பாட்னா ரெயில் நிலையம், பொதுக்கூட்டம் நடக்கும்  உள்பகுதி,  வெளிப்பகுதி ஆகிய 3 இடங்களில் குண்டுகள் வெடித்தது. இத்திட்டத்தை தீவிரவாதிகள் குழு குழுவாக செயல்பட்டு  நடத்தி உள்ளனர். பாடானா ரெயில் நிலையத்தில் 9.30 மணிக்குமுதல் குண்டு வெடிப்பும் .  10.30க்கு […]

பாட்னா குண்டுவெடிப்பிற்கு பிறகு இசை வெளியீட்டில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர்: பாஜக கண்டனம்

பீகார் மாநிலம் பாட்னாவில் மோடி பங்கேற்ற பேரணியை குறிவைத்து நேற்று 7 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த கோர சம்பவத்தில் 6 பேர் பலியாயினர் 83 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று மாலை மும்பையில் பாலிவுட் படமான ரஜ்ஜோவின் இசைவெளியீட்டு விழா பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கலந்து கொண்டு இசையை வெளியிட்டார்.இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சி  ஷிண்டேவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.  பாட்னாவில் மோசமான குண்டுவெடிப்பில் 6 […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »