Monday 6th May 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: பெருமாள் கோயில்

தன் வம்சத்தை காண வரும் பித்ருக்கள் : தை அமாவாசை சிறப்பு கட்டுரை!

Written by Niranjana  27.01.2017 அன்று தை அமாவாசை தை அமாவாசை அன்று பித்ருகளுக்கு தர்பணம் கொடுத்தால், ஸ்ரீ மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசிகளுடன் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். பித்ரு கடனை சரியாக நிறைவேற்றினால் பல நன்மைகள் உண்டாகும் கடன் பட்ட நெஞ்சம் கலங்கும் என்பார்கள். அதுபோல பல வருடங்கள் பாடுபட்டு குழந்தைகளை வளர்த்த பெற்றோர், அவர்களின் காலம் முடிந்து  இறைவனடி சென்ற பிறகு, அவர்களுக்கு திதி தருவது, பிண்டம் தருவது, வழிபாடு செய்து வருவது போன்ற […]

ஆட்டி படைக்கும சர்ப்ப தோஷத்தை அடக்குவார் அனுமான்! அனுமன் ஜெயந்தி சிறப்பு கட்டுரை

Written by Niranjana 28.12.2016 அன்று அனுமன்ஜெயந்தி ஆஞ்சனேயரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் கெடுதல் விலகும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இராகு – கேதுவால் உண்டாகும் சர்ப தோஷத்தையும் விரட்டி அடிக்கும் ஆற்றல் அனுமனுக்கு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? கேசரி என்பவர் ஸுமேரு மலைக்கே ஆட்சி புரிந்து வந்தார். அவருடைய மகள் அஞ்சனா. வாயுபகவானுக்கும் அஞ்சனாவுக்கும் பிறந்தவர்தான் ஆஞ்சனேயர். ஒருநாள் வாயு புத்திரரான நம் அஞ்சனேயருக்கு மிகவும் பசி. ஏதாவது சாப்பிட வேண்டும் […]

shaligram bestow several benefits

Trees that prevent dhosham

குழந்தை கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வீட்டில் கோலமாக வரைகிறோம் தெரியுமா?ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு கட்டுரை பகுதி –5

சென்ற பகுதிக்கு படிக்க கிளிக் செய்யவும் Written by Niranjana நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வோரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வோரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும் ஆனந்தமும் அடைந்தார். இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ணபரமாத்மா.“ நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன, காப்பேன் என்பதைக் […]

கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய பாகத்தை ஏமாற்றிய குசேலர்! ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு கட்டுரை பகுதி – 4

சென்ற பகுதிக்கு படிக்க கிளிக் செய்யவும் Written by Niranjana கிருஷ்ணருடைய பால்ய சினேகிதராக விளங்கியவர்களில் குசேலர் என்கிற சுதாமாவும் ஒருவர். ஒன்றாக குருகுலத்தில் படித்தவர்கள். ஒருநாள் குருபத்தினி, கிருஷ்ணருக்கும் குசேலருக்கும் அவல் தயாரித்து கொடுத்தார். ஆனால் குசேலரோ கிருஷ்ணணுக்கு அதை சரிபங்கு கொடுக்காமல் அத்தனை அவலையும் குசேலனே சாப்பிட்டார். அதை நினைத்து கிருஷ்ணர் கவலைப்படவில்லை. ஆனால் குருவோ, “குசேலன் செய்த மிகப் பெரிய பாவச்செயல் இது.” என்றார். “இதனால் குசேலா நீ வறுமையில் வாடுவாய்.” என்றார். […]

முராரி என்று ஏன் பரமனை அழைக்கிறோம்.? ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு கட்டுரை பகுதி –3

சென்ற பகுதிக்கு படிக்க கிளிக் செய்யவும் Written by Niranjana கிருஷ்ண பரமாத்மாவை முராரி என்று அழைப்போம். ஏன் கிருஷ்ண பரமாத்மாவை இப்படி அழைக்கிறோம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம். கேரளாவில் முகத்தல என்ற இடத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அவன் அந்த பகுதி மக்களுக்கு பெரும் துன்பத்தை கொடுத்து வந்தான். அவனிடம் மாட்டினால் கொன்றுவிடுவான். இதனால் அந்த ஊர் மக்கள் வேதனை அடைந்தார்கள். “தங்களுக்கு விமோச்சன காலம் எப்போது வரும் நாராயணா?” என்று தினமும் ஸ்ரீமந் […]

பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் கிருஷ்ண பகவான் வடித்த சிலை! ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு கட்டுரை பகுதி – 2

சென்ற பகுதிக்கு படிக்க கிளிக் செய்யவும் Written by Niranjana இஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த மன்னன் இந்திரத்யும்னன். இவருக்கு பிள்ளைபாக்கியம் இல்லாததால் ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்ந்தார். அந்த வளர்ப்பு மகனின் பெயர் யக்ஞ நாராயணன். அவர் தன் தந்தையிடம், அசரீரி தன்னிடம்  ஒரு ஆலயம் கட்ட சொன்னதாகவும்,  அந்த ஆலயத்திற்கு இறைவனின திருமேனியை உருவாக்க, சமுத்திரத்தில் இருந்து மூன்று கட்டைகள் வரும், அந்த கட்டைகளில் இருந்துதான் இறைவனின் உருவத்தை உருவாக்க வேண்டும் என்று அசரீரி சொன்னதாகவும் […]

அஷ்டமி திதியின் மகிமையை உணர்த்திய கண்ணன்! ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு கட்டுரை பகுதி – 1

Written by Niranjana  25.08.2016 அன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அஷ்டமி திதியின் மகிமையை உணர்த்திய கண்ணன் அஷ்டமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். இதனால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. அஷ்டமி, நவமி திதியில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்பார்கள். காரணம், இந்த திதிகளில்தான் கிருஷ்ணரும், இராமரும் பிறந்து, அதிக கஷ்டங்களை சந்தித்துவிட்டார்கள் என்ற காரணம் சொல்லப்படுகிறது. (இராமர் பிறந்த நாள், இராம நவமி) ஆனால் முதலில் துன்பங்களை கண்ட இந்த இருவருமே, பிறகு சாதனையும், […]

Is Your Lucky Hand?

உங்கள் கை இராசியானதா?

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech