Saturday 11th May 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: ஆன்மிகம்

முருகனை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும்! ஆடி கிருத்திகை சிறப்பு கட்டுரை

Written by Niranjana 19.07.2017 ஆடி கிருத்திகை சிவகிரி – சக்திகிரி என்ற இரண்டு மலைகளை சிவன் அகத்தியரிடம் வழங்கி, “இதை மருதமலையில் வைத்து விடு.“ என்றார். “குறுமுனியான நான் எப்படி இந்த இரண்டு மலைகளையும் சுமப்பேன்.?“ என்று சந்தேக கேள்வி எழுப்பினார் அகத்தியர். “பூமியை சமமாக வைத்த நீ, சாதாரண இரண்டு மலையை சுமக்க முடியாதா?. உன்னால் முடியாதது எதுவும் இல்லை அகத்தியா.“ என்று ஈசன் கூறினார். பல பூதங்களுக்கு தலைவனான சிவபெருமான், அந்த சிவ […]

உயர்வான வாழ்க்கை தரும் ஸ்ரீவரலஷ்மி விரதம்!

Written by Niranjana 04.8.2017 அன்று வரலஷ்மி விரதம்! கைலாயத்தில் சிவனும் சக்தியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டு இருந்தார்கள். அப்போது சிவபெருமான் தன் அருகில் இருந்த சிவகணங்களான சித்திரநோமியை பார்த்து, “நான் தானே ஜெயித்தேன்.” என்றார். அதற்கு சிவகணமும் “ஆமாம்” என்றது. இதை கேட்ட பார்வதிதேவி கோபம் கொண்டு, “நடுநிலையில்லாமல் தீர்ப்பு சொன்ன நீ குஷ்டரோகம் பிடித்து அவதிப்படுவாய்.” என்று சபித்தாள். அந்த நிமிடமே அந்த சிவகணத்தின் உடலில் குஷ்டரோகம் பிடித்துக்கொண்டது. தன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான் சித்திரநோமி. […]

ஆடிப்பெருக்கு திருநாள்! சிறப்பு கட்டுரை

Written by Niranjana 03.08.2017 அன்று ஆடிப்பெருக்கு திருநாள்! தெய்வ வழிபாடு விசேஷங்களுக்கு மட்டுமின்றி விவசாயிகளுக்கும் உகந்த மாதம்  இந்த ஆடி மாதம். ஆம்,  உழவு பணிகளை துவங்கும் மாதம். பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீரை நாம் தெய்வமாக மதிக்கிறோம். தண்ணீரை அதிகம் செலவு செய்தால் பணம் விரையம் ஆகும் என்கிறது சாஸ்திரம். கங்கை-காவேரி மற்றும் பல நதிகளை புண்ணிய நதிகளாக, தெய்வீக இடமாக கருதி போற்றி, அங்கு பூஜை செய்வார்கள். எல்லாம மாதங்களிலில் பூஜை செய்வதை விட ஆடிமாதம் […]

கருட பஞ்சமி சிறப்பு கட்டுரை

Written by Niranjana 27.07.2017 அன்று கருட பஞ்சமி  இறைவனை எப்படி வணங்குகிறோமோ அதுபோல இறைவனுடைய வாகனத்தையும் வணங்க வேண்டும். விஷ்ணு பகவானின் வாகனமான கருடனை வணங்கினால், அவர்களுக்கு திருமாலின் ஆசியும் அனுகிரகமும் கிடைக்கும். ஆம். ஸ்ரீமந் நாராயணனின் எல்லா அவதாரங்களிலும் கருடன், பெருமாளுக்கு உதவியாக இருந்தார். ஸ்ரீராமஅவதாரத்தில் மால்யவனுக்கும் ஸ்ரீராமருக்கும் யுத்தம் நடந்தபோது, ஸ்ரீராமரின் மீது வெயில்படாமல் இருக்க, கருடபகவான் ஆகாயத்தில் தன்னுடைய  இரண்டு இறக்கைகளையும் விரித்து இராமரின் மீது வெயில்படாமல் காத்தார். அதேபோல கிருஷ்ணஅவதாரத்தில், ஸ்ரீகிருஷ்ணபகவான் காளிங்க […]

உன்னத பலன் தரும் நாக பஞ்சமி- நாகதோஷத்தை நீக்கும் நாக வழிபாடு

Written by Niranjana 27.07.2017 நாக பஞ்சமி! பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். பரமபதம் விளையாட்டில் தாயம் போட்டு ஆட்டத்தை ஆரம்பித்தவுடன் எப்படியோ போராடி ஏணியில் ஏறி பாதி கிணற்றை தாண்டுவதை போல விளையாடும்போது, சிறு பாம்பின் கடிபட்டு மறுபடியும் கீழே இறங்குவோம். இன்னும் தொடர்ந்து விளையாடி மேலே முன்னேறி வந்தபோது பெரிய பாம்பிடம் கடிபட்டு மீண்டும் ஆட்டம் தொடங்கிய இடத்திற்கே வந்து விடுவாம்.   பரமபதம் விளையாட்டிலேயே பாம்பு இப்படி விளையாடுகிறது என்றால், நிஜவாழ்க்கையில் […]

அம்மனுக்கு வளையல் அணிவித்தால் மங்களங்கள் பெருகும்! ! ஆடிப்பூரம் சிறப்பு கட்டுரை

Written by Niranjana 26.07.2017 ஆடிப் பூரம்  ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள்.  தன் பக்தர்களை குழந்தைகளாக பார்த்தாலும் அம்மனுக்கு ஒரு கவலை இருந்தது. அதாவது திருமணமான எல்லா பெண்களையும் போல தானும் தாய்மை அடையவில்லையே என்று மனம் ஏங்கினாள். முருகனும், விநாயகனும் மற்றும் உன்னுடைய பக்தர்களும் உனக்கு குழந்தைகள்தான் என்று ஈசன், அம்மனை சமாதானம் செய்தாலும் அம்பாள் ஆறுதல் அடையவில்லை. அதனால் புட்லூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் நிறைமாத கர்ப்பிணியான வடிவத்தில் காட்சி தந்தாள். இதனால் […]

முன்னோர்களின் ஆசியை அள்ளி தரும் ஆடி அமாவாசை! ஆடி அமாவாசை சிறப்பு கட்டுரை

Written by Niranjana 23.07.2017 அன்று ஆடி அமாவாசை! இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு காலமாக பிரித்துள்ளனர். அதில் தை முதல் ஆனி மாதம் வரை பகல் காலம். இதை “உத்தராயண காலம்” என்றும், ஆடி முதல் மார்கழி வரை இரவு காலம். இதை “தட்சணாயன காலம்”  என்றும் அழைக்கப்படுகிறது. புராணப்படி உத்தராயண காலம் என்பது தேவர்களின் பகல் நேரம். தட்சணாயன காலம் எனப்படும், அதாவது இரவு காலத்தில் தேவர்கள் உறங்குவதாகவும், இதனால்தான் நரகாசுரன், மஹிஷாசுரன் போன்ற […]

ராகு கேது தோஷ பரிகாரங்கள்: ராகு கேது பெயர்ச்சி சிறப்பு கட்டுரை!

Written by Niranjana  வைர கல்லாக இருந்தாலும் அதை அணியும் போது மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்றால் வைரத்தை விட குறைந்த விலையான தங்கத்தில் பதிக்க வேண்டும். தங்க நகையில் பதிக்காமல் எப்படி வைரகல்லை அலங்கரிக்க முடியாதோ அது போல் யோகமான ஜாதகமாக அமைந்தாலும் நாகதோஷம் இருந்தால் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும். நாகபஞ்சமி அன்று நாகாத்தம்மனை வணங்க வேண்டும். காலசர்ப்பதோஷ ஜாதகமாக இருந்தால் நுட்பது வயதிற்குள் எந்த லாபகரமான அதிர்ஷ்டத்தையும் பெற முடியாது. திருமணம் தடை […]

வம்ச வளர்ச்சிக்கு அமாவாசை வழிபாடு

Written by Niranjana அமாவாசையில் நம் குடும்பத்தின் முன்னோர்களை நினைத்து வணங்கி பூஜை செய்ய வேண்டும். பெயர் சொல்ல பிள்ளை என்பார்கள். இதன் காரணம் என்னவென்றால் தாய், தகப்பனுக்கு பிறகும் அந்த வம்சத்தை வளர செய்வது மட்டுமே பிள்ளைகளின் வேலையல்ல. தமது குடும்பத்தின் பெரியோர்கள் இருக்கும் போதும் சரி, இல்லாத போதும் சரி, அந்த ரத்த பந்தங்களின் மனதை குளிர்விக்க வேண்டும்.  மறைந்த பெரியோர்களுக்கு தர்பணம் செய்யும்போது அந்த பெரியோர்களின் பெயர்களை சொல்லி அவர்களின் ஆத்மாக்களை சாந்தி […]

ஆனி திருமஞ்சனம் சிறப்பு கட்டுரை

ஆனி திருமஞ்சனம் (30.06.2017)   Written by NIRANJANA  அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு ஆனி மாதம் உத்திரம் நட்சத்தித்தில் சிறப்பு அபிஷேகங்கள் செய்து ஆடல்நாயகனை அலங்காரங்கள் செய்து, அவருடைய நடனத்தை காணும் திருநாள்.   சிவபெருமானின் நடனத்தை காண தேவர்கள், முனிவர்கள் தவம் இருந்தார்கள். விஷ்ணுபகவானும் சிவபெருமானின் நடனத்தை காண விரும்பினார். “சிவ-சக்தி ஒன்றே“ என்று பிருங்கிமுனிவருக்கு சிவபெருமான் சொன்னார். அதை கேளாமல் இருந்த பிருங்கி முனிவர், பராசக்தியின் கோபத்திற்கு ஆளாகி தன் சக்தியை இழந்தார். சிவலிங்கத்தை […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech