Thursday 30th April 2026

தலைப்புச் செய்தி :

Author Archive
Stories written by bhakthiplanet.com

பஞ்சாயத்துத் தலைவர் ரங்கநாதன் மூக்கைக் கடித்து துப்பினார் முதியவர்

கடனை திருப்பித் தராதவரின் காதை கடித்து எடுத்துக் கொண்டு வருவார் நடிகர் செந்தில் ஒரு திரைப்படத்தில். அது போன்று விருத்தாசலம் அருகே உதவித் தொகை வாங்கித் தராததால் பஞ்சாயத்துத் தலைவரின் மூக்கைக் கடித்து துப்பினார் முதியவர் ஒருவர். மருங்கூர் கிராமத்தை சேர்ந்த முதியவர் பெயர் திரிசங்கு. இவர் வயது 55, 60 வயதானவர்களுக்கே முதியோர் உதவித் தொகை கிடைக்கும். ஆனால் பஞ்சாயத்துத் துணைத் தலைவர் ரங்கநாதன் என்பவர் இவருக்கு உதவித் தொகை வாங்கித் தருவதாக கூறி விண்ணப்பமும் […]

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா

திருச்செந்தூர், நவ.4 – திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜை–யுடன் தொடங்கியது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கபட்டது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 3.30 மணிக்கு காலசந்தி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் யாகசாலைக்கு எழுந்தருளினார். யாகசாலையில் பிரதான மூன்று கும்பங்களான சுவாமி ஜெயந்திநாதர், […]

சென்னை பாக்ஸ் ஆபிஸ் – அமர்க்களமான ஆரம்பம்

அக்டோபர் 31 ஆரம்பம் வெளியான போதே மற்ற படங்களின் கலெக்சன் காலி. நவம்பர் 2ஆம் தேதி அழகுராஜா, பாண்டிய நாடு வெளியாக மற்றப் படங்கள் ஒரேயடியாக ஒட்டாண்டியாகிவிட்டன. நான்காம் ஐந்தாம் இடங்களைப் பற்றி பேச எதுவுமில்லை என்பதால் மூன்றிலிருந்து தொடங்குவோம். 3. பாண்டிய நாடு நவம்பர் 2ஆம் தேதி வெளியான படம் இரு தினங்களில் 38.12 லட்சங்களை வசூல் செய்துள்ளது. குறைவான திரையரங்குகளில் வெளியான காரணத்தால் இந்தளவு குறைந்த வசூலை பாண்டிய நாடு பெற்றுள்ளது. தீபாவளி படங்களில் […]

தமிழகம் – புதுவையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை

சென்னை, நவ. 4 – தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தகவல்  தெரிவித்துள்ளது. இலங்கை அருகே வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது குமரி கடலோர பகுதியில் தற்போது நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் பலத்த […]

ஓட்டுனர் சோர்வாக இருக்காரா’ எச்சரிக்கும் கருவி கண்டுபிடிப்பு எஸ்ஏ இன்ஜி. கல்லூரி மாணவர்கள் சாதனை

திருவள்ளூர்:பூந்தமல்லி அருகே வீரராகவபுரத்தில் உள்ள எஸ்ஏ.பொறியியல் கல்லூரி மாணவர்கள் எஸ்.கார்த்திகேயன், சி.செந்தில்குமார், ஆர்.பிரபாகரன் ஆகியோர் விரிவுரையாளர் எச்.அன்வர் பாஷாவின் வழிகாட்டு தலின்படி முக அம்சங்களை கொண்டு ஓட்டுனரின் விழிப்புணர்வை கண்காணிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவி மூலம் கண் அசைவை கண்காணித்து கார் ஓட்டுனரின் அயர்வை கண்டறியலாம். கண்காணிப்பு கருவி சென்சார் தகவலை பெற்று, ஓட்டுனரின் அப்போதைய ஓட்டும் திறனை குறிக்கிறது. சென்சாரில் உள்ள வீடியோ ஓட்டுனரை படம் பிடிக்கிறது. ஓட்டுனரின் சோர்வு குறிப்பிட்ட எல்லையை தொடும்போது […]

வலம்புரிச்சங்கு இருக்கும் வீட்டில் யோகம் சேரும். தடைகள் நீங்கும்.

Written by Niranjana  வீட்டில் வலம்புரிச் சங்கை வைத்து பூஜித்தால், லஷ்மி கடாட்சம் நிறைந்து இருக்கும். வலம்புரிச்சங்கின் மெல்லிய ஒலி, பூஜை அறைக்கு இன்னும் சக்தியை அதிகரிக்கும். ஒவ்வொரு இல்லத்திற்கும் குறிப்பிட்ட அதிர்வுகள் இருக்கும். அதில் நல்ல அதிர்வைக் கிடைக்கச் செய்யும் ஆற்றல், வலம்பரிச் சங்கிற்கும் அதன் ஒலிக்கும் இருக்கிறது. அதேபோல, நீத்தார் உடல் உள்ள வீட்டில் துஷ்ட ஆத்மாக்களும் அழையாத விருந்தாளியாக வரும். அதை விரட்டவே மரண வீட்டில் ஒருவித சங்கை ஊதுவார்கள். அந்த சங்கின் […]

அஜீத்துக்கு விஜய் ரசிகர்கள் வைத்த பேனர்

அஜீத்தின் ஆரம்பம் படம் வெற்றி பெற வாழ்த்தி விஜய் ரசிகர்கள் மதுரையில் பேனர் வைத்துள்ளனர். அஜீத்தும், விஜய்யும் தற்போது நண்பர்களாகிவிட்டனர். இதையடுத்து அவர்களின் ரசிகர்களும் நண்பர்களாகிவிட்டனர். இப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு அஜீத் நடிப்பில் ஆரம்பம் படம் வரும் 31ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் அஜீத்தின் ஆரம்பம் படம் வெற்றி பெற வாழ்த்தி மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர். இந்த பேனரில் அஜீத்துக்கு விஜய் வாட்ச் கட்டிவிடுவது போன்ற […]

சாமியாரின் தங்கப்புதையல் கனவு பொய்யாகிப்போனது!

உனாவ்: உத்திரப்பிரதேசத்தில் புதையலை தோண்டும் பணியை தொல்லியல்துறை கைவிட்டது. உனாவ் கிராமத்தில் மன்னரின் பழங்கால கோட்டையில் புதையல் இருப்பதாக வந்த தகவலையடுத்து புதையலை தேடும் பணி நடைபெற்று வந்தது. சாமியார் சோபன் சர்க்கார் கூறிய தகவலையடுத்து தொல்லியல் துறை இந்த ஆய்வில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தொல்லியல் துறை புதையல் தோண்டும் பணியை கடந்த 18ம் தேதி துவக்கியது. ஆனால் சாமியார் கூறியது போல் புதையலுக்கான அறிகுறி இதுவரை தென்படாததால் , புதையல் தோண்டும் பணியை தொல்லியல் துறை […]

மலேசியாவில் டிச.28-ந்தேதி இளையராஜா பாடல்கள் இசை நிகழ்ச்சி

இளையராஜா 1980-களில் இசையமைத்த படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களை பாடும் இசை நிகழ்ச்சி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் டிசம்பர் 28–ந்தேதி நடக்கிறது. இளையராஜா மகனும், இசையமைப்பாளருமான கார்த்திக்ராஜா, டைரக்டர் வெங்கட்பிரபு ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இளையராஜா, யுவன் சங்கர்ராஜா, பவதாரினி, கங்கைஅமரன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாடல்கள் பாடுகின்றனர். எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிகரன், ஹரினி உள்ளிட்ட பிரபல பின்னணி பாடகர்கள் மற்றும் பாடகிகளும் இதில் பங்கேற்று பாடுகிறார்கள். இளையராஜாவின் திரையுலக சேவையை கவுரவிக்கும் விதமாக ‘கிங் ஆப் […]

ஸ்டான்லி மருத்துவமனையில் தொடரும் பைக் திருட்டு

தண்டையார்பேட்டை : வண்ணாரப்பேட்டையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு  1250க்கு மேற்பட்ட நோயாளிகள்  சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகளை பார்க்க வரும் அவர்களது உறவினர்கள் தங்களது பைக்குகளை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்துவது வழக்கம். இந்த பைக்குகள் அடிக்கடி மாயமாகி விடுகிறது. இதுகுறித்து மருத்துவமனையில் உள்ள காவல்நிலையத்தில் பலர் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் கொள்ளையர்களை தேடிவருகின்றனர். இந்நிலையில் மாதவரத்தை சேர்ந்த ரஜினி (35) என்பவர், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »