Thursday 30th April 2026

தலைப்புச் செய்தி :

Author Archive
Stories written by bhakthiplanet.com

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், தான் என்ற அகந்தையை அழிக்க சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சியளித்தார். இதை நினைவுகூரும் வகையில் திருவண்ணாமலையில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்த கார்த்திகைதீப திருவிழா கடந்த 8–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சிகளாக 13–ந் தேதி வெள்ளிதேரோட்டமும், 14–ந் தேதி மகாதேரோட்டமும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் […]

நடிகர் “திடீர்’ கண்ணையா காலமானார்

நடிகர் “திடீர்’ கண்ணையா (76) உடல் நலக்குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த “திடீர்’ கண்ணையாவுக்கு கடந்த மாதம் நுரையீரலில் சளி அதிகமானதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் காலமானார். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கண்ணையா சிறு வயதில் இருந்தே பல்வேறு நாடகக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். “அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் முதன் முதலாக […]

சபரிமலையில் டிச.26 வரை மண்டல கால நெய்யபிஷேகம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல கால நெய்யபிஷேகம் வரும் டிசம்பர் 26ம் தேதி வரை நடக்கிறது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல கால பூஜைகளுக்காக, கடந்த 15ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 26ம் தேதி வரை நடை திறந்திருக்கும். மகர விளக்கு பூஜை விழா டிசம்பர் 30ம் தேதி தொடங்கும். தொடர்ந்து ஜனவரி 20ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.விழாக்கால நெய்யபிஷேகம் நேற்று முன்தினம் காலை தொடங்கியது. தினமும் காலை 11.30 வரை நெய்யபிஷேகம் […]

கூகுள் நிறுவனம் மாணவர்களுக்காக கல்வி அப்பிளிக்கேஷன் வெளியீடு

கூகுள் நிறுவனமானது தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயற்படக்கூடிய அப்பிளிக்கேஷன்களை பயனர்கள் பெற்றுக்கொள்ளும்பொருட்டு கூகுள் பிளே ஸ்டோர் சேவையினை வழங்கி வருகின்றது. தற்போது இச்சேவையில் கல்வி தொடர்பான மற்றுமொரு சேவையை இணைக்கவுள்ளது. Google Play for Education எனும் இச்சேவை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். மாணவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட அப்பிளிக்கேஷன்களை இங்கிருந்து பதிவிறக்கம் செய்து ஆண்ட்ராய்டு சாதனங்களில் நிறுவி பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த அப்பிளிக்கேஷன்களை கிளவுட் முறையில் சக […]

சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

புதுடெல்லி, நவ. 16- கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை ஏற்படுத்தி நாட்டிற்கு பெருமை தேடித்தந்தவர் சச்சின் டெண்டுல்கர். 24 ஆண்டுகாலம் இந்திய அணிக்காக விளையாடிய அவர் தனது 200-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் இன்று ஓய்வு பெற்றார். இந்நிலையில், விளையாட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மன்மோகன்சிங் பரிந்துரை செய்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதனை பரிசீலனை […]

டெல்லி–காஷ்மீரில் மீண்டும் நிலநடுக்கம்

புதுடெல்லி, நவ.16– டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில நாட்களுக்கு முன் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 12.41 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.41 மணி வரை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். இது ரிக்டர் அளவில் 3.1 என இருந்தது. எனவே சேதம் இல்லை. தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் வீடுகள் லேசாக குலுங்கியதால் வீதிக்கு ஓடிவந்தனர். இதற்கிடையே இன்று அதிகாலை மீண்டும் டெல்லியிலும் காஷ்மீரிலும் நில […]

மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்றனர்

சபரிமலை, மண்டல–மகர விளக்கு பூஜையையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. அய்யப்பன் கோவில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜையை முன்னிட்டு 41 நாட்கள், மகரபூஜையை முன்னிட்டு 20 நாட்கள் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டின் மண்டல – மகரவிளக்கு விழாவின் தொடக்கமாக நேற்று, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில் மேல்சாந்தி என்.தாமோதரன் போற்றி குத்துவிளக்கு ஏற்றி நடையை திறந்தார். அப்போது கோவில் […]

புயல் இன்று மாலை கரையைக் கடக்கிறது

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை கரையைக் கடக்கிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது, சென்னைக்கு தென்கிழக்கே 350 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு 150 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த தாழ்வு மண்டலம், இன்று மாலை சென்னைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று […]

கன்னியாகுமரி -மலையில் இருந்த ராட்சத பாறை சரிந்தது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மலை உச்சியில் இருந்த பாறை ஒன்று கீழே விழும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரம் போராடி அந்த பாறையை உடைத்து அப்புறப்படுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப் பட்டது. ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருவதால் மலை உச்சியில் உள்ள 2 டன் எடை கொண்ட ராட்சத பாறை […]

5வது சுற்றில் நார்வே நாட்டு வீரர் கார்ல்சன் வெற்றி

சென்னையில் நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 5வது சுற்றில் நார்வே நாட்டு வீரர் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 9ம் தேதி முதல் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் , நார்வே நாட்டின் கார்ல்சனுடன் விளையாடி வருகிறார். 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியில் முதல் நான்கு போட்டிகளும் டிராவில் முடிந்தன. இந்நிலையில் முதல் வெற்றி யாருக்கு என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு விடையாக நேற்று […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »