Thursday 30th April 2026

தலைப்புச் செய்தி :

Author Archive
Stories written by bhakthiplanet.com

செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பியுள்ள விண்கலமும் மங்கள்யான் விண்கலமும் ஒன்றுக்கொன்று போட்டி அல்ல – ராதாகிருஷ்ணன்

செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்காவின் நாசா அனுப்பியுள்ள மோவன் விண்கலமும் இந்தியாவின் மங்கள்யான் விண்கலமும் ஒன்றுக்கொன்று போட்டி அல்ல என்றும் பரஸ்பரம் உதவி செய்பவை என்றும் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பெங்களூருவில் இருந்து, சென்னை வந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக தலைவர் ராதாகிருஷ்ணன், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சமீபத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலத்தின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, விண்கலம் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார். விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு, பாரத ரத்னா விருது […]

சினேகா கர்ப்பமான செய்தி உண்மையில்லை: உறுதிப்படுத்தினார் கணவர் பிரசன்னா

நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் கடந்த வருடம் காதல் திருமணம் செய்துகொண்டனர். இதைத் தொடர்ந்து இருவரும் சினிமாவில் சில படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், சினேகா கர்ப்பமாக இருப்பதாக இணையதளங்களில் செய்தி வெளியாகி பரபரப்பாகி உள்ளது. இந்த செய்தி உண்மையில்லை என்று பிரசன்னா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பத்திரிக்கை மற்றும் சில ஊடகங்களில் சினேகா கர்ப்பமாக இருக்கிறார் என வெளிவரும் செய்திகள் உண்மையில்லை. தொடர்ந்து நாங்கள் படங்களில் நடித்து வருவதால் இப்போதைக்கு குழந்தை […]

வெடிகுண்டு அச்சுறுத்தலால் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள்

கொலம்பஸ், நவ.19- அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானமான போயிங் எம்டி-80 நேற்று டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் விமான நிலையத்திலிருந்து 133 பயணிகளுடநும், 5 ஊழியர்களுடனும் புறப்பட்டது. இது டல்லாசின் போர்ட் வொர்த் விமான நிலையத்திலிருந்து இயங்கும் திட்டமிடப்பட்ட பயணமாகும். இந்த விமானம் ஓஹியோ மாநிலத்தின் போர்ட் கொலம்பஸ் சர்வதேச விமானநிலையத்தில் தரை இறங்கும் முன்னர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு எச்சரிக்கை தகவல் நிலையத்தாருக்கு கிடைத்துள்ளது. இதனால் விமானம் ஓஹியோவில் தரையிறங்கியபின்னர் அதிலிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு […]

அப்துல் கலாம் தவறி விழுந்ததால் தலையில் அடிபட்டது: உடல் நிலை தேறுகிறது

புதுடெல்லி, நவ. 19– முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாணவ – மாணவிகளை சந்தித்து கலந்துரையாடி வருகிறார். டெல்லியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் திடீர் என்று வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவர் ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கீழே தவறி விழுந்ததில் அவரது தலையின் நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது அவர் […]

அண்டார்டிகா கடலுக்கு அடியில் குமுறும் எரிமலை: விஞ்ஞானிகள் தகவல்

லண்டன், நவ. 19– அண்டார்டிகா கடலுக்கு அடியில் குமுறும் எரிமலை இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பனி பிரதேசமான அண்டார்டிகாவில் கடலுக்கு அடியில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஐஸ் கட்டிகளுக்கு அடியில் ஏதோ ஒன்று மெதுவாக கொழுந்து விட்டு எரிவதை அறிந்தனர். அதைத்தொடர்ந்து ரேடார் மூலம் அப்பகுதியில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பனிக்கட்டிக்கு அடியில் 1 கிலோ மீட்டர் ஆழத்தில் எரிமலையின் சிகரம் தெரிந்தது. அதற்குள்ளே குமுறிக் கொண்டிருக்கும் எரிமலை இருப்பது தெரிய வந்தது. இந்த எரிமலை […]

உலக செஸ் போட்டியின் 8-வது சுற்று டிராவில் முடிந்தது: நெருக்கடியில் விஸ்வநாதன் ஆனந்த்

சென்னை, நவ. 19- சென்னையில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தும், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனும் விளையாடி வருகின்றனர். மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் 7 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் கார்ல்சன் 4.5-2.5 என முன்னிலை பெற்றிருந்தார். இந்நிலையில், இருவருக்கிடையிலான 8-வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், விஸ்வநாதன் ஆனந்த் கறுப்பு காய்களுடனும், கார்ல்சன் வெள்ளை காய்களுடனும் ஆடினர். வெற்றி நெருக்கடியுடன் ஆடிய விஸ்வநாதன் ஆனந்த் கடுமையாகப் […]

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது ஏன்?- ஐக்கிய ஜனதா தளம் தலைவர் கேள்வி

பாட்னா, நவ. 18- கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகள் நிகழ்த்திய சச்சின் தெண்டுல்கர், சமீபத்தில் 200-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி ஓய்வு பெற்றார். அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும் வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், முன்னாள் ஹாக்கி வீரர் தயான் சந்துக்கு பாரத ரத்னா விருதினை வழங்காமல் சச்சினுக்கு வழங்குவது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவானந்த திவாரி […]

உதவி பேராசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு

சென்னை, நவ. 18- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவி பேராசிரியர் பணிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி 25-ம் தேதி தொடங்குகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. நந்தனம் கல்லூரி, லேடி வெலிங்டன் கல்லூரி மற்றும் காயிதே மில்லத் கல்லூரி ஆகிய இடங்களில் இப்பணி நடைபெறும். இதற்கான அழைப்பு கடிதங்கள் மற்றும் தேவையான படிவங்கள் ஏற்கனவே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் […]

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 7-வது சுற்றை டிரா செய்தார் விஸ்வநாதன் ஆனந்த்

சென்னை, நவ. 18- உலக செஸ் சாம்பியன் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் விளையாடி வருகின்றனர். 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் 6 போட்டிகள் முடிவடைந்த நிலையில், கார்ல்சன் 4-2 என முன்னிலையில் இருந்தார். இந்நிலையில் இன்று 7-வது சுற்று போட்டி நடைபெற்றது. 2 சுற்றுகளில் தொடர்ந்து தோல்வியடைந்த விஸ்வநாதன் ஆனந்த் இன்று வெள்ளை காய்களுடனும், கார்ல்சன் கறுப்பு காய்களுடனும் விளையாடினர். […]

வானில் 28 – 29-ந் தேதிகளில் வால் நட்சத்திரம் தோன்றும்

சென்னை, நவ.18- நமது சூரிய குடும்பத்தில், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் உள்பட 8 கிரங்கள் உள்ளன. ஒரு சில கிரங்களைச் சற்றி துணக்கோள்களும் (நிலவு) இயங்குகின்றன. இவற்றை தவிர ஏராளமான விண்கற்களும் சூழன்று வருகின்றன. இவற்றில் சில வால் நட்சத்திரங்களைப் போன்று தோன்றும் அந்த வகையில் ஐசான் என பெயரிடப்பட்ட வால் நட்சத்திரம் , நவம்பா் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் காட்சியளிக்க உள்ளது. இந்த வால்நட்சத்திரம் வினாடிக்கு 50 கி.மீ. வேகத்தில் பறந்து […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »