Sunday 8th June 2025

தலைப்புச் செய்தி :

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரம் | வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் அலைகடலென குவியும் பக்தர்கள் | இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக திகழ்கிறார் குகேஷ்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் தகவல் | மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு 245 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்ப்ட்டுள்ளது. | சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் அதிரடி கைது; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம் | 1750-க்குப் பின்.. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு கோலாகலம்! | ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மா. சுப்பிரமணியன் | மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இணைய சேவை துண்டிப்பு | தி அமெரிக்கன் பார்ட்டி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் அறிவித்தார். 80% ஆதரவு! எலான் மஸ்க் புதிய கட்சி அறிவிப்பு! | அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - எடப்பாடி பழனிசாமி | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்| கோடிகளுக்கு அதிபதி நீங்கள் | You Are a Multi Millionaire | கோடிகளை கொட்டும் 4 ஆம் இடம் | 4th Place That Gives Crores of Money | நீச்சம் பெற்ற கிரகம் வாரி வழங்கும் | Debilitated Planet Will Give lot of Wealth and Prosperity | குடும்ப வாழ்க்கை பாதிக்கும் கிரக அமைப்பு | This Planetary Alignment Will Affect The Family Life |

இங்கிலாந்தின் பிரபல ஹோட்டல் உரிமையாளர்களிடையே எழுந்துள்ள சொத்துப் பிரச்சினை

லண்டன், நவ. 19-

greensiteஇங்கிலாந்தில் உள்ள பிரபலமான ராடிசன் புளூ எட்வர்டியன் ஹோட்டல் நிறுவனங்களின் உரிமையாளர் பஞ்சாபைச் சேர்ந்த பல் மொகிந்தர் சிங் (86) என்பவராவார். தனது இளமைக்காலத்தில் சில வருடங்களை ஆப்பிரிக்காவில் கழித்தபின், இங்கிலாந்திற்கு வந்த மொகிந்தர் சிங் ஹோட்டல் வியாபாரத்தில் நன்கு வளர்ச்சியடைந்தார்.

இவரது மகனான ஜஸ்மிந்தர் சிங் என்பவரே தற்போது இந்த ஹோட்டல் நிர்வாகங்களைக் கவனித்து வருகின்றார். இவர் மீதுதான் ஹோட்டல் நிர்வாகத்தை முழுமையாகத் தன் வசப்படுத்திக் கொண்டதாகவும், தங்களது சீக்கிய மத வழக்கப்படி சொத்துக்களை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்க மறுப்பதாகவும் மொகிந்தர் சிங் வழக்குப் பதிவு செய்துள்ளார். லண்டன் உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகின்றது.

லண்டனின் அடையாளங்களாகக் கருதப்படும் வாண்டர்பில்ட், சவாய் கோர்ட் மற்றும் மேஃபேர் போன்ற இடங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பீடு 415 மில்லியன் பவுண்டுகளாகும். இவர்கள் இருவருமே அங்குள்ள ஆசிய சமூகத்தினரால் பெரிதும் மதிக்கப்படுகின்றவர்கள் ஆவர். ஒரே வீட்டில் வசித்துவரும்போதும் தற்போதுள்ள பிரச்சினையின் காரணமாக இருவரும் பேசிக்கொள்வதில்லை என்றும், மொகிந்தர் சிங்தான் ஹோட்டல் நிர்வாகங்களை ஜஸ்மிந்தர் வசம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகின்றது.

ஆயினும், தற்போதுள்ள வழக்கு மனுவில் கடந்த 2010-ம் ஆண்டில் தனது மகன் தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாக நிர்வாகத்தை எடுத்துக்கொண்டார் என்று மொகிந்தர்சிங் குறிப்பிட்டுள்ளார். இது தனக்கு மிகுந்த மனவருத்தத்தைத் தருவதாகவும், இந்த நிலைமையினால் தனது உடல்நலமும் குறைந்துவிட்டதாகவும் மொகிந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.நடைபெறவிருக்கும் இந்த வழக்கில் அவர் வெற்றிபெறும் பட்சத்தில் குடும்ப சொத்துகளின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு அவருக்கு கிடைக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது.

Posted by on Nov 19 2013. Filed under Headlines, உலக செய்திகள், செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »