Sunday 19th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

தீப தானம் தரும் உயர்ந்த பதவி – மகிழ்ச்சியான வாழ்க்கை.!

நிரஞ்சனாNIRANJHANA

பூர்வ புண்ணிய பலனாக இறைவன் நமக்கு கொடுத்த வசதிகளை கொண்டு மற்றவர்களுக்கு செய்கின்ற உதவியைதான் இறைவன் விரும்புகிறான். இறைவன் மனிதர்களிடத்தில், “நீ இதை எனக்கு கொடுத்தால்தான் நான் உன்   விருப்பத்தை நிறைவேற்றுவேன்.” என்று கூறுவதில்லை. மற்றவர்களுக்கு செய்கிற உதவிகள், இறைவனுக்கே கொடுப்பதுபோல ஆகும். நாம் தெரிந்தோ – தெரியாமலோ செய்கிற உதவிகள்தான்,  நம் வாழ்க்கையில் நாம் எதிர்பார்த்ததை விட இன்னும் அதிக முன்னேற்றங்கள் கிடைத்திட காரணமாகிறது.

குசேலன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சாப்பிட அவல் தந்து செல்வந்தரானார் – இது புராணம்.

அதுபோல, தீப தானம் செய்து, நவாபின்  ஆட்சி காலத்தில் கிருஷ்ணாஜி என்பவருக்கு மிக பெரிய பதவி கிடைத்தது – இது சரித்திரம்.

அது என்ன தீப தானம்? யாருக்கு தானம் செய்தார்?, தீப தானத்தை பெற்றவர் யார்? போன்றவற்றை தெரிந்துக்கொண்டால், தீப தானத்திற்கு இத்தனை மகத்துவம் இருக்கிறதா என்பதை நாம் புரிந்துக்கொள்வது மட்டுமல்லாமல், நாமும் தீப தானம் செய்து நல்ல எதிர்காலத்தை பெற முடியும்.

பரிகாரம் என்பது நம் தலைக்கு கவசம் போல.

பரிகாரம் செய்தால்தான் பலன் கிடைக்குமா? செய்யவில்லை என்றால் நல்ல பலன் கிடைக்காதா? என்கிற தேவையற்ற விவாதத்தில் நேரத்தை செலவழிப்பதில் எந்த லாபமும் இல்லை.  விடிவு காலம் பிறக்க வேண்டுமென விதி இருப்பவர்கள்தான் சாஸ்திரத்தின் அனுகூலங்களை அனுசரித்து பலன் பெற இயலும். அவனின்றி ஓரணுவும் அசையாது என்பதுபோல, இறைவனின் அருளின்றி இறைவனையும் வணங்க முடியாது. (“அவனருளாலே அவன் தாள் வணங்கி..திருவாசகம்.)

விமோசன காலம் வந்தால்தான், பிரச்னைகளுக்கு பரிகாரம் தேட புத்தி யோசிக்கும் என்கிறது புராணம்.

ஸ்ரீ ஸத்யபூர்ண தீர்த்தர்

காஞ்சிபுரத்தில் இருக்கும் வேகவதி தெருவின் அருகில் உள்ள உத்திராதி மடத்தில் ஸ்ரீ ஸத்யபூர்ண தீர்த்தர் என்ற மாத்வ சந்நியாசி, தன் சிஷ்யர்களுடன் தங்கியிருந்து பக்தர்களுக்கு அனுகிரஹம் செய்து வந்தார். இதை கேள்விப்பட்ட கிருஷ்ணாஜி என்பவர், ஸ்ரீஸத்யபூர்ண தீர்த்தரைச் சந்தித்து ஆசி பெற்றார்.

Bhakthi Planetசுவாமிகளின் உபதேசங்களை கேட்டு அவர் மேல் அதிக பக்தி கொண்ட கிருஷ்ணராஜி, சுவாமிகளை குருவாக எண்ணி, தினமும் தீர்த்தரை தரிசித்து ஆசி பெற்றார். அத்துடன், ஸ்ரீஸத்யபூர்ண தீர்த்தருக்கு பல சீடர்கள் இருந்தாலும், கிருஷ்ணாஜிதான் தீர்த்தருக்கு பூஜைக்குறிய பொருட்களை எடுத்து தருவது போன்ற இறைபணிகளையும் செய்து வந்தார்.

“கிருஷ்ணாஜி, நீ எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல் எங்களுக்கு சேவை செய்கிறாய். ஸ்ரீராமபிரானின் அருள் உனக்கு என்றும் கிடைக்கட்டும். நாங்கள் நாளை உன் இல்லத்திற்கு வருகிறோம்.” என்றார் ஸ்ரீஸத்யபூர்ண தீர்த்தர்.

இதை கேட்டு பெரிதும் மகிழ்ந்தார் கிருஷ்ணாஜி.

அன்புள்ளத்துடன் விருந்து

ஒருநாள், தன் சிஷ்யர்களுடன் கிருஷ்ணாஜியின் இல்லத்திற்கு வந்தார் ஸ்ரீஸத்யபூர்ண தீர்த்தர். கிருஷ்ணாஜி, வசதியானவர் இல்லை. ஏழ்மையில் வாழ்பவர். இருந்தாலும், தன்னால் முடிந்தளவில் விருந்து தயாரித்து அதை பவ்யமாக ஸ்ரீஸத்யபூர்ண தீர்த்தருக்கும் உடன் வந்த சீடர்களுக்கும் சமர்ப்பித்து, “சுவாமி, நான் என் வசதிக்கு ஏற்ப விருந்து படைத்துள்ளேன். இதை தாங்கள் தயவு செய்து ஏற்க வேண்டும்.” எனக் கேட்டுக் கொண்டார்.

“கிருஷ்ணா, எவரும் அன்புள்ளத்துடன் நீர் மோர் தந்தாலும், அது அமிர்தம்தான். உள்ளத்தில் அன்பில்லாமல் சலித்துக்கொண்டு அறுசுவை உணவே படைத்தாலும் அதனை சாப்பிடுபவர்களுக்கு அது விஷம் போலதான். அந்த உணவு, சாப்பிடுபவர்களின் உடலையும் பாதிக்கும் அத்துடன், உணவு படைத்தவர்களுக்கும் பல துன்பங்கள் ஏற்படும். அதனால் அன்புள்ளத்துடன் நீ எங்களுக்கு படைக்கும் இந்த வீருந்து, சாதாரணமானதல்ல. அமிர்தமாகும்.” என்று கூறி, கிருஷ்ணாஜி தந்த விருந்தை மகிழ்ச்சியோடு சாப்பிட்டார் ஸ்ரீஸத்யபூர்ண தீர்த்தர்.

தீப தானம்

சுவாமிகள் விருந்து முடிந்து விடை பெறும்போது, “சுவாமி, உங்களுக்கு ஏதாவது ஒரு பொருளை அன்பு பரிசாக தர வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் இந்த ஏழையின் வீட்டில் எதுவும் இல்லை. அதனால் உங்களுக்கு எதை தருவது என தெரியவில்லை.” என்று மனம் கலங்கியபடி நின்ற கிருஷ்ணாஜி, தன் வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தார். அப்போது அவர் கண்களில் குழந்தைக்கு உணவு வைக்கும் சிறு வெள்ளி கிண்ணம் தென்பட்டது.

“சுவாமி, இதோ இருங்கள் வந்து விடுகிறேன்.” என்று கூறி, அந்த வெள்ளி கிண்ணத்தில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி கொண்டு வந்தார் கிருஷ்ணாஜி.

“சுவாமி… இதை நீங்கள் தயவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும்” என வேண்டினார் கிருஷ்ணாஜி.

புன்னகையுடன், கிருஷ்ணாஜி தந்த தீபத்தை பெற்றுக்கொண்டManamakkal Malai சுவாமிகள், “தீப தானம் பல நன்மைகளை தந்திடும் ஆற்றல் கொண்டது. ஒரு சிறு ஒளிதான் இருளை விரட்டுகிறது. அதுபோல, உன்னை பிடித்துக்கொண்டு  வாட்டும் தரித்திரம், இன்றோடு உன்னை விட்டு விலகி, ஸ்ரீராமசந்திரபிரபுவின் அருளால், நீ நல்ல எதிர்காலத்தை பெறுவாய்.” என்று ஆசி கூறி சென்றார் ஸ்ரீஸத்யபூர்ண தீர்த்தர்.

இதன் பிறகு தன் குருவான, ஸ்ரீஸத்யபூர்ண தீர்த்தர் தனக்கு உபதேசித்த தத்துவங்களையும், மந்திரங்களையும், தன்னை பார்க்க வருபவர்களுக்கு உபதேசித்து, அவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்து தியான வகுப்புகளை நடத்தி வந்தார் கிருஷ்ணாஜி. இதனால் மக்கள் மத்தியில் புகழ் பெற்றார்.

ஆற்காடு நவாப்

ஸ்ரீஸத்யபூர்ண தீர்த்தர் கூறியது போல் சில மாதங்கள் கழித்து, கிருஷ்ணாஜி பற்றி கேள்விப்பட்ட ஆற்காடு நவாப்  தாவூத்கான், கிருஷ்ணாஜியை அரண்மனைக்கு வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார்.

அதன்படி, ஆற்காடு நவாப்பை சந்தித்தார் கிருஷ்ணாஜி.

கிருஷ்ணாஜியின் சிறந்த குணத்தையும், அவரின் மதி நுட்பமான பேச்சும், அறிவு திறனும் நவாப்புக்கு மகிழ்ச்சி தந்தது. கிருஷ்ணாஜி மீது மக்கள் வைத்திருக்கும் மதிப்புக்கும் – மரியாதைக்கும் காரணம் இருப்பதை ஆற்காடு நவாப் உணர்ந்து, அரசாங்கத்தின் உயர் பதவியான பிரதான திவானாக கிருஷ்ணாஜியை நியமித்தார் ஆற்காடு நவாப்.

“தீப தானம் செய்த உனக்கு நல்ல எதிர்காலம் தேடி வரும்.” என அன்று கூறிய தம் குருநாதர் ஸ்ரீஸத்யபூர்ண தீர்த்தரை மனதால் நினைத்து வணங்கினார் கிருஷ்ணாஜி.

தீப தானம், எதிர்பாராத யோகத்தை கொடுக்கும். இது உண்மையிலும் உண்மை என்கிறது சாஸ்திரம்.

யாருக்கு தீபத்தை தானம் செய்வது? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும்.

“நீங்கள் வழிபட செல்லும் ஆலயங்களில் எல்லாம் நெய் தீபங்கள் ஏற்றி வணங்கினாலே  அந்த ஆலயங்களில் இருக்கும் இறைவனுக்கே தீப தானம் செய்தது போலதான். இதன் பயனாக நிச்சயம் உங்களுக்கு நல்ல எதிர்காலமும் உயர்ந்த அந்தஸ்தும் அமையும்.!

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

mm ads

Posted by on Apr 10 2013. Filed under Headlines, ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech