Thursday 2nd May 2024

தலைப்புச் செய்தி :

குடல் புழுக்களை கொல்லும் பாட்டி வைத்தியம்

கை கழுவிவிட்டு சாப்பிடுங்கள் என்று எத்தனை முறை கரடியாக கத்தினாலும் சாப்பாட்டை பார்த்தவுடன் கை கழுவக் கூட அவகாசம் கொடுக்காமல் அழுக்குக் கையோடு அப்படியே சாப்பிடுவதால் வந்துத் தொலைக்கிறது வயிற்றுக் கோளாறுகள்.

வயிற்றுப் போக்கு, சீதபேதி தொடங்கி கொக்கிப் புழு, குடல் புழுக்கள் வரை உங்கள் அனுமதியின்றி உங்கள் வயிற்றுக்குள் வாசம் செய்ய வந்து உட்கார்ந்து கொள்வதற்குக் காரணம் அசுத்தம் தான்.

Bhakthi Planetநீங்கள் சாப்பிடும் உணவு அசுத்தமான சூழலில் தயாரிக்கப்படிருந்தாலோ, உணவு பரிமாறும் பாத்திரங்கள் அசுத்தமாக இருந்தாலோ கூட மேலே சொன்ன பாதிப்பு வருவது உறுதி.

இதே போல குழந்தைகளுக்கு நாக்குப்பூச்சி தொந்தரவு அடிக்கடி வர வாய்ப்பு உண்டு. இக்குழந்தைகளை அடையாளம் காண்பது ரொம்ப சுலபாம்.

நாக்குப்பூச்சி உள்ள குழந்தைகளுக்கு வறட்டு இருமல் இருக்கும். வயிறு பெருத்தும், வீங்கியும் பலவீனமாகக் காணப்படுவார்கள். இவர்களும் கைகளை நன்கு கழுவிய பிறகே சாப்பிட வேண்டும். இப்படிச் செய்வதால் நாக்குப் பூச்சி முட்டைகள் வாய்க்குள்  செல்வதைத் தடுக்கமுடியும்.

அதே போல உணவுகளையும் ஈ மொய்க்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். குழந்தைகள், மலம் கழித்த பிறகு கைகளை நன்கு கழுவிடப் பழக்கப்படுத்துங்கள்.

இறைச்சி வகைகளை நன்கு வேக வைக்காமல் சாப்பிட்டால் குடலில் மிக நீளமான நாடா வடிவத்தில் உள்ள நாடப் பழுக்கள் தோன்றும், இதுவும் வயிற்றுப்போக்குடன் வயிறு சம்பந்தப்பட்ட நோயில் போய் முடியும்.

குடல் புழுக்களை அகற்றப் பப்பாளிக்காயை சாறாக்கி அதை 20 மில்லி அளவு எடுத்து தேனுடன் சேர்த்து அருந்தலாம். அல்லது கால் லிட்டர், காய்ச்சிய பசும்பாலில் முப்பது மில்லி ஆமணக்கு எண்ணெய் சேர்த்து அருந்தலாம்.

குடல் பூச்சிகளை அழிக்கும் சக்தி வாய்ந்த வீட்டு வைத்திய மருத்துகள் அனைத்தையும் காலையில் வெறும் வயிற்றில்தான் அருந்தவேண்டும்.

இரண்டு பப்பாளி விதைகளை அரைத்து ஒரு டம்ளர் பாலுடன் சேர்த்து இரண்டு நாட்கள் சாப்பிடவும், விதையில் உள்ள காரிசின் என்ற பொருள் நாக்குப் பூச்சிகளை வேருடன் அழித்துவிடும்.

நன்கு வேகவைக்காத இறைச்சியைச் சாப்பிட்டதன் மூலமாக வயிற்றுப் போக்கு ஏற்பட்டு நாடாப் புழுக்களால் அவதிப்பட்டால் சாம்பல் பூசனி அல்லது பழுத்த ஐந்து பரங்கிக்காயின் விதைகளை எடுத்து அரைத்து, வெறும் வயிற்றில் சாப்பிடவும். இரண்டு மணிநேரம் கழித்து இரண்டு சுத்தமான ஆமணக்கு எண்ணெயைச் இரண்டு தேக்கரண்டி சாப்பிடவும். இந்தமுறை நன்கு பலன் தரும்.

நாடாப் புழுக்களை அகற்ற ஓர் எளிய வழி உண்டு. ஒரு கல்பாக்கைப் பால்விட்டு அரைத்து, அதனுடன் மேலும் கொஞ்சம் பால் சேர்த்து அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

ஒரு சிறிய பெருங்காயத் துண்டைத் தண்ணீரில் கரைத்து வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்ல பலனைத்தரும்.

பலர் கீரைப் பூச்சிகளால்தான் அவதிப்படுகின்றனர். அவர்கள் காலையில் ஒரு கோலிக்கண்டு அளவு நன்கு அரைத்த வேப்பிலையைச் சாப்பிட்டு வந்தால் போதும். ஒரு வாரம் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் போதும். ஒரு வாரம் தொடர்ச்சியாக இந்த முறையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். பிறகு ஒரு வாரம் கழித்து மீண்டும் இந்த முறையில் சாப்பிடவும். இதனால் வயிற்றில் கீரைப்பூச்சிகளோ, வேறு பூச்சிகளோ தோன்றி வளராது.

கசப்புச் சுவையைச் சாப்பிட இயலாதவர்கள், கீரைப் பூச்சிகளை ஒழிக்க, அன்னாசி சாறு அருந்தலாம். அன்னாசியில் உள்ள அமிலச்சத்து கீரைப் பூச்சிகளைக் கொன்று ஒழிக்கிறது.

எல்லா வகையான குடல் பூச்சிகளையும் அகற்றும் சக்தி வெள்ளைப் பூண்டிற்கு உண்டு. வெள்ளைப்பூண்டில் மூன்று பற்களை எடுத்து இலேசாக வதக்கி காலையில் மென்று சாப்பிடவேண்டும்.

கொஞ்சம் மாதுளை இலைகளைப் பறித்து சுத்தமாகக் கழுவிவிட்டு, நன்கு அரைத்து, ஒரு டம்ளர் பாலுடன் அதைச் சேர்த்துக் காய்ச்சவும், இதில் பாதியை முதலில் அருந்தவும். இரண்டு மணிநேரம் கழித்து இரண்டு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயைச் சாப்பிடவும். கீரைப்பூச்சிகள் அழியும்.

சுகாதாரமாக வாழ ஆரம்பித்தால் குடல் பழுக்கள் நீங்கள் இருக்கும் பக்கம் கூட வராது என்பது மட்டும் உறுதி.

மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்

Manamakkal Malai

Posted by on Sep 24 2013. Filed under Headlines, மருத்துவம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech