Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ். பகுதி–6

ஜி.விஜயலஷ்மி.

உடல் நலம் காக்கும் சஞ்சீவிவாழைப்பூ    

வாழைப்பூ துவர்ப்பு தன்மை கொண்டது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு வர பிரசாதம் என்று கூட சொல்லும் அளவுக்கு சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் கொண்டது.  ஹுமோகுலோபினை உயர்த்தும் சக்தி கொண்டது. இருதய நோய், புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் வாழைப்பூவுக்கு இருக்கிறது.  பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அதிக ரத்தபோக்கு ஏற்படாமல் கட்டுபடுத்தும்.

வாயு தொல்லைக்கு, உடலில் அதிக உஷ்ணம் இருப்பதும் ஒரு காரணம். இதற்கு மருந்தும் வாழைப்பூதான். பித்தத்தால் ஏற்படும் தலை சுற்றல், வாந்தி போன்றவை நீங்கும். வயிற்று உப்பசம் குறையும். இரத்த மூல நோய் நீங்கும். கைக்காலில் ஏற்படும் எரிச்சல் நீங்கும். தோல் வியாதிகள், வயிற்றில் உள்ள பூச்சிகளால் ஏற்படும் தொல்லைகளும் நீங்கும்.

வாழைப்பூவில் நார்சத்து, கால்சியம், இரும்புசத்து, பொட்டாசியம், வைட்டமின் போன்ற பல சத்துக்கள் இருக்கிறது. வாழைப்பூவை பொரியலாகவும் அல்லது வடை செய்தும் சாப்பிடலாம். வாரத்திற்கு இரண்டு நாட்கள் உணவில் கண்டிப்பாக வழைப்பபூவை சேர்த்து கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். கொடிய பாக்டீரியாக்களால் ஏற்படும் தொல்லைகளை நீக்கும் ஆற்றல் வாழைப்பூவுக்கு உண்டு. அத்துடன் உடலில் இருக்கும் தீய பாக்டீரியாக்களை வளரவும் விடாது.  அதனால், நல்ல ஆரோக்கியம் தரும் வாழைப்பூவை சஞ்சீவி பூ என்றும் சொல்லாம்.

எந்த நோயையும் அண்ட விடாது –  பழைய சாதம்

பழைய சாதம் என்று சொன்னால் ஏழைகள், கிராமிய மக்கள்தான் அதிகம் சாப்பிடுவார்கள். நகரங்களில் வசிப்பவர்களின் உணவு Fast Foodதான். இதனால்தான் Fastடாகவே நோயாளியாகிறோம். இந்த ஃபாஸ்புட் உணவுகளை சாப்பிட்டு வயிற்றை கெடுத்துக்கொள்வதை விட, ருசியுடன் ஆரோக்கியமும் தருகிற பழைய சாதம் மிகவும் நல்லதாக இருக்கிறது.

சமைத்த சாதத்தில் இரவு தண்ணிர் ஊற்றி ஊற வைத்தால் அந்த சாதத்தில் நல்ல பாக்டீரியாக்கள் உற்பத்தியாகிறது. அவை குடலை பாதுகாக்கிறது.  உணவு நன்றாக செரிக்கசெய்கிறது. மறுநாள் அந்த பழைய சாதத்தை சாப்பிட்டால், பசி அடங்குவதுடன் வயிற்று புண், மலச்சிக்கல் மூலநோய் வாயுகோளாறு போன்றவை தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறது. பழைய சாதத்தில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் இருக்கிறது.

பழைய சாதம் பலருக்கு சாப்பிட ஆசையாகதான் இருக்கிறது. ஆனால் பல நேரங்களில் பழைய சோறு கெட்டுபோய்விடுகிறதே, என்ன செய்வது? என்று பலரின் கேள்வி.

முன்பெல்லாம் அரிசியை பொங்க வைத்து அந்த கஞ்சியை வடித்து விடுவார்கள். இதனால் தேவை இல்லாத நச்சுகள் கஞ்சியோடு வெளியேறிவிடும். அதனால் அந்த சாதம் இரண்டு நாட்கள் கூட கெடாமல் இருந்தது. ஆனால் இப்போது சமையல் குக்கரில்தான். சாதத்தின் கஞ்சி தண்ணிர் வெளியேற வாய்ப்புகள் இல்லை. இதனால்  காலையில் சமைத்த சாதம் இரவே கெட்டு போகிறது. அதனால், பழைய சாதம் சாப்பிட விரும்புகிறவர்கள், குக்கரில் சாதம் செய்யாமல் பாத்திரத்தில் சமைத்து, அரிசி பொங்கியவுடன் அந்த கஞ்சியை வடிகட்டிவிட்டு சாதத்தில் நல்ல தண்ணிர் ஊற்றி, மறுநாள் சிறிது உப்பு கலந்து சாப்பிட்டால் தேவாமிர்தம் போல இருக்கும்.

வயிற்றுக்கு எந்த கோளாறும் வராது. உடல் குளிர்ச்சி பெறும். ஆரோக்கியமும் கிடைக்கும். அலர்ஜி, அல்சர்,  தோல் வியாதி போன்றவை நீங்கும் என்கிறார்கள் இன்றைய மருத்துவர்கள். இதைதான் நம் பெரியவர்கள் பாடல் மூலமாக அன்றே சொன்னார்கள் –

ஆற்று நீர் வாதம் போக்கும்

அருவிநிர் பித்தம் போக்கும்

சோற்றுநிர் இரண்டையும் போக்கும்!”

வியாதியை சொல்லும் உள்ளங்கை. இயற்கை மருந்து என்ன?

உள்ளங்கையை பார்த்து ரேகை சாஸ்திரம் சொல்வதுபோல வியாதியையும் சொல்ல முடியும். அது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம். அத்துடன் அதற்கு தீர்வு என்ன என்பதையும் அறிவோம்.

ஒருவரின் உள்ளங்கை சிவப்பாக இருந்தால், பித்தம் அதிகமாக இருக்கும். இதற்கு மருந்து இஞ்சியையும், தேனையும் கலந்து வாரத்திற்கு இரண்டு நாள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தீரும்.

ஒருவரின் உள்ளங்கையில் அடிக்கடி வியர்க்கிறது என்றால் அவர் மனதில் அவர்கள் அறியாமலே பயம் உண்டாகுகிறது. எதற்கு எடுத்தாலும் பயம். பூனையை பார்த்தால் பயம், எலியை பார்த்தால் பயம் என்று அடுக்கிக்கொண்டேபோகலாம். இதற்கு மருந்து எதுவும் இல்லை. திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல், அவர்களுக்குள் இருக்கும் பயத்தை அவர்களே நீக்கினால்தான் உண்டு.

மூச்சி பயிற்சியும் மன தைரியம் தரும். நன்றாக காற்று உள்ள இடத்தில் சம்மனம் இட்டு, மூச்சி பயிற்சி செய்யலாம். மூச்சை நன்றாக இழுத்து, சில விநாடிகள் நிறுத்தி பிறகு மெதுவாக விட வேண்டும். இதுபோல் பத்து முறை தினமும் செய்ய வேண்டும். இதனால் மனம் அமைதியாகும். மனம் அமைதியானாலே மனதில் இருக்கும் பயம், கவலை தீரும்.

உங்கள் கை வெளுத்து இருந்தால், ஏதே ஒரு கவலை உங்கள் மனதை வாட்டிக்கொண்டு இருக்கிறது. பழைய காலத்தில் நடந்த சில சம்பவங்களை மனதில் போட்டு குழப்பிக்கொண்டு, துன்பங்களை நீங்களே தேடி கொள்கிறீர்கள். மனதெளிவு இல்லாமல் அவதிபட்டுகொண்டு இருக்கிறீர்கள். உடல் வியாதிகளுக்கு மருந்து இருக்கிறது. மனவியாதிகளுக்கு மருந்து – மனம்தான்.

மனதை அலைபாயவிடாமல் அமைதியாக வைத்திருங்கள். நல்ல இசையை கேளுங்கள்.   மூச்சி பயிற்சி செய்யலாம். அமைதியான இடத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம். இதனால் மனதில் இருக்கும் கவலைகள்  விலகி, நமது செயல்களும் வெற்றியாகும்!.

மேலும் இயற்கை மருத்துவம் பற்றி அறிய மருத்துவம் பகுதிக்கு கிளிக் செய்யவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on May 23 2013. Filed under செய்திகள், மருத்துவம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech