Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

எதிர்பாரா அதிர்ஷ்டம் தரும் புஷ்கல யோகம்.!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் தேவை புத்திசாலிதனம். அது இருந்தாலே பணம், புகழ், நண்பர்கள் என்று அனைத்தையும் பெற்று விடலாம்.

ஒரு ஊரில் ஏழை ஒருவன் இருந்தான். அவன் வறுமையின் கொடுமையில் இருந்தாலும் இறைவன் அவனுக்கு புத்திசாலியான மகனை தந்திருந்தான். அதனால் அந்த ஏழை தன் மகனுக்கு நல்ல படிப்பு தர வேண்டும் என விரும்பினான். அதனால் அந்த நாட்டை ஆளும் அரசரிடம் சென்று, ”அரசே, நான் பரம ஏழை. ஆனால் இறைவன் அருளால் எனது மகன் நல்ல புத்திசாலியாக, கல்வியில் ஆர்வம் உள்ளவனாக இருக்கிறான். அவன்  அறிவு திறனை அதிகப்படுத்த அவனுக்கு நல்ல கல்வியும் அவசியம். ஆனால் அதற்கான போதிய பண வசதி என்னிடம் இல்லை.” என்று கூறினான்.

அதற்கு அரசர் சொன்னார். ”காக்கைக்கு தன் குஞ்சி பொன் குஞ்சி என்பதை போல, மகன் மடையனாக இருந்தாலும் அறிவாளியை போலதான் எல்லா பெற்றோருக்கு தோன்றும். ஆகவே நீ உன் மகனை நாளை அழைத்து வா. நான் அவனை சோதித்து பார்க்கிறேன். உண்மையில் அவன் புத்திசாலியாக இருந்தால், அரசின் உதவிகள் அவனுக்கு உடனடியாக கிடைக்கும்.” என்றார் அரசர்.

அரசர் நிச்சயம் நம் மகனுக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையில், மறுநாள் தன் மகனை அழைத்துக் கொண்டு ராஜ சபைக்கு சென்றான் அந்த ஏழை.

சிறுவனை கண்ட அரசர், “என்னிடம் ஒரு நாய் இருக்கிறது. அந்த நாய் மனிதர்களை பார்த்தால் குரைக்காது. ஆனால் விலங்குகளை பார்த்தால் அதற்கு கோபம் வரும். அந்த கோபம் வெறியாகவும் மாறும். நீ என்ன செய்ய வேண்டுமென்றால், எந்த விலங்கின் உதவியும் இல்லாமல், கிறுக்குதனமான சேஷ்டைகளும் செய்யாமல் அமைதியாக ஒர் இடத்தில் நீ நின்றுகொண்டு,  அந்த நாய்க்கு கோபத்தை உண்டாக்க வேண்டும். அது உன்னால் முடியுமா.?” என கேட்டார் அரசர்.

யோசிக்க கூட அவகாசம் எடுத்துக்கொள்ளதா அந்த சிறுவன் உடனடியாக,“நிச்சயமாக என்னால் முடியும் அரசே. உங்கள் நாயை வரவழையுங்கள்.” என்றான்.

ராஜசபைக்கு அந்த நாய் வந்தது. அனைவரையும் சுற்றி பார்த்து விட்டு ஒன்றும் செய்யாமல் அமைதியாக அமர்ந்து விட்டது.

“அரசே முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று வேண்டும்.” என்றான் அந்த சிறுவன்.

அந்த சிறுவன் கேட்டது  போல் முகம் பார்க்கும் கண்ணாடி கொண்டு வரப்பட்டது. அந்த கண்ணாடியை அந்த நாயின் எதிரே வைத்தான் சிறுவன்.

அடுத்த நிமிடமே அந்த நாய், நம் எதிரில் இன்னொரு நாய் வந்து விட்டது என்று எண்ணி கோபம் அடைந்தது. பலமாக குரைக்க ஆரம்பித்தது. ஆவேசமாக அங்கும் இங்குமாக ஓடி குரைத்தது. கண்ணாடி மீது பாய்ந்து, கண்ணாடியை உடைத்தது. தன் முகத்தையும் கிழித்துக்கொண்டது.

சிறுவனின் சமயோசித்த புத்தி கூர்மையை அரசர் பாராட்டினார். ”மற்ற விலங்கின் உதவி இல்லாமல் அந்த நாய், தன் முகத்தை பார்த்தே கோபம் அடைய செய்துவிட்டாய் சபாஷ்.” என்றார் சிரித்தபடி. அத்துடன், ”உன் உயர்கல்விக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும்.” என்ற அரசர், அந்நாட்டின் இளவரசன் படிக்கும் பாடசாலையிலேயே அந்த ஏழை சிறுவனையும் சேர்த்தார். இளவரசனும் அவனும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். இருவரும் இளைஞர்களாக வளர்ந்த பிறகு, இளவரசன், அரசன் ஆனான். தன் நண்பனான ஏழையின் மகனை அமைச்சராக்கினான்.

மதி நுட்பம் இருந்தாலே பலர் மதிக்கும் அளவுக்கு வாழ்க்கை உயரும். ஒருவரின் மதிநுட்பத்தை அறியவும், அவர்கள் வாழ்வில் நல்ல ஏற்றம் பெறவும் உதவுகிறது ஜாதகத்தில் அமையும் “புஷ்கல யோகம்”.

புஷ்கல யோகம் என்றால் என்ன?

Bhakthi Planetலக்கினாதிபதியும், லக்கினத்திற்கு 2-க்குரியவனும் இணைந்து இருப்பதே புஷ்கல யோகமாகும். இந்த அமைப்பு இருந்தால், நல்ல அறிவ திறனுடன், வசதி வாய்ப்புக்கும் பஞ்சமில்லை. இன்று வறுமையில் இருந்தாலும், வருங்காலத்தில் பெருமைபடும் அளவில் வாழ்க்கை அமையும். நல்லவனுக்கு நல்லவன். வில்லனுக்கு வில்லன். புத்தி கூர்மை உடையவன். இந்த ஜாதகரின் பேச்சுக்கள் – எண்ணங்கள் அத்தனையும் பணத்தின் மீதே இருக்கும். நல்ல உழைப்பாளி.

ஆனால், இந்த புஷ்கல யோக கூட்டு கிரக அமைப்பு, 6,8,12-ல்  மறையக் கூடாது. லக்கினத்திற்கு 2,3,4,5,7,9,10,11- ல் இருந்தால்தான் யோகமே. அதிலும் குறிப்பாக, 2-ல், 5-ல், 9-ல், 11-ல். இருந்தால் மிக மிக விசேஷம். அதிஷ்டம் அள்ளி கொடுக்கும்.

மேஷ லக்கினமாக இருந்து, லக்கினாதிபதி செவ்வாய், 2-ம் அதிபதி சுக்கிரனுடன் இணைந்து இருந்தாலும், ரிஷப லக்கினமாக இருந்து, லக்கினாதிபதி  சுக்கிரன், 2-ம் அதிபதியான புதனுடன் இணைந்து இருந்தாலும் ,

மிதுன லக்கினமாக இருந்து, புதன் – சந்திரன் இணைந்திருந்தாலும்,

கடக லக்கினமாக இருந்து, சந்திரன் – சூரியன் இணைந்திருந்தாலும்,

சிம்ம லக்கினமாக இருந்து, சூரியன் – புதன் இணைந்திருந்தாலும்,

கன்னி லக்கினமாக இருந்து, புதன் – சுக்கிரன் இணைந்திருந்தாலும்,

துலா லக்கினமாக இருந்து, சுக்கிரன் – செவ்வாய் இணைந்திருந்தாலும்,

விருச்சிக லக்கினமாக இருந்து, செவ்வாய் – குரு இணைந்திருந்தாலும்

தனுசு லக்கினமாக இருந்து, குரு – சனி இணைந்திருந்தாலும்,

கும்ப லக்கினமாக இருந்து, சனி – குரு இணைந்திருந்தாலும்,

மீன லக்கினமாக இருந்து, குரு – செவ்வாய் இணைந்திருந்தாலும், ”புஷ்கல யோகம்” அமையும்.

இந்த இரண்டு கூட்டு கிரகங்கள் 6,8,12-ல் மட்டும் அமரக்கூடாது. அப்படி இருந்தால், யோகம், சோகமாக போய் விடும் என்று சொல்வதற்கில்லை. இந்த கூட்டணியோடு லக்கினத்திற்கு 3,6,8 க்குரியவன் இணைந்து 3,6,8,12-ல் இருந்தாலும், யோகம் வேலை செய்யும்.

ஆகவே, லக்கினாதிபதி – தனாதிபதி இணைந்து, அதுவும் 2,4,5,7,9,10,11-ல் இருந்தால் யோகத்திற்கு பஞ்சம் இல்லை. இன்று பசியோடு இருந்தாலும், விரைவில் அவன் கல்லா பெட்டியில் பணம் நிரம்பும்.!

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

mm ads

Posted by on Mar 5 2013. Filed under Headlines, செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech