Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

திருமண வரம் தரும் இராமகிரி ஸ்ரீ கல்யாண நரசிம்மர்

திருமண வரம் தரும் இராமகிரி அருள்மிகு ஸ்ரீ கல்யாண நரசிங்கப்பெருமாள்

திருமண வரம் தரும் இராமகிரி அருள்மிகு ஸ்ரீ கல்யாண நரசிங்கப்பெருமாள்

நிரஞ்சனாNIRANJHANA

அருள்மிகு கல்யாண நரசிங்கப்பெருமாள் தேவஸ்தானம், ராமகிரி, வேடசந்தூர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் வட்டத்தில் குஜிலியம் பாறை என்ற இடத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறது ராமகிரி. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து கரூர் செல்லும் பேருந்து தடத்தில் ராமகிரி என்று கேட்டு இறங்கலாம். பிரகலாதனுக்கு அருளிய ஸ்ரீநரசிம்மர், கல்யாண நரசிம்மராக இங்கே அருள் பாலிக்கிறார்.

எந்த ஜீவராசிக்கும் இல்லாத பெருமை மனித பிறவிக்கு இருக்கிறது. அதுதான் பொறுமை. ஆனால் மனிதர்களாக பிறந்தவர்கள் சில நேரத்தில் பொறுமையை இழப்பதால், பெருமையையும் சேர்த்தே இழக்கிறார்கள். எது நடந்தாலும் அது இறைவனின் அனுகிரகத்தால்தான் நடக்கிறது. ஆகவே நன்மையையும் தீமையையும் கண்டு அஞ்ச தேவையில்லை.

நம்மை படைத்தவனுக்கு நம்மை காக்க தெரியாதா? அமைதியாக இருந்தாலே எறும்புக்கும் உணவளிப்பது போல் மனித வாழ்க்கைக்கும் தேவையான அனைத்தையும் இறைவன் தருவான்.

பொறுமையை எடுத்து காட்டும்  கதை

ஒரு ஊரில் ஒரு ஞானி இருந்தார். அவருக்கு பல சீடர்கள் இருந்தார்கள். அதில் ஒரு சீடர் ஞானியிடம் சென்று, ” குருவே, உங்கள் பெருமைகளையும் இறைவனை அடையும் வழியையும் எளிய முறையில் இந்த ஊர் மக்களுக்கு சொல்ல போகிறேன். என்னை ஆசிர்வதித்து அனுப்புங்கள்” என்றான்.

அதற்கு குருநாதர், ”நல்லவர்களும் பொல்லாதவர்களும் கலந்துதான் ஊரில் இருப்பார்கள். எல்லோரும் உன் பேச்சை கேட்டு விட மாட்டார்கள்.” என்றார் குரு.

ஆனால் சீடனோ, “கெட்டவர்களையும் நல்லவர்களாக மாற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது குருவே” என்றான்.

“உன்னை பொல்லாதவர்கள் அடிப்பார்கள். அப்போது  நீ என்ன செய்வாய்?” என்றார் குருநாதர்.

“அவர்களை பொல்லாதவர்களாக நினைக்காமல் நல்லவர்கள் என்றே என்னுவேன். ஏனேன்றால், ஆயுதங்களால் தாக்காமல்  அடிப்பதோடு நிறுத்திவிட்டார்களே என்று சாமாதானம் அடைவேன்.” என்றான் சீடன்

 “ஒருவேளை உன்னை ஆயுதத்தால் தாக்கி உன் உயிரையே பறிக்க நினைத்தால் அப்போதும் அவர்களை நல்லவர்கள் என்றே என்னுவாயா?”  என்றார் குரு.

“நிச்சயமாக. அவர்கள் நல்லவர்களே. இந்த உலகத்தில் இருந்து எனக்கு விடுதலை கொடுத்து இறைவனை காண அனுப்பினார்கள் என்று என்னுவேன்.” என்றான் சீடன்.

இதை கேட்டு குரு மகிழ்ந்தார். “நீ பொறுமைசாலிதான். நிச்சயம் Bhakthi Planetஉன்னால் கொடியவர்களையும் திருத்த முடியும். சென்று வா. வெற்றி உனக்கே” என்று ஆசி வழங்கி அனுப்பினார்.

ஆம். தீயவர்களையும் அன்பால் திருத்த முடியும். அப்படி அந்த தீயவர்கள் திருந்தாவிட்டால் அவர்களால் ஏதோ ஒரு நன்மை நடக்க இருக்கிறது என்று கருத வேண்டும்.

நரசிம்ம அவதாரம்

ஸ்ரீமகாவிஷ்ணு,  ஏன் நரசிம்ம அவதாரம் எடுத்தார் என்று  பொதுவாக பலர் அறிந்த சம்பவம்தான். இரண்யகசிபு தன் வரட்டு கௌரவத்தால் தன் மகன் என்றும் பாராமல் பிரகலாதனை கொன்று விட துணிந்தான். எது நடந்தாலும் அதை பற்றி கவலைபடாமல் “ஓம் நமோ நாராயணாய” என்று உச்சரித்து கொண்டே இருந்தான் பிரகலாதன்.

கொடியவனிடம் இருந்து தன் பக்தனான பிரகலாதனை காக்க  ஸ்ரீமந் நாராயணன், நரசிம்ம அவதாரம் எடுத்து வந்து இரண்யனை வதம் செய்தார்

இரண்யனை வதம் செய்த பிறகும்  நரசிம்மரின் உக்கிரம் (கோபம்) தணியவில்லை.

பொதுவாக பெற்றோர், தங்களின் மகனுக்கு குடும்ப பொறுப்பு வர வேண்டும் என்றால், அவன் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை நிறுத்த வேண்டும் என்றால், அவனுக்கு திருமணம் செய்து வைத்தால் அடங்கி விடுவான், பொறுமையும்  கடமையும் அவனுக்கு வந்து விடும் என்று நினைப்பார்கள்.

அதுபோல் நரசிம்மரின் கோபத்தை தணிக்க அவரை குடும்பஸ்தராக ஆக்க வேண்டும் என்பதால்,  இவருக்கு ஸ்ரீதேவி, பூதேவி என்ற இரு தேவிகளையும் திருமணம் செய்து வைத்தார்கள் சிவப்பெருமானும், பிரம்மாவும்.

அதன்படி நரசிம்மரின் ஆவேசம் தணிந்து திருமணம் நடந்த இடம்goodlife matrimony திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கிற ராமகிரி என்கிற இந்த இடத்தில்தான். இங்கு  ஸ்ரீநரசிம்மர், கல்யாண நரசிம்மராக காட்சி தருகிறார்.

ஸ்ரீதேவியும் பூதேவியும், துர்கா தேவியிடம் சென்று, “உங்கள் சகோதரரின் கோபம் தணிந்திருந்தாலும்,  நீங்களும் எங்களோடு இருக்க வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டதால் துர்காதேவி தன் சகோதரரான ஸ்ரீநரசிம்மர் இருக்கும் இந்த ஆலயத்திலேயே தங்கிவிட்டாள். அதனால் இங்குள்ள அம்பாள், “ஸ்ரீவிஷ்ணுதுர்கை” என்று அழைக்கப்படுகிறாள்.

இந்த ஊரில் ஆலயம் தோன்றிய சம்பவம்  

இந்த ஊரை ஆண்ட சிற்றரசர்  வசந்த கதிரழக நாயக்கர்,  தன் வம்சத்தில் தடைபடும் திருமணம் நடந்தால் கல்யாண நரசிம்மருக்கு ஆலயம் எழுப்புவதாக வேண்டிக்கொண்டார். அவர் வேண்டுதலுக்கு செவி சாய்த்த இறைவன், சிற்றரசரின் இல்லத்தில் கெட்டி மேளம் கொட்ட செய்தார்.

மகிழ்ச்சியடைந்த சிற்றரசர்,  தாம் சொன்னபடி கல்யாண நரசிம்மருக்கு இந்த இடத்தில் ஆலயம் எழுப்பினார். அதுபோல பல சிற்றரசர்களின் வம்சத்தினருக்கும் திருமணம் பாக்கியம் தந்ததால் மகிழ்ந்த சிற்றரசர்கள், இந்த ஆலயத்திற்கு நிறைய திருப்பணிகளை செய்து கோயிலையும் பெரியதாக கட்டினார்கள். தன்னை வணங்கும் பக்தர்களின் இல்லத்திலும் கெட்டி மேளம் கொட்ட அருள்பாலிக்கிறார் ஸ்ரீகல்யாண நரசிம்மர்.

அதனால் இந்த ஆலயத்தில் கால் வைத்தாலே தடைபடும் சுபகாரியங்கள் அனைத்தும் ஸ்ரீகல்யாண நரசிம்மரின் அருளாசியால் இனிதே நடக்கிறது என்று கூறுகிறார்கள் பக்தர்கள்.

இங்கு உள்ள ஸ்ரீவிஷ்ணுதுர்கைக்கு இராகுகாலத்தில் எழுமிச்சை தீபம் ஏற்றினால் திருமணம் விரைவில் நடக்கும். !

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved


Posted by on Feb 2 2013. Filed under Home Page special, Photo Gallery, ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், பெருமாள் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech