Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

சொல்லிலும் செயலிலும் விவேகம் நிறைந்த சுவாமி விவேகானந்தர்.!

நிரஞ்சனாNIRANJHANA

சுவாமி விவேகானந்தர். பெயருக்கு ஏற்றபடி பேச்சியிலும் விவேகத்துடன் திகழ்ந்தவர். காந்தம் இரும்பை ஈர்ப்பது போல, ஆன்மிக நெறியில் உலகத்தையே தன் பக்கம் ஈர்த்தவர்.  

எதிராளிகள் இவரை சீண்டினாலும், அவர்களுக்கான பதிலை அவர்கள் மனம் புண்படாதபடி சொல்லும் ஆற்றல் சுவாமியிடம் இருந்தது.

1891 ராஜஸ்தான் ஆல்வார் சமஸ்தானத்துக்குச் சென்றார் சுவாமி விவேகானந்தர். அங்கு மன்னர் மங்கள்சிங், விவேகானந்தரிடம், “விக்ரக  வழிபாட்டில் தமக்கு உடன்பாடியில்லை” என்று கூறினார்.

இதுவே வேறு ஒருவரிடம் இதுபோல் யாராவது சொன்னால் அங்கே ஒரு வீண் விவாதமே நடக்கும்.

வீண் விவாதம் செய்பவர்கள் விவேகியாக இருக்க முடியாது. அவர்களே அறியாமல் அவர்களின் அறியாமையை வெளியுலகத்திற்கு தெரிவித்து விடுவார்கள்.

ஆனால் சுவாமி விவேகானந்தரின் சொல்லிலும் செயலிலும் விவேகம் இருக்கும்.

விக்ரக  வழிபாட்டில் தமக்கு உடன்பாடியில்லை என்ற அரசரிடம், “உங்கள் உருவத்தை ஓவியமாக வரைந்திருந்தால் கொண்டு வர சொல்லுங்கள்.” என்றார். அதன்படி அரசரின் உருவ ஓவியம் கொண்டுவரப்பட்டது.

இந்த உருவ படத்தின் மீது யாராவது எச்சில் துப்புங்கள் என்று அங்கிருந்தவர்களிடம் சொன்னார் விவேகானதர். ஆனால் பயத்தில் யாரும் அப்படி செய்யவில்லை. விவேகானந்தர், மன்னரை நோக்கி, “அரசரே, இது வெறும் உருவபடம்தான். சாதாரண ஜட பொருள்தான். அதனால் நீங்களாவது இதன் மேல் எச்சில் துப்பலாம்.” என்றார்.

ஆனால் அரசரோ பதில் பேசாமல் மௌனமாக இருந்தார். பிறகு விவேகானந்தர் பேசினார்.

“இது வெறும் உருவ படம்தான் என்றாலும், படத்தில் வரையபட்டிருக்கும் உருவம் மன்னராகிய உங்களுடையது.  அரசருக்கு மரியாதை தர வேண்டும் என்ற எண்ணமும், பயமும் இஙகே உள்ள அனைவரின் மனதிலும் இருக்கிறது. உங்கள் உருவ படத்துக்கு கூட மரியாதை தரப்பட வேண்டும் என்றுதான் அரசராகிய நீங்களும் விரும்புகிறீர்கள். இதுதான் எங்கள் இந்து சமயம் சொல்கிற உருவ வழிபாடு-விக்ரக வழிபாடு. . இறைவன் எங்கிருந்தாலும், எந்த ரூபத்தில் இருந்தாலும் இறைவன் இறைவன்தான். ஆன்மிக ஞானத்திற்கு முதல் நிலை உருவ வழிபாடு, விக்ரக வழிபாடு. இறைவனை உருவ வழிபாடு செய்வதால் அவன் நம் அருகில் துணையாக இருப்பதாகவே நம் மனம் ஏற்றுக்கொள்கிறது. அந்த மனத்தெளிவை தந்து அவனை முன்னேற்றத்தை நோக்கி கைபிடித்து அழைத்து செல்கிறது இந்து சமயம்.” என்றார் சுவாமி விவேகானந்தர்.

இதை கேட்ட அரசர், விவேகானந்தரின் விளக்கத்தை பாராட்டி போற்றினார்.

இப்படி பக்குவமாக பதில் சொல்லும் திறமை சுவாமி விவேகானந்தரிடம் இருந்தது.

நெற்பயிருக்கிடையே எப்படி புல் முளைக்கிறதோ அதுபோல், வாழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் எதிரிகள் முளைத்து விடுவார்கள். தன்னைவிட அவர்கள் வளர்ந்து விட்டார்களே என்ற பொறாமையால் கீழ் தரமாக விமர்ச்சித்து, இந்த வழிலாவது புகழ் கிடைத்துவிடாதா என்கிற நப்பாசையும் சிலருக்கு இருக்கத்தான் செய்யும். அதை கண்டு அஞ்சக் கூடாது. காரியம் பெரிதா வீரியம் பெரிதா என்று இருக்க வேண்டும். இதற்கு ஒரு அருமையான பொன்மொழியை சொன்னார் சுவாமி விவேகானந்தர்.

“மலைபோன்ற சகிப்புதன்மை, இடைவிடாத முயற்சி, எல்லையற்ற பரிசுத்தமான உணர்வு, தெய்வ நம்பிக்கை இந்த நான்கும் எவரிடத்தில் இருக்கிறதோ அவர்களுக்கு வெற்றிகள் குவியும்.” என்றார்.

யார் என்ன சொன்னாலும், மலைபோல் மன உறுதியை அசைக்காமல் சகித்துக்கொண்டு இருக்க வேண்டும். எடுக்கும் வேலையில் தடை ஏற்பட்டாலும் முயற்சித்துக்கொண்டே இருக்க வேண்டும். எண்ணங்கள் தெளிவாகவும், தெய்வ நம்பிக்கையோடும் இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்கள் நிச்சயம் வெற்றி பெற்ற மனிதர்களாக திகழ்வார்கள். !

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jan 11 2013. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech