Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

நல்லவை யாவும் பெருக விநாயகப் பெருமானை வணங்குவோம்

நிரஞ்சனாNIRANJHANA

தெய்வங்களை தரிசிக்க நாம் திருக்கோயில்களுக்குள் நுழையும்போது முதலில் நம்மை வரவேற்பது விநாயகர்தான். அதுபோல, யாகங்கள், சுபநிகழ்ச்சிகளின் தொடக்கம் போன்ற சுபகாரியங்களில் முதல் மரியாதை விநாயகப் பெருமானுக்குதான் தரவேண்டும். அவருக்கு நாம் தரும் மரியாதையை பொறுத்தே நமது எந்த செயல்களுக்கான வெற்றியும் அமைகிறது. நம்பிக்கை உள்ளவர்களை எந்த கணத்திலும் கைவிடாத கடவுள் தும்பிக்கைநாதனாம் கணபதி. தெய்வங்களுக்கு மட்டுமல்ல, பூலோக மக்கள் அனைவருக்கும் செல்ல பிள்ளையாக இருக்கிறார் பிள்ளையார்.

நள சக்கரவர்த்தி, சனீஸ்வரரால் அவதிப்பட்டு திருநள்ளாறு சென்று, சனி பிடியில் இருந்து நிவர்த்தி அடைந்து தப்பித்தார். அதன் பிறகு அரசராக மீண்டும் பதவி ஏற்றார். இனியும் முன்பு போல இன்னல்களில் மாட்டக் கூடாது என்றும் எண்ணினார் நளன்.

கீழே விழுந்தவர்கள் எழும்போது மீண்டும் கீழே விழாமல் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கையாக இருப்பார்கள் அல்லவா. அதுபோல, நளனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, அதற்கான வழியை கௌதம முனிவரிடம்  கேட்டார்.

அதற்கு மாமுனிவர், “நீ விநாயகரை வணங்கினால் நவகிரகங்களின் தொல்லைகள் ஏற்படாது. ஆகவே நீ தினமும் விநாயகரை வணங்கி வா. சங்கடஹர சதுர்த்தி அன்று, விநாயகப்பெருமானுக்கு விரதம் இருந்து வணங்கினால் இன்னும் விசேஷம், இதனால்  இன்னல்கள் இல்லா வாழ்க்கை அமையும்.” என்றார் கௌதம முனிவர். முனிவரின் அறிவுரைபடி நடந்தார், தன் வாழ்நாளை மகிழ்ச்சியாக கழித்தார் நள சக்கரவர்த்தி.

சிறு வயதில் கஷ்டபட்டாலும் கடைசி காலத்தில் நிம்மதி இருக்க வேண்டும். அந்த நிம்மதி இருந்தால்தான் பிறவி எடுத்ததற்கு ஒரு சந்தோஷம் இருக்கும்.

அந்த சந்தோஷம் கடைசி காலம்வரை விநாயகப்பெருமானின் அருளாசியால் கிடைக்கும்.

ஒவ்வொரு நாளும் இனிய நாளாகவும், வெற்றி திருநாளாகவும் இருக்க விநாயகருக்கு ஏற்ற எளிய பரிகாரம் இருக்கிறது. அதை தினமும் செய்து வந்தாலேபோதும், வினைகள் யாவும் விலகும். தடைபடும் அனைத்து நற்காரியங்களும் கைகூடும். மகிழ்ச்சி பெருகும். அது என்ன எளிய பரிகாரம்? என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும் அல்லவா.? சொல்கிறேன்.

செல்வ கணபதி

விநாயகரை வணங்கினால் அல்லல்கள் நீங்கும் என்பதை அறிந்தோம். பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னிக்கான ஸ்தலம் திருவண்ணாமலை. இந்த திருவண்ணாமலையில் இருக்கும் செல்வ விநாயகரை வணங்கினால் நம்முடைய வாழ்வில் இருக்கும் தொல்லைகள், தீவினைகள், துயரங்கள், தடைகள் அனைத்தும் நீங்கி செல்வம் பெருகும்.

செல்வகணபதியை நேரில் சென்று தரிசிப்பது விசேஷம் என்றாலும், இயலாதவர்கள், செல்வ கணபதி படம் இருந்தாலும் அதை வீட்டில் வைத்து வணங்கலாம். அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகர் சிலையையோ அல்லது கணபதி படத்தை செல்வகணபதியாக மனதில் நினைத்து, தினமும் இங்கே, நான் தந்துள்ள கணபதிக்கு உகந்த இந்த பாடலை பாடி வந்தால், மிகவும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

அத்துடன், கொஞ்சம் அருகம்புல்லை சிறிது நேரம் உங்கள் வலது கையில் வைத்திருந்து இந்த பாடலை 9 முறை பாடி, அந்த அருகம்புல்லை விநாயகருக்கு சமர்பித்து, அதிலிருந்து மூன்று அருகம்புல்லை உங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம், பெண்கள் தங்களின் பர்சில் வைத்துக்கொள்ளலாம். இதனால் விசேஷ பலன்கள் உண்டாகும்.

பாடல்

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்ததொல்லைபோம் போகாத்துயரம்போம் , நல்லகுணமதிகை, அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக்கணபதியைக்கைதொழுதக்கால்.!

நல்லவை யாவும் பெருக விநாயகப் பெருமானை வணங்குவோம்.!

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jan 2 2013. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், பிற கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech