Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

உடல் ஆரோக்கியத்தையும் வசீகரத்தையும் தரும் பிருகு முனிவர் சொன்ன எளிய மந்திரம்

Article by: Niranjhana

எத்தனை கோடி சம்பாதித்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் முழுவதும் புண் வைத்துக்கொண்டு பட்டுதுணியில் சட்டைபோட்டாலும் மனதில் தெம்பு இருக்குமா? நிச்சயம் இருக்காது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகத்தில் வஞ்சனையும், பொறாமையும், அடுத்தவர்களை கெடுக்கும் துர்புத்தியும் இருந்தாலும் உடல் என்ற கோவிலில் இருந்து சந்தோஷம் என்கிற இறைவன் வெளியேறி விடுகிறான். இதனால் அழகாக பிறந்தவர்களும்  தனக்கதானே சூனியம் வைத்துக்கொள்வதுபோல தங்களுடைய தீய எண்ணத்தால் பாதிப்படைகிறார்கள். அவர்களின் முகமும் வசீகரம் இல்லாமல் பேய் பிடித்தது போல மாறிவிடுகிறது.

ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா கருப்பாக இருந்தாலும் அவனின் கள்ளம்கபடமற்ற மனதால்தான் உள்ளம் கவர்ந்த கள்வன் என செல்லமாக அழைக்கப்படுகிறான்.

உடல் ஆரோக்கியமும் வசீகர முகமும் பெற வழிபட வேண்டிய தெய்வம் – பராசக்தி.!

பிருகுமுனிவர் சோமகாந்த மன்னருக்கு சொல்லிய எளிய மந்திரத்தை நீங்களும் சொன்னால் நிச்சயம்  நல்ல உடல் ஆரோக்கியமும் வசீகரமான முகமும் பெறலாம்.

அசுரர்களின் தலைவர்களாக சும்பன், நிசும்பன் ஆகியோர் விளங்கினர்.

சும்பனின் மகளை பார்த்த தேவலோகமே ஆச்சரியப்பட்டது. அந்த அளவுக்கு தேவலோக கன்னிகளை விட நல்ல தேஜஸாக மிக அழகாக இருந்தாள்.

எப்படி அசுர குலத்தில் பிறந்த இந்த மங்கை தேவலோக பெண்களை விட அழகாக காட்சியளிக்கிறாள்? என்று தேவர்கள் ஒரு ரிஷியிடம் கேட்டார்கள்.

அதற்கு அந்த ரிஷி, “எவர் அன்னை ஆதிபராசக்தியை வணங்குகிறவர்களோ அவர்கள் அந்த பராசக்தியை போலவே அழகுடையவர்களாக மாறுவார்கள். சும்பனின் மகள் பராசக்தியின் பக்தை. அதனால் அசுரகுலத்தில் பிறந்தவளாக இருந்தாலும் தேவலோக மங்கையை விட அழகானவளாக இருக்கிறாள்.” என்றார் அந்த ரிஷி.

பராசக்தியை வணங்குகிறவர்கள் எந்த குலத்தில் பிறந்திருந்தாலும் அவர்களின் முகம் தெய்வீக கலையாகவும், அழகாகவும் மாறும் என்றார் ததீசி என்ற முனிவர்.

ஒருமுறை, சோமகாந்தன் என்கிற மன்னரின்  உருவம், பார்க்கவே அருவறுப்பாக மாறியது. உடலெல்லாம் புண் – வலி போன்றவை அதிகமாக வாட்டியது மன்னருக்கு.

அதனால் பிருகு முனிவர், மன்னர் படும் துன்பத்தை பார்த்து கலங்கி, “அரசே நான் கூறும் மந்திரத்தை திரும்ப திரும்ப ஜபித்தால் இந்த உருவம் நீங்கி .பழையபடி நல்ல சுந்தரமான அம்சத்தை பெறுவீர்கள்.” என்றார்.

அந்த மந்திரம் –

ஓம் சுமுகாய நம
ஓம் ஏக தந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்கினராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்பகன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வாய நம!

பிருகு முனிவர் கூறிய இந்த அற்புத மந்திரத்தை அப்படியே சொன்னார் சோமகாந்த மன்னர். இதை பல தடவை நம்பிக்கையுடன் சொல்லி வந்தார். என்ன ஆச்சரியம்… மன்னரின் உடலில் இருந்து இத்தனை வருடம் ஆட்டி படைத்த நோய் சில வாரங்களிலேயே படிபடியாக நீங்கி பழைய சுந்தரமான உருவத்தை பெற்றார்.

உடலில் ஏதாவது ஆறாத காயமோ அல்லது உடலில் ஏதாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருந்தாலும், இந்த மந்திரத்தை கூறினால் பாதகம் இல்லாமல் நல்லபடியாகவே குணம் ஆகும்.

கோவில் குருக்களுக்கு தச்சனை கொடுத்தாலும், இறைவனின் ஆசி இருந்தால்தான் கோவில் பிரசாதம் கிடைக்கும் என்றார் சுவாமி ஐயப்பன்.

அதேபோல்தான், நோய்க்கு மருந்து – மாத்திரைகளை சாப்பிட்டாலும் இறைவன் நம் மீது கருணை வைத்து ஆசி வழங்கினால்தான் எந்த நோயும் விரைவாக குணம் அடையும்.

இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்றிட அன்னை ஆதிபராசக்தியை போற்றி வணங்குவோம்.!

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation CLICK Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Nov 30 2012. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech