Monday 20th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

அடிமை நிலை மாற்றும் பாலைவனநாதர்




நிரஞ்சனா

அருள்மிகு பாலைவனநாதர் திருக்கோயில், திருப்பாலைத்துறை, பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்)

உலக வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் வரும். அவை நல்ல திருப்பமாகவும் இருக்கலாம் அல்லது பாதகமாகவும் மாறலாம். வாழ்க்கை என்பது சிறுகதை அல்ல, அது ஒரு பெரிய நாவல் போல. யார் எந்த நேரத்தில் வருவார்கள்? யாரால் பிரச்சனை – திருப்பம் ஏற்படும்? என்று ஆரம்பத்தில் அறிய முடியாது.

ஒருவருக்கு நன்மை செய்தாலும் அந்த நன்மைகளை அனுபவித்தவர்கள், நன்மை செய்தவர்களையே சில சமயம் வீழ்த்த நினைப்பார்கள். உட்கார இடம் கொடுத்தால் மடத்தை பிடுங்குவான் என்பதுபோல, தாருகாவனத்து முனிவர்கள் அகிலலோகத்திற்கு தலைவனான ஈசனை அழித்து, தாங்களே இந்த உலகத்தை கட்டி காக்க வேண்டும் என்ற பேராசையாலும், அந்த தகுதி தங்களுக்கும் இருக்கிறது என்ற ஆணவத்திலும் தீய மந்திரங்கள் சொல்லி ஒரு பிரமாண்ட யாகம் செய்து, அந்த யாகத் தீயிலிருந்து ஒரு புலியை தோன்றச் செய்து, சிவபெருமானை கொல்ல ஏவி விட்டார்கள்.

அந்த புலியும் வேகமாக சிவபெருமானை அழிக்க நெருங்கியது. ஆக்குவதும் அழிப்பதும் சிவபெருமான் தானே! அதனால் தன்னை தாக்க நெருங்கி வந்த புலியை கொன்று அந்த புலிதோலையே தனக்கு ஆடையாகவும் உடுத்திக்கொண்டார் ஈசன்.

இதுவே இறைவன், புலிதோல் ஆடை அணிந்ததற்கு காரணமாக இருந்தது. ஈசனிடம் புலி போர் செய்த இடத்தில், இனி கொடியவர்களால் எந்த ஜீவராசிகளுக்கும் ஆபத்து நேரக்கூடாது என்ற எண்ணத்தில் அந்த இடத்திலேயே சுயம்புவாக தோன்றினார் பாலைவனநாதராக இறைவன்.

பாவத்தை போக்கும் பாலைவனநாதர்

பாண்டவர்களுக்கு பெரிய உதவியாக இருக்க ஒருவர் வருவார். அவரின் மிகபெரிய உதவியால் பாண்டவர்களுக்கு வெற்றி அமையும் என்று தன் ஞானத்தால் அறிந்தார் தௌமிய முனிவர். அதனால் அர்ஜுனனிடம், “நீ பாலைவனநாதரை வணங்கினால் உனக்கு வெற்றி கிட்டும்.” என்றார். அர்ஜுனனும் இங்கு பாலைவனநாதரை தரிசித்து வில் வித்தையில் மேலும் தேர்ச்சி பெற்றார். அத்துடன் கல்யாணகோலத்தில் இருந்த தவளவெண்ணகையாள் அம்பிகையை தரிசித்த பிறகு, கங்கையில் நீராட செல்லும் போது, அங்கு பாதாளலோக மங்கைகளும் நீராட வந்திருந்தார்கள். அதில் உலூபி என்ற நாககன்னியை காதலித்து திருமணம் செய்தார் அர்ஜுனன்.

தௌமிய முனிவர் கூறியது போல், அர்ஜுனனுக்கும் உலூபிக்கும் மகனாக பிறந்தார் அரவான். அரவானும் பாண்டவர்களின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

எந்த பிரச்னையும் தீர ஒரு வழி பிறக்கும். அந்த வழி இறைவனால் வகுக்கப்படுகிற வழியாகதான் இருக்கும். அதை மாற்றவும் தடுக்கவும் யாராலும் முடியாது. பாலைவனநாதர் மனம் வைத்தால், எந்த பிரச்சனையும் பனி போன்று விலகி நல்வழி கிடைக்கும்.

பாலைவனநாதரை வணங்கினால் பாவங்கள் போகும். அதை அப்பர் சுவாமிகள் ஒரு பதிகத்தில் தெரிவித்து இருக்கிறார்.

உரத்தினால் அரக்கன் உயர் மாமலை
நெருக்கினானை நெரித்தவன் பாடலும்
இரக்கமான அருள் செய்த பாலைத்துறை
கரத்தினால் தொழுவார் வினை ஓயுமே“

உணவுகளஞ்சியம்

சோழ மற்றும் விஜயநகர பேரரசு காலத்தின் கல்வெட்டுகள் இந்த கோவிலில் இருக்கிறது. இங்கு உலகபுகழ் பெற்ற உணவு களஞ்சியம் இருக்கிறது. இந்த உணவு களஞ்சியத்தில் 12 ஆயிரம் கலம் (டன்) நெல் சேமிக்கலாம் என்கிறார்கள் தொல்பொருள் ஆய்வு துறையினர். அதனால் இந்த நெற்களஞ்சியம் உலகபுகழ் பெற்றது.

திருமணபாக்கியம் தரும் தவளவெண்ணகையாள்

பாலைவனநாதரை தரிசித்தால் பாவங்கள் தீரும். இங்கு திருமணகோலத்தில் இருக்கும் தவளவெண்ணகையாள் அம்மனை தரிசித்தால் திருமணம் தடைபடுபவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். இந்த தலத்தை திருமணக்கோலத்தலம் என்றும் அழைக்கிறார்கள்.

சிவன் பிஷ்டை கோலத்தில் முனிபத்தினிக்கும் முனிவருக்கும் முதலில் காட்சி கொடுத்ததால், பாலைவனேஸ்வரரை வணங்கினால் மற்றவர்களிடம் கையேந்தும் நிலை வராது.

இங்கு வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம், எம தீர்த்தம் போன்றவை இருக்கிறது. அதனால் இந்த தீர்த்தங்களையெல்லாம் தரிசித்தாலே எமதர்மராஜனால் வரும் ஆபத்து தடுக்கப்படும். தீராத வியாதியையும் பாலைவனநாதர் தீர்த்து வைப்பார் என்கிறது ஸ்தலபுராணம். அதுபோல் இந்திர தீர்த்தத்தை தரிசித்தாலும் இந்திரனை போல் சுகபோகமான வாழ்க்கை அமையும். அடிமை நிலையில் இருப்பவர்களுக்கு மேன்மை தருவார் பாலைவனநாதர்.

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Mar 19 2012. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், சிவன் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech