Wednesday 8th May 2024

தலைப்புச் செய்தி :

மும்பாதேவி – பகுதி – 2




சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
நிரஞ்சனா
காலங்கள் மாறியது. மும்பை கடற்கரைப் பகுதியில் கோலி என்கிற இனத்தைச் சேர்ந்த மீனவர்கள் வசித்தார்கள். அந்த மீனவ இனத்தில் முங்கா என்ற பெண் இருந்தாள். முங்கா அங்கு இருந்த மும்பாரக்தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள் முங்கா. அவள் எப்போதும் மும்பாரக்தேவியின் வழிப்பாட்டில் இருந்து தேவிக்கு சேவை செய்து வந்த காரணத்தால், அந்த பகுதி மீனவர்கள் அன்னை மும்பாரக்தேவியை செல்லமாக அந்த மீனவபெண்ணின் பெயரிலேயே அழைக்க ஆரம்பித்தார்கள். அதாவது மும்பாரக் தேவியை, முங்காதேவி என்று அழைத்தார்கள்.

தேவிக்கு சிறியதாக கோவிலை கட்டினார்கள் மீனவர்கள். அந்த இடம் விக்டோரியா டெர்மினஸ் இருக்கும் பகுதியில் அமைந்திருந்தது. பிறகு ஆண்டுகள் கடந்து, ஆங்கிலேயர்கள் நம் இந்திய மண்ணில் கால் வைத்த பிறகு, முங்காதேவி இருக்கும் இடத்தில், ராணுவப் பயிற்சிக்காக குதிரைகளில் சவாரி செய்ய இடம் தேவைபட்டதால் அந்த கோவிலை வேறு இடத்திற்கு மாற்றும்படி ஆங்கிலேயர்கள் உத்தரவிட்டார்கள்.

தற்போது இருக்கும் இடத்தில் கோவில் கட்டி மும்பாரக்தேவியை பிரதிஷ்டை செய்தார் பாண்டு என்கிற ஒரு மராத்திய தங்க வியபாரி. இடம் மாறியதால் முங்காதேவி என்கிற பெயரும் மாறி “மும்பாதேவி” என்று அழைத்தார்கள்.

சிங்கவாகனம் தரும் மன தைரியம்

ஆலயத்தின் நுழைவாயிலின் அருகிலேயே பித்தளையால் ஆன பெரிய சிங்கம் காணப்படும். இது தேவியின் வாகனம். இந்த வாகனம் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்கிறார்கள் பக்தர்கள். இதன் அருகிலேயே தேங்காய் உடைக்கும் பாறையும் இருக்கிறது. அந்த பாறையில் தேங்காய் இரண்டாக உடைத்து, அந்த தேங்காய் நீரை மும்பாதேவியின் தேரில் இருக்கும் சிங்கத்திற்கு அபிஷேகம் செய்கிறார்கள். இப்படி செய்தால் கோழையும் வீரனாவான் என்ற நம்பிக்கை இருக்கிறது.

திருமணம் பாக்கியம் தரும் மும்பாதேவி

மராத்திய பெண்கள் தங்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்க வேண்டும் என வேண்டி வழிப்படுகிறார்கள். அவர்களின் வேண்டுதல் நிறைவேறுகிறது. திருமணம் நடந்த பிறகு கணவன்-மனைவி ஜோடியாக வந்து நேர்த்தி கடனை செலுத்துகிறார்கள். தங்கள் வசதிகேற்ப சிறிய குண்டுமணி அளவிலாவது தங்கத்தை மும்பாதேவிக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள். இந்த தங்கம் என்றும் மதிப்பு குறையாமல் இருப்பது போல, தாங்களும் குடும்ப வாழ்வில் நல்ல மதிப்போடு வாழ அருள் செய்ய வேண்டும் என்று மும்பாதேவியிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

ஜாதகதோஷத்தை போக்கும் ஹோமம் விபூதி

வருடத்தில் இரண்டு பெரிய உற்சவங்கள் நடைபெறுகிறது. நவராத்திரியை ஒட்டி ஒன்பதுநாள் உற்சவமும், டிசம்பர் மாதத்தில் மார்கசிர்ஷா என்னும் உற்சவத்தை ஒட்டி ஐந்து நாட்களும் விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.

நவராத்திரி தொடங்கும் சமயத்தில் கோவிலுக்கு அருகில் உள்ள இடத்தில் மண்ணை சுத்தப்படுத்தி தண்ணீல் தெளித்து, ஒரு சதுர வடிவில் பாத்தி போல அமைக்கிறார்கள். அந்த இடத்தில் நெல்லும் இதர தானிய விதைகளையும் விதைக்கிறார்கள். அதனை சுற்றி அகல் விளக்குகளை ஏற்றி வைக்கிறார்கள். அத்துடன் நடுவில் பித்தளை குடம் வைத்து அதில் தண்ணீரை நிரப்பி அதில் ஐந்து வெற்றிலை, செப்புக் காசு, கொட்டைப்பாக்கு ஒரு பேரிச்சம் பழம் போன்றவை வைக்கிறார்கள்.

அதேபோல் அந்த இடத்தை நல்ல அலங்காரம் செய்கிறார்கள். இதை காட்ஸ்தாபனா என்று அழைக்கிறார்கள். விதைக்கபட்ட இடத்தில் தினசரி தண்ணீர் தெளிக்கிறார்கள். அந்த விதை இரண்டு நாளில் முளைக்க ஆரம்பித்து விடுகிறது.

நவராத்திரி சமயத்தில் முதல்நாளில் இருந்து மும்பாதேவிக்கு அழகான ஆடைகளை அணிவித்து அழகு பார்க்கிறார்கள்.

ஏழாம்நாள் ஆலயத்தில் ஹோம குண்டத்தில் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் உரிக்காத மட்டைத் தேங்காயையும், நெய்யையும் யாகத்தில் செலுத்துகிறார்கள்.

ஹோமம் சிறப்பாக நடந்து முடிந்த பிறகு, அந்த ஹோம குண்டத்தில் இருந்த விபூதியை பிரசாதமாக பக்தர்கள் பெறுகிறார்கள். அந்த ஹோம விபூதியை தினமும் நெற்றியில் இட்டு வந்தால், ஜாதகதோஷங்கள் நீங்கும்.

ஆலயத்தில் விதைத்த நெற்பயிர்களையும் தானியங்களும் முளைத்த பிறகு அதை பிரசாதமாக பக்தர்களுக்கு தருகிறார்கள். அந்த பிரசாதத்தை பெற்றவர்கள் மும்பதேவியின் ஆசியை பரிபூரணமாக பெற்றவர்கள் ஆகிறார்கள் என்பது ஐதீகம்.

மும்பாதேவியை வணங்கினால் வாழ்நாள் முழுவதும் மங்களகரமான வாழ்க்கையை மும்பாதேவி அருளுவார். “ஜெய் ஜெய் மும்பாதேவி.”

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

தமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும்.  ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.

Posted by on Feb 25 2012. Filed under அம்மன் கோயில், ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech