Monday 20th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

வேண்டுவதை முழுவதும் தரும் வியாக்ரபுரீஸ்வரர்




நிரஞ்சனா  

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புலிவனத்தில் உள்ளது,-ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்.

இறைவனிடம் தமக்கு பண வசதி வேண்டுவோர் சிலர். நல்ல குடும்ப வாழ்க்கை வேண்டுவோர் சிலர், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் சிலர். இப்படி அது வேண்டும் – இது வேண்டும் என்று வழக்கமான வேண்டுதல்கள்தான் இறைவன் காதில் விழும். ஆனால் ஒரு பக்தரின் வேண்டுதல் இவற்றில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டு இருந்தது. தமக்கு இரவிலும் கண் தெரியவேண்டும், மலை உச்சியிலும் மர உச்சியிலும் மலர்களை ஏறி பறிப்பதற்கு ஏதுவாக புலி நகங்கள் வேண்டும் என்று ஈசனிடம் வேண்ட, அவர் விரும்பிய படி அவ்வாறே புலி உருவத்தை வரமாக பெற்றார் அந்த சிவபக்தர். அதனால் அவர் வியாக்ரபாதர் என்றும் புலிக்கால் முனிவர் என்றும் அழைக்கப்பட்டார். அவர் எதற்காக இப்படி ஒரு வரம் விரும்பி பெற்றார் என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.

தேனீ முகராத மலர் வேண்டும் 

தம் தந்தையான மாத்தியந்தினரிடம் சிவபெருமானின் பெருமைகளை உபதேசித்து அறிந்த மகன், அன்றுமுதல் தில்லை நடராஜப் பெருமானை வழிப்பட்டு வந்து சிறந்த சிவபக்தனாக திகழ்ந்தான். சிவவழிப்பாட்டுக்கு புத்தம் புதிய மலர்களை பறித்து பூஜிக்க வேண்டும். அதுவரையில் அந்த மலர்கள் யாருடைய கரமும்படாத மலராகவும் தேனீ கூட முகராத மலராக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

அதற்கு நள்ளிரவில் மலர்கள் மலர்ந்த உடன் தேனீ தேடி வருவதற்கு முன்னதாகவே அந்த மலரை பறித்து சிவபெருமானுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று விரும்பிய மாத்தியந்தரின் மகன், அதற்கு இரவில் கண் தெரியவும் மலை உச்சியிலோ மர உச்சியிலோ மலர்கள் பூத்து இருந்தாலும் அதனை எளிதில் பறித்து வரும் விதமாக தமக்கு புலி உருவம் இருந்தால் போதும் என்று விரும்பி, சிவபெருமானை நினைத்து தவம் செய்து, அதன்படி புலி உருவத்தை வரமாக பெற்றார்.

அன்றுமுதல் வியாக்ரபாதர்  என்றும், புலிக்கால் முனிவர் என்றும் அழைக்கப்பட்டார்.  

இந்த வரத்தை பெற்ற பிறகு வியாக்ரபாதர் முனிவர், மலர்களை தேடி தேனீகள் வருவதற்கு முன்னதாகவே அந்த மலர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், எவ்வளவு இருளான நேரத்தில் இருந்தாலும், அவருக்கு புலி உருவம் இருந்ததால் மிக எளிதாக மலர்களை பறித்து சிவவழிபாடு செய்து சிறந்த சிவதொண்டராக திகழ்ந்தார்.

வியபாரியால் காயம் அடைந்த சிவலிங்கம் 

ஒருநாள் ஒரு வியபாரி, தன் வியபார விஷயமாக சென்றுகொண்டிருந்த போது வியாக்ரபாதர் வசிக்கின்ற காட்டு வழியாக வந்துவிட்டார். அப்போது அந்த வியபாரியின் கண்ணில்பட்டது ஒரு சிவலிங்கம். அது வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவர் பூஜித்து வரும் சிவலிங்கம். “இறைவா…எனது வியபாரம் இன்று நல்லவிதமாக நடந்தால், நான் தங்களுக்கு இங்கே தினமும் வந்து பூஜை செய்கிறேன்.” என்று வேண்டிக் சென்றார் அந்த வியபாரி.

வியபாரி எதிர்பார்த்ததை விட அன்றைய தினம் வியபாரத்தில் பெரிய லாபம் கிடைத்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த அவ்வியபாரி, வீடு திரும்பும் போது,  தாம் வாக்குறுதி அளித்தபடி காட்டுபகுதியில் இருந்த அந்த சிவலிங்கத்தை மலர்களால் அலங்கரித்து பூஜை செய்து விட்டு சென்றார்.

சில மணி நேரம் கழித்து வியாக்ரபாத முனிவர், சிவபூஜை செய்ய மலர்களுடன் வந்தார். வந்தவருக்கு பெரும் கோபம். “நான் கஷ்டபட்டு இரவெல்லாம் கண் விழித்து, பூக்கள் பூத்தவுடன் அந்த பூக்களை தேனீக்கள் தீண்டுவதற்கு முன்னதாக மரத்தில் ஏறி மலர்களை பறித்துக்கொண்டு வந்தால், நீ எவனோ ஒருவன் தந்த ஏதோ சில மலர்களை ஏற்றுக் கொண்டாய். உனக்கு அவ்வளவு திமிரா.?“ என்று கோபமாக கூறி கொண்டே, தன் கூர்மையான புலி நகத்தால் சிவலிங்கத்தின் மீது பாய்ந்து கீறினார்.

ஒரு தாய்-தந்தைக்கு இரு பிள்ளைகள் இருக்கும்போது, அந்த இரு பிள்ளைகளின் மீதும் பாசம் காட்டினாலும், ஏதோ ஒரு சமயத்தில் ஒரு பிள்ளையின் மீது மட்டும் அன்று கூடுதலாக பாசம் காட்டினால், அது இன்னொரு பிள்ளைக்கு கோபம் ஏற்படுத்தும் அல்லவா. அதுபோல இறைவனை தம் தாய்-தந்தையாக நினைத்து வரும் வியாக்ரபாதர், அந்த இறைவன் தம் இன்னொரு பிள்ளைக்கும் பாசம் காட்டும்போது இயற்கையாக கோபம் வருவது நியாயமே. இந்த கோபம் அடுத்த நிமிடம் மறைந்துவிடும். காரணம் இது பிள்ளை கோபம். இந்த கோபம் நீடிக்காது என்று இறைவனுக்கு தெரியாதா.?

புலிக்கால் முனிவரால் தாக்கி கீறல்பட்ட வடு, இன்றுவரை அந்த சிவலிங்கத்தின் மீது இருக்கிறது.

வியாக்ரபாதர் முனிவர் பூஜித்து வழிப்பட்டதால் இறைவன் “வியாக்ரபுரீஸ்வரர்” என்று பெயர் பெற்றார்.

கருவறையில் வியாக்ரபுரீஸ்வரர் உயரமாக இருக்கிறார். தலைமுடியுடன் காட்சி தந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.

அம்பாள் அமிர்தகுஜலாம்பாள். அம்பிகையை வணங்கினால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

வியாக்ரபுரீஸ்வரரை வணங்கினால், வியபாரம் ஏற்றம் பெறும். வேலை வாய்ப்பு கிடைக்கும். உடல்பிணி நீங்கும். செவ்வாய் ஹோரையில்  அம்பாளையும் வியாக்ரபுரீஸ்வரரையும் வணங்கினால், விரோதிகளால் உண்டான தொல்லை நீங்கும். சுக்கிர ஹோரையில் வியாக்ரபுரீஸ்வரரையும்,  வணங்கி, பூமாலை அணிவித்தால், திருமண தடை விலகும். திருமண வாழ்க்கையில் இருக்கும் கசப்புகளும் நீங்கும்.

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

தமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும்.  ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.

Posted by on Jan 23 2012. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், சிவன் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech