Friday 19th April 2024

தலைப்புச் செய்தி :

அற்புதம் நிகழ்த்தி நோய் தீர்த்த பாபா

  மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு

              பகுதி – 14 

 

சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்  

நிரஞ்சனா

அதிர்ஷ்டராவ். இவர் ஒரு கிருஸ்துவர். இவருடைய மனைவியின் உடல்நிலையில் ஒரு பிரச்சினை இருந்தது. அது என்ன கோளாறு? என்று சொல்ல தெரியாமல் குழம்பினார்கள் மருத்துவர்கள். அந்த பெண்ணை குணப்படுத்த முடியாமல் திணறினார்கள். இதை கேள்விப்பட்ட ராவின் நண்பர், ஷீரடி சாய்பாபாவின் மகிமையை சொல்லி, ஷீரடி சாய்பாபாவின் படத்தையும் கொடுத்து, “தினமும் இந்த மகானை வணங்கி வா. நிச்சயம் உனக்கு நல்ல வழி பிறக்கும். நீ கிருஸ்துவர் என்பதற்காக தயங்காதே. தன் மதத்தை உன் மீது திணிக்க மாட்டார் பாபா. அவர் நம் தந்தையை போன்றவர். குழப்பம் அடையாமல் ஷீரடி சாய்பாபாவை வணங்கு.” என்றார் நண்பர்.

நண்பர் கொடுத்த மகான் ஷீரடி சாய்பாபாவின் படத்தை  தன் அன்பு மனைவிக்காக வீட்டில் வைத்து வணங்கினார் அதிர்ஷ்ட ராவ்.

“பல மாதங்களாக மனைவியின் உடல்நிலை கோளாறு, வியாபாரத்தில் பிரச்சினை, இந்த இன்னல்களில் இருந்து நம்மை பாபா காப்பாற்றுவாரா?” என்ற சந்தேகம் அதிர்ஷ்டராவுக்கு இருந்தாலும்,

எப்படி கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவு கிடைக்கிறதோ, அது போல் இறைவன் எல்லோரையும் கவனித்து கொண்டுதான் இருக்கிறார். பாபாவும் நம்மை காக்க வந்த இறைவன். அவரை ஒரு நிமிடம் நினைத்தாலே நாம் அவருடைய குழந்தையாகி விடுகிறோம். தம் குழந்தை அழும் குரலை கேட்டு தாய் ஒடி வருவதை போல், நம்முடைய கஷ்டங்களை மனதால் பாபாவிடம் கூறி வேண்டினால், அவர் எங்கிருந்தாலும் நமக்கு உதவ முன் வருவார். நிச்சயம் பக்தர்களின் துன்பங்களுக்கு பரிகாரம் கிடைத்து, அவர்களின் வாழ்க்கை ஏறுமுகமாக அமையும். இதனை அதிர்ஷ்டராவின் மனைவி அதிகமாகவே நம்பினாள். நோயின் காரணமாக அவளுக்கு வேதனை ஏற்படும் நேரத்திலெல்லாம் “சாய்பாபா” “சாய்பாபா” என்று அவள் மனமும் உதடும் முணுமுணுத்தப்படி இருந்தது.  

கனவா – நிஜமா..? புரியாத புதிர்

ஒருநாள் இரவு அதிர்ஷ்டராவின் மனைவி இருந்த மருத்துவமனை அறையில் இருந்தபோது ஒரு கனவு கண்டாள். அந்த கனவை பற்றி தன் கணவனிடம் சொல்கிறாள்.

“நம்முடைய உறவினர் ஒருவர் நோயால் இறக்கிறார். இறந்த போனவரின் ஆத்மா, என்னை  தரதரவென முடியை பிடித்து இழுத்து மருத்துவமனையில் இருக்கும் ஜன்னல் வழியாக கீழே தள்ள முயற்சிக்கிறது. அந்த ஆத்மாவின் பிடியில் இருந்து என்னை காப்பாற்றும்படி பாபாவிடம் கதறுகிறேன். அப்போது அந்த ஜன்னல் பக்கம் தீ எரிந்துக் கொண்டு இருக்கிறது. அந்த தீயில் அந்த ஆத்மாவை வீசி எரிகிறார் சாய்பாபா.

பிறகு பாபாவிடம், “உங்களை நான் இப்போதுதான் வணங்க ஆரம்பித்தேன். இருந்தாலும் என் மேல் உங்களுக்கு பாசமும் கருணையும் இருக்கிறதே, என் குரல் கேட்டவுடனே நீங்கள் என்னை காப்பாற்ற வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கும் போது, என் மனம் மகிழ்ச்சியடைகிறது சாய்பாபா.” என்கிறேன்.

“காலம் காலமாக என்னை வணங்கும் பக்தர்களுக்கு மட்டும்தான் நான் உதவி செய்வேன் என்றில்லை. என்னை எப்போது யார் உதவி கேட்டு நினைத்தாலும் போதும். அவர்களுக்கு நான் உதவி செய்ய வருவேன். கிருஷ்ணர் திரௌபதி  உதவும் போது அவள் அருகில் கிருஷ்ணர் இல்லை. ஆனாலும் கிருஷ்ணர் எங்கிருந்தாலும் திரௌபதிக்கு உதவி செய்தார். அதுபோல், ஆபத்தில் சிக்கிய என் பக்தர்களுக்காக நான் எங்கிருந்தாலும் விரைந்தோடி வந்து காப்பேன்.” என்று கூறி மறைந்தார் சாய்பாபா

என்று, தாம் கண்ட கனவை தன் கணவரிடம் சொல்லிய அதிர்ஷ்ராவின் மனைவி,  “எனக்கு இது வெறும் கனவாக தெரியவில்லை. உண்மையில் அப்படி நடந்தது போல இருக்கிறது. பாபா என் கையை பிடித்தபோது நிஜத்தில் பாபா அந்த கொடிய ஆத்மாவிடம் இருந்து என்னை காப்பாற்றிய உணர்வு எனக்கு இருக்கிறது. என் தலைமுடியை அந்த ஆத்மா பிடித்து இழுத்ததால் என் தலை வலிப்பது போல இருக்கிறது. அந்த கொடிய ஆத்மாவை பாபா தீயில் வீசியபோது, அந்த ஆத்மா கத்தி கதறியது இன்னும் என் காதில் ஒலிக்கிறது.  

“இந்த துஷ்ட ஆத்மாவின் பிடியில் இருந்ததால்தான் நீ இத்தனை நாள் துன்பத்திற்கு ஆளானாய். இனி உனக்கு இருக்கு வியாதி துன்பம் நீங்கி நலம் பெறுவாய்.” என்று பாபா ஆசி வழங்கினார். நான் கண்டது கனவா அல்லது நிஜமா எதுவுமே புரியவில்லை.” என்று தன் கணவரிடம் கூறிக்கொண்டு இருந்தாள்.

அப்போது மருத்துவர்கள் வந்தார்கள்.

அதிர்ஷ்டராவின் மனைவியை பரிசோதித்தார்கள். பரிசோதித்த மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள்.

“இப்போது உங்களுடைய நாடிதுடிப்பு சரியாக இருக்கிறது. இதயத்தின் துடிப்பும் சரியாக இருக்கிறது. நேற்று இரவு உங்கள் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்து. அதனால் நீங்கள் பிழைப்பது கடினம் என்று நினைத்தோம். இனி பிரச்சனையில்லை.” என்று மருத்துவர்கள் கூறி சென்றார்கள்.

ஆம்.. ஷீரடி சாய்பாபா என்கிற அந்த மகான், தன் பக்தர்களை என்றும் கைவிடமாட்டார். பக்தர்களுடைய வாழ்க்கை பாலைவனமாக இருந்தாலும் அதை சோலைவனமாக மாற்றும் ஆற்றல் ஷீரடி மகானிடம் இருக்கிறது. சாய்பாபாவே ஏசு – அல்லா- மும்மூர்த்திகள்.

எப்படி மரத்தை வேர் காக்கிறதோ, அதுபோல் பாபா நம் வாழ்க்கைக்கும் வேர் போல இருந்து காக்கிறார். எப்போதும் அவ்வாறே காப்பாற்றுவார். நாம் இக்கட்டான நிலையில் இருந்த போது, அந்த பிரச்சினையில் இருந்து விடுபட்டு இருந்தால், நிச்சயம் அது ஷீரடி சாய்பாபா என்கிற நாம் வணங்கும் மகானால்தான் காரணம். இதை எப்போது நாம் உணர வேண்டும்.  முடியாததை முடித்து வைக்கும் ஆற்றல் நம் மகான் ஷீரடி சாய்பாபாவிடம் இருக்கிறது.

இனி… அடுத்ததாக –

ஷீரடி சாய்பாபாவின் பேச்சை கேளாமல் வெளியூர் சென்ற மகல்சபாதி அனுபவித்த சம்பவம் என்ன? என்பதை தெரிந்துக்கொள்வோம்.

இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்

Feedback: editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here 

© 2011 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Oct 20 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், ஸ்ரீ சாய்பாபா வரலாறு. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech