Thursday 2nd May 2024

தலைப்புச் செய்தி :

தன் பக்தனை பாபாவின் பக்தனாக்கிய பெருமாள்

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு

பகுதி – 7

 

முந்தைய பகுதிக்கு செல்ல…

நிரஞ்சனா

ரஷ்யாவுக்கும்  ஜப்பானுக்கும் கடுமையாக போர் நடந்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் கடும் புயல் வீசியது.. இதனால் மூன்று நீராவிக் கப்பல் தவிர மற்ற எல்லா கப்பலும் புயலில் சிக்கி கடலுக்குள் முழ்கியது. எங்கு தன்னுடைய கப்பலும் கடலுக்குள் மூழ்கிவிடுமோ என்று பயந்தார் அந்த கப்பலின் கேப்டன் ஜஹாங்கீர்ஜி ப்ராமி தர்வாலா. இவர் சிறந்த பாபா பக்தர். எந்த நேரமும் மகான் சீரடி சாய்பாபா படத்தை தன் சட்டை  பாக்கெட்டிலேயே வைத்திருப்பார். தன் பாக்கெட்டில் இருந்த பாபா படத்தை எடுத்து, “பாபா.. ஆபத்தில் இருக்கிறோம். இந்த ஆபத்தில் இருந்த எங்களை காப்பாற்றுங்கள் பாபா.“ என்று கண்ணீருடன் வணங்கினார். அப்போது உடன் இருந்த வெளிநாட்டு நண்பர் ஒருவர், “ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் நடுகடல் எல்லையில் இருக்கும் நம்மை, எங்கோ ஷீரடி கிராமத்தில் இருக்கும் பாபா காப்பாற்றுவார் என்று எப்படி நம்புகிறாய்.?“ என்றார்.

“ஒரு சிவபக்தை எங்கள் ஊரில் இருந்தாள். அவளின் மகள் நிறைமாத கற்பிணி பெண். ஒருநாள் பிரசவ வலியால் அவள் துடித்து அழுத போது, அவளின் தாய் அவள் அருகில் இல்லை. இதனால் அந்த பெண்ணின் ஊரில் இருக்கும் சிவபெருமான் அந்த பெண்ணின் தாயாக வந்து பிரசவம் பார்த்து சென்றார். அதனால் அவரை நாங்கள் “தாயுமானவர்.“ என்று அழைக்கிறோம். ஒரு குழந்தைக்கு வேதனை என்றால் அதன் தாய்க்கும் அந்த வேதனை அல்லவா. அதுபோல் ஒரு பக்தனுக்கு துன்பம் என்றால் அவனின் இஷ்ட தெய்வத்திற்கும் அந்த கஷ்டம் உண்டு. அதனால் நம்மை காப்பாற்றும் ஒரே தெய்வம் நம் இஷ்ட தெய்வமாகதான் இருக்கும். நம்பிக்கை இருக்கிறது. என் சாய்பாபா நம்மை காப்பாற்றுவார்.“ என்றார் கேப்டன்.

அதே சமயம் ஷீரடியில் –

“ஓ…“ என்று கூச்சல் இட்டார் சாய்பாபா. பாபாவை தரிசிக்க வந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. சில நிமிடத்தில் பாபாவின் மீது தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. எப்படி – எங்கிருந்து இவ்வளவு தண்ணீர் வருகிறது.? என்று அதிசயித்தார்கள் பக்தர்கள். அங்கிருந்த பலர், அந்த தணணீரை ருசி பார்த்து, “இது கடல் நீர்.“ என்றனர். கடல் நீர் பக்தர்களின் கால் பாதம் அளவு நிரம்பியது. உடன் இருந்த ஷாமா, பாபாவின் உடலை துணியால் துடைத்துக்கொண்டு இருந்தார். இப்படியே மூன்று நாட்கள் இந்த அதிசயம் நடந்து கொண்டு இருந்தது. ஏன் இப்படி நடக்கிறது என்று குழம்பினார்கள் பக்தர்கள். அதை பாபாவிடம் கேட்கவும் தயக்கம்.

மூன்றாம் நாள், வெளிநாட்டில் இருந்து ஒரு கடிதம் வந்து உள்ளது என்று பாபாவிடம் ஷாமா ஒரு கடிதத்தை கொடுத்தார். அதை வாங்கிய பாபா, தன் அருகில் இருப்பவரிடம் கடிதத்தை கொடுத்து படி என்றார். அது கப்பல் கேப்டன் ஜஹாங்கீர்ஜி ப்ராமி தர்வாலா எழுதிய கடிதம். சாய்பாபாவை நலம் விசாரித்துவிட்டு, “பாபா புயல் காற்றால் பல கப்பல்கள் கடலில் முழ்கியது. கடலில் எங்கள் கப்பலும் முழ்கும் நிலைக்கு வந்துவிட்டது. என் வாழ்நாளின் கடைசியாக உங்களை பிராத்தனை செய்யலாம் என உங்கள் படத்தை வைத்து பிராத்தனை செய்தேன். அற்புதம் நடந்தது பாபா… எந்த பாதிப்பும் இல்லாமல் எங்கள் கப்பல் பாதுகாப்பாக நாடு வந்து சேர்ந்தது. எல்லாம் உங்கள் கருனைதான். உங்கள் மகிமை எனக்கு தெரியும் பாபா.“ என்று கேப்டன் ஜஹாங்கீர்ஜி ப்ராமி தர்வாலா எழுதி இருந்தார். பிறகுதான் பாபாவுடன் இருந்த பக்தர்களுக்கு புரிந்தது. மூன்று நாட்களாக அந்த கப்பலை காப்பாற்றவே பாபா போராடினார். பாபா வசிக்கும் இடத்தை கடல் நீர் கொஞ்சம் சூழ்ந்ததற்கும் அவர் உடலை கடல் நீர் நனைத்ததற்கு காரணம் இதுதான்.

மனிதர்கள் ஸ்ரீசாய்பாபாவின் மகிமையை சொன்னால் அது பக்தி நிலை. ஆனால் விஷ்ணுபகவானே, “சாய்பாபாதான் உன் இன்னல்களை தீர்ப்பார்.“ என்றால், அதன் காரணம் ஸ்ரீசாய்பாபா இறைவனின் ஓர் அம்சம். இறைவனின் மகத்துவங்களின் ஒரு வடிவம்தான் ஷீரடிசாய்பாபா என்பதே உண்மை. அந்த சம்பவத்தை பார்ப்போம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் இந்தூரில் பிறந்தவர் ரேகே. சட்டக்கல்லூரி மாணவர். இவர் பிராமண குலத்தில் பிறந்தவர். இவர் துர்க்கா தேவியையும், ஸ்ரீ மகாவிஷ்ணுவையும் வணங்கி வந்தார். ஸ்ரீமகாவிஷ்ணுவின் உருவப்படத்தில் பாலகன் துருவனும் உடன் இருப்பது போல் இருந்தது. அதனால் துருவனின் படத்தை வெட்டி எடுத்துவிட்டு, அந்த இடத்தில் தன் படத்தை வைத்தார். இதை கண்ட நண்பர்களும் உறவினர்களும், “சட்டம் படிக்கும் பையன் மாதிரியா நடந்து கொள்கிறாய்.? இது என்ன சின்னபிள்ளைத்தனம்?.“ என்று கிண்டல் செய்தார்கள்.

“இதில் என்ன இருக்கிறது.? எட்டு வயதிலிருந்தே ஸ்ரீநாராயண நாமத்தை  உச்சரித்து வருபவன் நான். என் அன்பையும் பாசத்தையும் பக்தியையும் பகவான் ஸ்ரீநாராயணனுக்கு செலுத்துகிறேன்.“ என்று கூறி வந்தார் ரேகே. ஒருநாள் ஸ்ரீமகாவிஷ்ணு ரேகேவின் கனவில் தோன்றி, “ரேகே…உன் விதியின் காரணமாக உனக்கு ஒரு பிரச்சனை வரப் போகிறது. அதனால் நீ ஷீரடியில் இருக்கும் சாய்பாபாவை சென்று வணங்கி வா. உன் வாழக்கை வேறு விதமாக மாறும் காலம் வரப்போகிறது..“ என்று கூறி மறைந்தார் ஸ்ரீவிஷ்ணுபகவான். ஷீரடி எங்கே இருக்கிறது? யார் அந்த சாய்பாபா? ஸ்ரீமகாவிஷ்ணு ஏன் அவரை சென்று தரிசிக்க சொன்னார்? எனக்கு வர போகும் பிரச்சனை என்ன? இப்படி பல கேள்விகள் ரேகேவின் மனதில் எழுந்தது. ஸ்ரீசாய்பாபாவை பற்றி நண்பர்களிடம் விசாரித்தார். பாபாவின் பெருமைகளை சொன்னார்கள். ஷீரடிக்கு புறப்பட்டார் ரேகே.

ரேகேவின் வாழ்க்கையில் பல திருப்பங்கள் வந்தன – தாங்க முடியாத துன்பத்தையும் தாங்கும் சக்தியை ஸ்ரீசாய்பாபா தந்தார்.

என்ன நடந்தது?

இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்?

 Feedback: editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here 

 © 2011 bhakthiplanet.com  All Rights Reserved

 

Posted by on Apr 28 2011. Filed under ஆன்மிகம், ஆன்மிகம், ஸ்ரீ சாய்பாபா வரலாறு. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech