Thursday 18th April 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: மருத்துவம்

கருவில் இருக்கும் குழந்தைக்கு முக்கிய தேவை அயோடின் சத்து

கருவில் உள்ள குழந்தைக்குத் தேவையான அயோடின் சத்து அதன் தாயிடமிருந்து கிடைக்காத நிலையில், பிறவிலேயே சில குறைபாடுகள் ஏற்படும். குழந்தைப் பருவத்திலேயே முறையான மூளை மற்றும் உடல் வளர்ச்சி இல்லாத நிலை போன்றவை ஏற்படக்கூடும். பிறந்த குழந்தைகளுக்குப் போதிய நினைவாற்றலும் சுய சிந்தனையும் இல்லாத நிலையுடன் தைராய்டு பாதிப்பு, பிறக்கும்போதே முன் கழுத்துக் கழலை, வளர் இளம் பருவத்தில் உள்ளவர்களுக்கு முன் கழுத்துக் கழலை, உடல் வளர்ச்சிப் பாதிப்பு, இளம் வயதில் வரும் ஹைப்போ தைராய்டிசம், மன […]

முடி உதிர்வதைத் தடுத்து. இரத்த சுத்தப்படுத்தும் முட்டைக்கோஸ்

முட்டைக்கோசைக் குறைந்த அளவில் நீரில் வேகவைக்க வேண்டும். வேகவைத்த நீரைச் சமையலில் சேர்த்தால்தான் இதன் சத்துகளை நாம் பெற முடியும். பச்சையாக உண்ணக்கூடிய கீரைகளில் முட்டைக்கோசும் ஒன்று என்றாலும், வயிற்றுப் புண்ணுள்ளவர்கள் பச்சையாகச் சாப்பிடக்கூடாது. உடல் நலத்திற்கும், உயிர்வளத்திற்க்கும் ஏற்றது முட்டைக்கோசு. நீர்ச்சளியைப் போக்க வல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டைக்கோசை அதிகமாகத் தங்கள் உணவு வகைகளோடு  சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. முக்கியமாகத் தாதுக்குறைவு ஏற்பட்டவர்கள் இதனைத் தாராளமாகச் சேர்த்தக்கொள்ள வேண்டும். உடல் பலத்திற்கும், உடல் தளர்ச்சியுற்றோருக்கும், […]

பல்வலிக்கு எளிய தீர்வு என்ன?

திடீரென்று பல் வலித்தால் கிராம்புதான் கை கண்ட மருந்து. இரண்டு கிராம்புகளை வலியுள்ள பல்லின்மேல் வைத்து சிறிது நேரம் கடித்தபடியிருந்தால் வலி நின்று போகும். அல்லது வலி குறையும். கிராம்புவை விட பல்வலிக்கு நல்ல மருந்து கிடையாது. ஆனால் இது நிரந்தரத் தீர்வாகாது. வலிக்கான காரணம் என்ன என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சையை செய்தாக வேண்டும். ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் கல் உப்பைப் போட்டு கரைத்து கொப்பளித்து வந்தால் வலி நின்றுபோகும். […]

உயர் ரத்த அழுத்தம் என்பது எது?-கட்டுப்படுத்த என்ன வழி?

இதயம் நம் உடலில் இருக்கும் ரத்தத்தை பம்ப்செய்துதான் மற்ற உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது. அப்போது இதயம் சுருங்கி விரிவதைத்தான் ரத்த அழுத்தம் என்கிறோம். இதயம் தசைகள் சுருங்கும்போது அழுத்தம் கூடுதலாக இருக்கும். அதுதான் 120 சிஸ்டோலிக் அளவு. இதயம் விரியும் போது அழுத்தம் குறைவாக இருக்கும். அதுதான் 80  டையாஸ்டோலிக் அளவு. அதாவது ஒரு மனிதனுக்கு 120/80 என்ற மில்லிமீட்டர் பாதரச  அளவு இருந்தால் அவர் நார்மல். உயர் ரத்த அழுத்தம் என்பது எது? 120/80 என்ற […]

உடல் எடை குறைய சுலபமான வழி

உடலைக் குறைக்க வேண்டும் என்று சொன்ன உடனே பலரும் நினைப்பது என்ன தெரியுமா? காலை உணவைத் தவிர்த்து விடுவது அல்லது இரவில் சாப்பிடாமல் இருப்பது என்பதுதான். ஏதாவது ஒரு வேளை உணவைத் தவிர்ப்பதன் மூலம் நாம் சாப்பிடும் உணவின் அளவு குறைந்து, அதனால் நம் உடல் எடை குறைந்து விடும் என்று நினைத்தால் இதை விடத் தவறு வேறு எதுவும் இல்லை. நிச்சயம் இந்த வழிமுறை பயன் தராது. ஏன் தெரியுமா? ஏதாவது ஒரு வேளை உணவைத் […]

தாய்ப்பால்

குழந்தை நோயின்றி வாழ சத்துக்கள் நிரம்பிய, தாய்ப்பாலே ஏற்றது. அழகு குறையும் என்பதற்காக குழந்தைக்குப் பால் தர மறுத்தால் மார்பக புற்று நோய் வந்து உயிருக்கே ஆபத்து வந்தவிடும். முதல் குழந்தைக்கு பால் கொடுக்காவிட்டால், உபயோகப்படுத்தப்படாத மார்பகம் சுருங்கி அழகும் குறைந்து அடுத்த குழந்தைக்குப் பால் சுரப்பதும் குறைந்துவிடும். தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தால் தான்  கர்ப்பப்பை சுருங்கி வயிறு குறையும். ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தாய்ப்பால் சுரக்கின்றது என்றால் தாயின் உடலிலிருந்து ஒரு லிட்டர் சத்துள்ள […]

பித்தக் கற்களை எளிதில் கரைத்து வெளியேற்றிவிடும் இளநீர்

காலையில் அருந்தும் இளநீர், சிறு நீரகங்களில் நம் உணவின் மூலம் அதிகம் சேர்ந்துள்ள கால்சிய சேமிப்பையும் மாற்றும் பித்தக் கற்களையும் எளிதில் கரைத்து வெளியேற்றிவிடும் வாய்ப்பு அதிகம். இரத்தக் கொதிப்பு நோயாளிகளையும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களையும் பக்கவாதம் தாக்காமல் பாதுகாக்க இளநீரில் அபரிதமாக உள்ள பொட்டாசியம் உப்பு உதவுகிறது. பொட்டாசியத்துடன் மக்னீசியமும் இணைந்து செயல்படுவதால் எலும்புகளும் தசைகளும் சோம்பலோ, இறுக்கமோ இன்றி புத்துணர்ச்சி பெறுகின்றன. இதனால் சுறுசுறுப்பாக மாறிவிடுகின்றோம். முக்கியமாக மக்னீசிய உப்பு மாரடைப்பு வராமல் தடுத்துவிடுகிறது. […]

வாயுப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது?

ஒரு சிலருக்கு மேலும், கீழுமாக காற்று அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருக்கும். மேலே வாய் வழியாக வெளியாகும் வாயுவைப் பற்றி பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை. மாறாக கீழே வெளியாகும் வாயு அவ்வப்போது தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடும். மூக்கு வழியாக உள்ளே சுவாசிக்கப்படும் காற்று முழுவதுமாக நுரையீரலுக்குள் செல்லும். மற்றபடி, வாய் வழியாக உள்ளே இழுக்கப்படும் காற்றின் ஒரு பகுதி நுரையீரலுக்கும் இன்னொரு பகுதி உணவுக்குழாய் வழியாக இரைப்பைக்கும் செல்கிறது. இரைப்பை என்பது, உணவு செரிமானத்துக்காக அமிலம் சுரக்கும் […]

மலச்சிக்கலை நீக்கும் அதிமதுரம், சோம்பு

பொதுவாக இயற்கை உணவுகளை உண்ணும் பழக்கமுடையவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதில்லை. மலச்சிக்கல்தான் எல்லா நோய்களுக்கும் முதல் காரணம் ஆகும். நெல்லிக்காய் தூள், கடுக்காய்த்தூள் முதலியவற்றையும் தினசரி கால் தேக்கரண்டி சாப்பிட்டு வரலாம். இரவு உணவில் இரண்டு வாழைப் பழங்களை சாப்பிடும் பழக்கம் மலச்சிக்கலை நீக்கிவிடும். இதற்கு மேலும் மலச்சிக்கல் இருந்தால் அதிமதுரம் 100gm. சோம்பு 100gm. இரண்டையும் கலந்து பவுடராக்கி காலை, மதியம், இரவு அரை தேக்கரண்டி சாப்பிட்டால் மலச்சிக்கல் மறையும். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  […]

குடல் புழுக்களை கொல்லும் பாட்டி வைத்தியம்

கை கழுவிவிட்டு சாப்பிடுங்கள் என்று எத்தனை முறை கரடியாக கத்தினாலும் சாப்பாட்டை பார்த்தவுடன் கை கழுவக் கூட அவகாசம் கொடுக்காமல் அழுக்குக் கையோடு அப்படியே சாப்பிடுவதால் வந்துத் தொலைக்கிறது வயிற்றுக் கோளாறுகள். வயிற்றுப் போக்கு, சீதபேதி தொடங்கி கொக்கிப் புழு, குடல் புழுக்கள் வரை உங்கள் அனுமதியின்றி உங்கள் வயிற்றுக்குள் வாசம் செய்ய வந்து உட்கார்ந்து கொள்வதற்குக் காரணம் அசுத்தம் தான். நீங்கள் சாப்பிடும் உணவு அசுத்தமான சூழலில் தயாரிக்கப்படிருந்தாலோ, உணவு பரிமாறும் பாத்திரங்கள் அசுத்தமாக இருந்தாலோ […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech