Tuesday 19th March 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கும்.

இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? | இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி!

bhakthiplanet freeAstrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiSri Durga Devi upasakar, V.G.Krishnarau.

Click for Previous Part

கேள்வி :  எனக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. மூன்று குழந்தைகள் உள்ளனர். என் கணவர் ஒற்றுமையாக இருப்பதில்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை. சின்ன விஷயங்களுக்கு கூட எங்களுக்குள் மோதல் ஏற்படுகிறது. பிரிவு ஏற்படுமா? அல்லது சேர்ந்து வாழ்வோமா?

-கலைவாணி

பதில் : மீன லக்கினத்தில் பிறந்த உங்களுக்கு 7-க்குரிய புதன், குருவோடு இணைந்துள்ளதால் குடும்பத்தில் பிரச்னைகள், சச்சரவுகள் வந்தாலும் பிரிய வாய்ப்பில்லை. தற்காலம் சுக்கிர திசையில், இராகு புக்தி 02.04.2016வரை இருப்பதால் சாதகமான நேரம் இல்லை. பிரதி செவ்வாய்கிழமை இராகு காலத்தில் அம்மன் கோயிலில் விளக்கேற்றி வரவும். நன்மைகள் நடக்கும்.

கேள்வி : ஐயா, கொஞ்சம் நாளாகவே படிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வியில் ஈடுபாடு இல்லாமல் உள்ளேன். எனக்கு கஷ்டமாக உள்ளது. பரிகாரம் கூறுங்கள் ஐயா.

அமுதா

பதில் : துலா இராசியில் பிறந்த உங்களுக்கு தற்காலம் ஏழரை சனி நடைப்பெற்றுக்கொண்டு இருப்பதால் கல்வியில் தடைகள் ஏற்படுகிறது. பிரதி செவ்வாய் கிழமையில் முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். கல்வி தடைகள் நீங்கும். கல்வியில் முன்னேற்றமும் தரும்.

கேள்வி : எனக்கு குரு திசை நடக்கிறது. குரு திசையில் எனது உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படுமா? ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடலாமா?

-R.ஆனந்த குமார்

பதில் : கன்னி இராசியில் பிறந்த உங்களுக்கு குரு திசையில், சனி புக்தி 06.03.2017வரை இருக்கிறது. உங்கள் லக்கினத்திற்கு விரயாதிபதி புக்தி நடைப்பெறுவதால் மார்ச் 2017வரை ஷேர் மார்கெட் விவகாரம் வேண்டாம். லக்கினத்திற்கு 10-ஆம் இடத்தில் இராகு அமைந்து குரு பார்வையும் பெறுவதால் உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

கேள்வி : மதிப்பிற்குரிய ஐயா, பொதுவாக கடக லக்னத்தில் பிறந்தவர்கள் இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? தயவுகூர்ந்து மேற்கண்ட வினாக்களுக்கு விடையளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

-sas pas

பதில் : கடக லக்கினத்தில் பிறந்தவர்கள் இரும்பு அணிகலன் அணியக் கூடாது. கடக லக்கினத்திற்கு சனி அஷ்டமாதிபதி. ஆகவே கெடுதல் செய்யும். செம்பு அணியலாம். திருஷ்டி விலக முத்து மோதிரம் வெள்ளியில் அணியவும்.

கேள்வி : வணக்கம் ஐயா, என் பிறந்த தேதி 21.08.1996. துலா இராசி, விசாகBhakthi Planet நட்சத்திரம், துலா லக்கினத்தில் பிறந்துள்ளேன். நான் என்ன படிப்பு படிக்கும் வாய்ப்பு உள்ளது?

-R.ஷண்முகப் பிரியா

பதில் : துலா லக்கினத்தில் பிறந்த உங்கள் ஜாதகத்தில், 9-ஆம் இடத்தில் செவ்வாய், சுக்கிரன் இணைந்து இருப்பதால் I.A.S., I.P.S., அல்லது பொறியியல் சம்மந்தப்பட்ட படிப்பு படிக்கலாம். புதன் 12-இல் இருப்பதால், கல்வி தடைப்பட்டு பிறகு பட்டப்படிப்பை நிறைவு செய்வீர்கள்.

கேள்வி : நான் Share market own trading செய்கிறேன். மூன்று மாதங்களாக எனக்கு தாங்க முடியாத இழப்புகள், கடன் சுமைகள் அதிகமாகி இருக்கிறது. நான் இதிலிருந்து விடுபட ஜாதக ரீதியாக ஏதாவது வாய்ப்பு உண்டா? எந்த திசையில் அமர்ந்து நான் வேலை செய்ய வேண்டும்? என்ன செய்தால் என்னுடைய கஷ்டத்திலிருந்து வெளி வரலாம்? உங்களுடைய பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

கண்ணதாசன்

பதில் : தற்காலம் உங்கள் இராசிக்கு 4-ஆம் இடத்தில் இராகுவும், 10-ஆம் இடத்தில் கேதுவும் இருப்பதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தீராத கஷ்டங்கள், நஷ்டங்களை சந்தித்து இருக்கலாம். வருகிற 28.01.2016 இராகு-கேது பெயர்ச்சிக்கு பின்னர் பிரச்னைகள் தீரும். உங்கள் ஜாதக கிரக நிலைகளின்படி ஷேர் மார்கெட் உங்களுக்கு லாபம் தராது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், எலக்ட்ரிக்கல் பொருட்கள், கார்மென்ட்ஸ், ஸ்டேஷ்னரி ஆகியவை உங்களுக்கு லாபம் தரும் தொழில்கள் ஆகும். கிழக்கு (அ) வடக்கு திசை நன்மை தரும்.

கேள்வி : ஐயா, எனக்கு எப்போது வேலை கிடைக்கும். என் எதிர்காலம் எப்படி இருக்கும்.

-K.மணிவண்ணன்

பதில் : விருச்சிக இராசியில் பிறந்த உங்களுக்கு தற்காலம் ஜென்ம சனி நடைப்பெற்றுக்கொண்டு இருப்பதால், சாதகமான நேரம் இல்லை. 26.05.2016-க்கு பின்னர் வேலை வாய்ப்பு அமையும். 26.05.2016-க்கு மேல் சுக்கிர திசையில், கேது புக்தி நடைப்பெறும். உங்களுக்கு கேது நன்மை செய்யும்.

கேள்வி :  ஐயா, எனக்கு 37 வயதாகிறது. 37 வருடங்களும் நான் மகிழ்ச்சியாக இல்லை. நிறைய பிரச்னைகள், தொல்லைகளை சந்தித்து வருகிறேன். சிலர் என்னுடைய 35 வயதில் இருந்து நன்மை நடக்கும் என்றார்கள். ஆனால் இப்போதும் அதே நிலையில் இருக்கிறேன். இதுவே நீடிக்குமா?

-E.சதீஷ் குமார்

பதில் : கும்ப இராசி, விருச்சிக லக்கினத்தில் பிறந்த உங்களுக்கு தற்காலம் புதன் திசையில், சுக்கிர புக்தி 16.03.2018வரை இருப்பதால், இந்த காலகட்டத்திற்குள் நன்மைகள் நாடி வரும். கவலை வேண்டாம். கஷ்டங்கள், தொல்லைகள் பனி போல் நீங்கி விடும். பிரதி வெள்ளிக்கிழமையில் அம்பாள் கோயில் சென்று வழிபாடு செய்து வர வேண்டும். வெற்றி கிடைக்கும்.

கேள்வி : அன்புள்ள ஐயா, உங்கள் இணையதளத்தில் கிரகங்கள், கிரக பெயர்ச்சிகள் பற்றி சிறப்பாக கணித்து எழுதுகிறீர்கள். உங்கள் பணி, மனித சமுதாயத்திற்கு வழிகாட்டியாக உள்ளது. என் ஜாதக குறிப்புகளை இணைக்கிறேன். எனக்கு தைராய்ட் பிரச்னை உள்ளது. அக்டோபர் 2012-இல் இருந்து என் தொழில் முடங்கியுள்ளது. வேலை எதுவும் இல்லாமல் மனஇறுக்கத்தில் உள்ளேன். புதிதாக தொழில் தொடங்கவும் பயமாக உள்ளது. எனக்கு நன்மைகள் நடக்குமா?

ஆசிஷ் ஆரோரா

பதில் : ரிஷப இராசி, விருச்சிக லக்கினத்தில் பிறந்த உங்களுக்கு 17.02.2016வரை சிரமமான நேரம். இதன் பின்னர் நல்ல எதிர்காலம் உண்டு. உடல்நிலையும் நல்ல முன்னேற்றம் பெரும். ரோகங்கள் தீரும், கவலை வேண்டாம். லக்கினத்திற்கு 10-ஆம் இடத்தில் புதன் இருப்பதால், தைரியமாக தொழில் தொடங்கலாம். ஏஜென்ஸி வியபாரம் உங்களுக்கு நன்மை தரும்.

கேள்வி : என் ஜாதகப்படி சொந்த வீடு, கார் வாங்கும் யோகம் உள்ளதா? என் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுமா?

-Rvm. கார்த்திகேயன்

பதில் : உங்கள் ஜாதகத்தின் கிரக நிலைகளின்படி குறிப்பாக கேதுவை, குரு பகவான் பார்வை செய்வதால் நல்ல யோக ஜாதகம். லக்கினத்திற்கு 10-இல் 5 கிரகங்கள் இருப்பதால் இது பிற்கால இராஜயோக ஜாதகம். சொந்த வீடு, வாகனம் அமையும். சுகஸ்தானத்தில் கேது உள்ளார். அலர்ஜி, வயிற்று சம்மந்தப்பட்ட பிரச்னை அவ்வப்போது இருக்கும். பயம் வேண்டாம்.

கேள்வி : எனக்கு நிரந்தரமான வேலை இல்லை. 19 ஆண்டுகளாக வருமானமும் சரியாக இல்லை. வேலை கிடைத்தாலும் ஒரு சில மாதங்கள் அல்லது ஒரு வருடமோதான் நீடிக்கிறது. பிறகு வேலை கிடைப்பதில்லை. நானும் விடாமல் முயற்சிக்கிறேன். கடவுளையும் வேண்டி வருகிறேன். எனக்கு எப்போது நிலையான வருமானத்துடன் வேலை அமையும்?

கிருஷ்ணமூர்த்தி

பதில் : மிதுன லக்கினத்தில் பிறந்த உங்கள் ஜாதகத்தில் 10-ஆம் இடத்தில் கேது இருப்பதால்தான் முயற்சிகளில் முன்னேற்றம் தராமல் இருக்கிறது. 21.11.2016வரை இராகு திசையில், செவ்வாய் புக்தி இருக்கிறது. இதற்கு பின் நல்ல எதிர்காலம் உண்டு. பிரதி வெள்ளிக்கிழமை அம்பாள் கோயில் சென்று வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் தேடி வரும்.

கேள்வி : மதிப்பிற்குரிய ஐயா, என் பெயர் C.Kumaresan எண்கணித சாஸ்திரப்படி சரியாக உள்ளதா?

C.குமரேசன்

பதில் : உங்கள் பெயர் எண் நல்ல யோகத்தை கொடுக்கும். சுயமாக உழைத்து வீடு, வாகனம் வாங்கி வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியை கொடுக்கும்.

*******

வாசகர்கள் கவனத்திற்கு: ஜாதகத்தை கணிப்பதற்கு பிறந்த தேதி விவரங்கள், பிறந்த நேரம், பிறந்த இடம் போன்றவற்றை தெளிவாக அனுப்பவும்.

ஜோதிடம் – ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

இது ஒரு இலவச சேவையாகும். விரிவான பலன்களை அறிய கட்டண சேவையை பார்க்கவும்.

உடனடியாக 3 நாட்களுக்குள் தனிப்பட்டமுறையில் உங்கள் மின்னஞ்சலுக்கு பதில் பெற கட்டண சேவை பார்க்கவும்.

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

Donate

© 2011-2015 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech