Tuesday 19th March 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கும்.

திருப்பம் தரும் நட்சத்திர மரங்கள்

நிரஞ்சனா

மரம் வளர்ப்போம் வளம் பெருவோம் என்று கூறுவார்கள். மரம் வளர்ந்தால் எப்படி வளம் கிடைக்கும்.? மரம் இருந்தால்தான் மழை வரும். நல்ல காற்று கிடைக்கும். அத்துடன் வீட்டுக்கு தேவையான ஜன்னல்கள், கதவுகள் போன்றவையும், காகிதங்கள் போன்றவையும் அதிகபட்சம் மரங்களால்தான் கிடைக்கிறது. இப்படி, மரங்கள் நம் வாழ்வோடு ஒன்றிருக்கிறது.

அத்துடன் நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை வளர்த்தால் நிச்சயம் நம் வாழ்வில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும்.

நமக்கு உகந்த நட்சத்திர மரத்தை வளர்த்தால் அது எப்படி நன்மை செய்யும்? என்று பலருக்கு சந்தேகம் எழும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வலு சேர்க்கிற ஒவ்வொரு மரம் இருக்கிறது. அந்த நட்சத்திர மரம் வளரும் போது அதனை வைத்தவர்களுக்கும் நிச்சயம் பலன் கிடைக்கும்.

பொதுவாக மரத்திற்கு அதிக சத்தி இருக்கிறது. அதனால்தான் தெய்வங்கள் தவம் செய்யும் போது, தன் ஆற்றலால் தவம் செய்யும் இடத்திற்கு மேற்கூரை அமைக்காமல் மரங்களின் நிழலில் தவம் செய்தார்கள்.

உதாரணத்திற்கு கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு புன்னை மரம்தான் தலவிருட்சம். பார்வதிதேவி, சிவபெருமானை நினைத்து புன்னைமரத்தின் நிழலில் தவம் இருந்தபோது, சிவபெருமான் அதே புன்னைமரத்தில் காட்சி தந்து அருள் புரிந்தார்.

அதுபோல ஒரு சமயம், சில முனிவர்கள் பல திருதலங்களுக்கு சென்றுவிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதிக்கு வந்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கிருந்த கரும்பு காட்டு வழியாக வந்துக்கொண்டு இருந்தபோது, அந்த கரும்பு தோட்டத்தில் இருந்த ஒரு கரும்பில் சிவபெருமான் ஒரு முனிவருக்கு காட்சி கொடுத்தார். இதை கண்ட அந்த முனிவர், “ஒம் நமசிவாய” என்று பரவசமாக குரல் எழுப்பினார்.

அந்த முனிவரை தொடர்ந்து அவருடன் வந்த மற்ற முனிவர்களும் அந்த குறிப்பிட்ட ஒரு கரும்பை பார்த்தபோது அதில் சிவபெருமான் தோன்றி இருப்பதை கண்டு  தரிசித்தார்கள். அப்போது, இந்த ஸ்தலத்தை “கரும்பேஸ்வரர்” என்று அழையுங்கள் என்று வானில் இருந்து ஒரு அசரீரி ஒலித்தது.

இப்படி இறைவன் விரும்பி வாசம் செய்யும் இடம் மரத்தின் நிழலில்தான். அதனால்தான் ஒவ்வொரு ஸ்தலத்திற்கும் ஒவ்வொரு தலவிருட்சம் இருக்கிறது.

குறிப்பாக, வேப்ப மரத்திற்கு மந்திரங்களை ஈர்க்கும் ஆற்றல் இருக்கிறது. அத்துடன் மந்திரங்களுக்கு மேலும் சக்தி கொடுக்கும் ஆற்றலும் வேப்ப மரத்திற்கு இருக்கிறது. “வேதங்கள்தான் வேப்ப மரங்களாக மாறியது” என்கிறது புராணம்.

தோஷத்தை போக்கும் நட்சத்திர மரங்கள்

நாம் பிறந்த நட்சத்திரங்களுக்கும் சில சமயம் தோஷம் ஏற்படும். ஆனால் இறைவனால் படைக்கபட்ட அனைத்துமே சக்தி வாய்ந்ததுதுான். அப்படி இருக்கும்போது, நட்சத்திரங்களும் சக்தி வாய்ந்ததாகதானே இருக்கும்? அது எப்படி பலவீனமாக மாறும்? தோஷம் பிடிக்கும்? என கேள்வி எழலாம்.

ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் தனி தனி பாதங்கள் இருக்கிறது. அதாவது, முதல் பாதம், இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம், நான்காம் பாதம் என்று பாதங்கள் இருக்கிறது. ஒருவேளை அந்த பாதங்கள் பலவீனமாக அமைந்துவிட்டால், அந்த நட்சத்திரம் நமக்கு கொடுக்க வேண்டிய நன்மைகளை கொடுக்காமல் தாமதம் செய்யும்.

அப்படிப்பட்ட அந்த தோஷத்தை போக்கும் ஆற்றல் நட்சத்திர மரங்களுக்கு இருக்கிறது. உதாரணத்திற்கு செவ்வாய்தோஷம் இருந்தால் வாழை மரத்திற்கு தாலி கட்டினால் செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் என்கிறது சாஸ்திரம்.

சரி இப்போது, உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற மரம் எது? என்பதை பற்றி தெரிந்துக் கொள்வொம்.

27 நட்சத்திரங்களுக்கு ஏற்ற மரங்கள்

அஸ்வினி – எட்டி

பரணி – நெல்லி

கிருத்திகை – அத்தி

ரோகிணி – நாவல்

மிருகசீரிஷம் – கருங்காலி

திருவாதிரை – செங்கருங்காலி

புனர்பூசம் – மூங்கில்

பூசம் – அரசு

ஆயில்யம் – புன்னை

மகம் – அல்

பூரம் – பலா

உத்திரம் – அலரி

ஹஸ்தம் – அத்தி

சித்திரை – வில்வம்

சுவாதி – மருதம்

விசாகம் – விளா

அனுஷம் – மகிழ்

கேட்டை – பிராய்

மூலம் – மரா

பூராடம் – வஞ்சி

உத்திராடம் – பலா

திருவோணம் – எருக்கு

அவிட்டம் – வன்னி

சதயம் – கடம்பு

பூராட்டாதி – தேமா

 உத்திரட்டாதி – வேம்பு

ரேவதி – இலுப்பை.

இப்படி நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும். 

ஆலயத்தில் தீபம் ஏற்றினால் அந்த தீப ஒளி நம் வாழ்க்கைக்கு வெளிச்சத்தை தரும் என்பதைபோல, நமக்கு உகந்த நட்சத்திர மரத்தை வைக்கும்போது, நம் நட்சத்திர மரம் எந்த அளவுக்கு பசுமையாக வளர்கிறதோ அந்த அளவுக்கு நம் வாழ்வில் நல்ல பல திருப்பங்கள் ஏற்படும் என்கிறது விருக்ஷ சாஸ்திரம்.

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும்  

வாஸ்து கட்டுரை படிக்கவும்  

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்  

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்விபதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

For Astrology consultation Click Here 

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

பொது அறிவிப்பு:

BHAKTHIPLANET.COM இணையதளத்தில் வெளிவரும் ஆன்மிக கட்டுரைகள் – ஜோதிட கட்டுரைகள் – வாஸ்து கட்டுரைகள் மற்றும் அனைத்து கட்டுரைகளையும் வேறு இணையதளங்களில் வெளியீடுவதற்கும் – பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்வதற்கும், புத்தகங்களாக வெளியீடுவதற்கும் அல்லது வேறு எந்த வகையில் வெளியீடுவதற்கும் BHAKTHIPLANET.COM நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக முன் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மீறினால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 N. JOTHI,

Advocate,

319. Law Chambers

Madras High Court,

Chennai – 104

 

Posted by on Aug 24 2012. Filed under Photo Gallery, ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech