Friday 19th April 2024

தலைப்புச் செய்தி :

மரம் – செடிகள் – கயிறு – நகை இவைகள் கனவில் வந்தால் என்ன பலன்

நிரஞ்சனா

தோட்டத்தில் இருப்பது போல கனவு கண்டால், இனிமையான தகவல் கிடைக்கும். அதனால் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். நட்பால் நன்மை ஏற்படும்.

பட்டு போன மரத்தை கனவில் கண்டால், சங்கடமான நிகழ்ச்சிகள் நடக்கும். கடன் கொடுத்தவர்கள் அதிகமாகவே உங்களுக்கு தொல்லையும் கொடுக்க ஆரம்பிப்பார்கள். அக்கம் பக்கம் வீடுகளால் மனசங்கடங்கள் உருவாகும்.

முள் செடியில் உங்கள் துணி மாட்டி கொண்டது போல கனவு கண்டால், பழைய பிரச்சனையில் இருந்து தப்பிப்பீர்கள். இருந்தாலும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை இது. புதிய பிரச்சனை உருவாகும். அதிலிருந்து தப்பிக்கும் வழியை தெரிந்து கொள்வீர்கள். இருந்தாலும் அந்த பிரச்சனையால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஒற்றுமையில் விரிசலும் ஏற்படும்.

செடியில் இருந்து பூக்களை பறிப்பது போல கனவு கண்டால், நல்ல பலன்கள் கிடைக்கும். நிலம் வீடு, நகை வாங்கும் யோகம் ஏற்படும். வேலையில் திருப்தியான நிலை இருக்கும். வியாதியால் அவதிப்பட்டவர்களுக்கு நல்ல மருத்துவத்தால் உடல் பிரச்சனை விலகும்.

கயிற்றை கனவில் கண்டால் என்ன பலன்  

கயிற்றை இரு கரங்களால் பிடித்து தொங்குவது போல கனவு கண்டால், விபத்துக்கள் உண்டாகும். ஆகவே பயணம் செல்லும் போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. ஆபத்தில் இருந்து உங்களை விடுபட வைக்க சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் வருவார்கள். அவர்களின் வருகை உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மேன்மையே ஏற்படுத்தும்.

கயிற்றை பிடித்து தொங்கும் போது யாராவது நீங்கள் பிடித்து தொங்கி கொண்டு இருக்கும் கயிற்றை அறுப்பது போல கனவு கண்டால், மோசமான குணம் உடையவர்களின் நட்பால் அவதிபடுவீர்கள். அவர்கள் யார் என்று தெரிந்துக் கொண்டு அவர்களின் நட்பை துண்டித்துவிடுவதன் மூலம் பாதகத்தில் இருந்து தப்பிக்கலாம். புதிய செயல் செய்யும் முன் பல முறை சிந்தித்து எச்சரிக்கையாக செய்தால் நல்லது.

நீங்கள் தண்ணீரில் தத்தளிக்கும் போது உங்களுக்கு கயிற்றை கொடுத்து யாரோ உதவுவது போல கனவு கண்டால், பெரிய லாபகரமான விஷயங்கள் நீங்களே எதிர் பார்க்காமல் நடக்கும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகளின் தடை விலகும்.

நகையை கனவில் கண்டால் என்ன பலன்  

நகை வாங்குவது போல கனவு கண்டால், புதிய தொழில் தொடங்குவீர்கள். அல்லது தொழில் விருத்தி உண்டாகும். நற்பலன்கள் தேடி வரும். மனசங்கடங்கள் நீங்கி மன நிம்மதியும், சந்தோஷமும் பெறுவீர்கள். கடனுக்காக காத்து இருப்பவர்களாக இருந்தால் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

நகையை அடமானம் வைப்பது போல கனவு கண்டால், எந்த பொருட்களையாவது விற்பீர்கள். அது அசையும் பொருட்களாகவும் இருக்கலாம் அல்லது அசையாத பொருட்களாகவும் இருக்கலாம். இருந்தாலும் குடும்பத்தின் செல்வாக்கு குறையாது.

நகை திருட்டு போவது போல கனவு கண்டால், திடீர் தனவரவு உண்டாகும். பாவ செயலில் ஈடுபடுவீர்கள். தீய சகவாசம் தெருவில் நிறுத்தும் என்பதை அறிந்து செயல்படுவது நல்லது. இறைவனை வணங்கினால் பாதகத்திலிருந்து தப்பிக்கலாம்.

காய்-கனிகள் கனவில் வந்தால் என்ன பலன்  

பழங்களை கனவில் கண்டால், சுபநிகழ்ச்சிகள் நடக்கும். லாபகரமான விஷயங்கள் தடையில்லாமல் நடக்கும். குடும்பத்தில் இழந்த நிம்மதி திரும்ப கிடைக்கும். நல்ல நிலைக்கு வரும் நேரம் வெகுதொலைவில் இல்லை என்பதை உணர்வீர்கள்.

பழங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது போல கனவு கண்டால், உங்கள் சந்தோஷத்தை பங்கு போடவே யாராவது வருவார்கள். எடுக்கும் முயற்சியில் பின்னடைவுகள் உண்டாகும். பண விஷயத்தில் ஏற்ற தாழ்வு ஏற்படும் சண்டை சச்சரவுக்கு போகாமல் இருந்தாலும் உங்களிடம் வீண் சண்டை போடவே சிலர் வருவார்கள்.

காய்களை நறுக்கவது போல கனவு கண்டால், மனதில் இத்தனை நாட்கள் வாட்டி எடுத்துக்கொண்டிருந்த சங்கடங்களும், பிரச்சனைகளும் விலகும். பெரியோர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.

பொதுவாகவே இரவு ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடத்திற்குள் பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்திற்குள் பலன் கிடைக்கும். மூன்று மணிக்கு கனவு கண்டால் ஒரு மாதத்திற்குள் பலன் கிடைக்கும். விடியற்காலையில் கனவு கண்டால் உடனே பலிக்கும். ஆனால் பகல் கனவு பலிக்காது என்கிறது கனவு சாஸ்திரம்.

சிலருக்கு கனவு கண்ட சில நாட்களிலேயே பலிக்கும். நல்ல கனவு கண்டால் மகிழ்ச்சி அடைவோம். அதுவே எதிர்மாறான கனவு கண்டால் அந்த கனவை நினைத்து நினைத்தே வேதனைப்படுவர்களும் இருப்பார்கள். அப்படி தீய கனவை கண்டவர்கள் இறைவனை  நம்பிக்கையுடன் வணங்கினால் தீய கனவுகளும் வெறும் கனவாகவே ஆகிவிடும். மொத்தத்தில் “இறைவன் ஒருவனே மிக பெரியவன்”. அவனையே முழு மனதுடன் நம்பினால் சங்கடங்கள் விலகி வாழ்நாள் முழுவதும் எதிலும் சாதிக்கலாம் – புகழ் பெறலாம்.

ஒவ்வொரு கனவுகளின் பலன்களை படிக்க கிளிக் செய்யவும் 

கனவுகளின்பலன்கள்வீடியோ– DREAMS PREDICTION Video click here

குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO     

2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்  

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும் 

வாஸ்து கட்டுரை படிக்கவும்

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jul 9 2012. Filed under கனவுகளின் பலன்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech